search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton lint"

    • ராமநாதபுரத்தில் பருத்தி பஞ்சு விலை சரிவால் கிலோ ரூ.50க்கு விற்பனை விற்பனையானது.
    • போதிய மழை இல்லாததால் சீசனில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் கண்மாய், ஊருணி பாசனத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. திருஉத்தர கோசமங்கை, சத்திரக்குடி, பரமக்குடி, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் அதிகளவில் இந்த ஆண்டு மாவட்டத்தில் பருத்தி சாகுபடி நடக்கிறது. போதிய மழை இல்லாததால் சீசனில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் வெடித்த பருத்தி தரம் குறைந்துள்ளதால் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

    மாவட்டத்தில் போதிய மழையின்றி பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் பருத்தி தரமின்றி உள்ளதுடன் பஞ்சு விலை சரிவடைந்துள்ளது. கடந்தாண்டு கிலோ ரூ.100-க்கு விற்ற பஞ்சு தற்போது ரூ.50க்கு விலை போகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் கமிஷன் மண்டியில் விற்கப் படும் பஞ்சு மொத்த வியா பாரிகள் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் அனுப்பி வைக்கப்படுகிறது. போதிய தண்ணீரின்றி பூக்கள் உதிர்ந்தும், காய்களின் பருமன் குறைந்தும் உள்ளது.

    இதனால் கடந்தாண்டு கிலோ ரூ.100-க்கு விற்ற பஞ்சு தற்போது ரூ.47 முதல் 50-க்கு விலை போகிறது. இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் மகசூல் குறைந்து எதிர்பார்த்த விலையும் கிடைக்காமல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    ×