search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jasmine flower"

    • கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது.
    • பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், கோலியான்குளம் மற்றும் மதுரை, ஊட்டி, பெங்களூரு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து இருந்தது. இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1000-க்கு கீழ் விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்தது. வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு இன்று மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    மல்லிகைப்பூ கிலோ ரூ.1800-க்கும், பிச்சிப்பூ ரூ.1100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சேலம் அரளி ரூ.230, தோவாளை அரளி ரூ.200, வாடாமல்லி ரூ.80, கோழிப்பூ ரூ.60, மஞ்சள் சிவந்தி ரூ.130, சம்பங்கி ரூ. 170, மஞ்சள் கேந்தி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்கப்பட்டது. தாமரை பூ ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது.
    • பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் பெருமளவில் அதனை வாங்கி சென்றனர்.

    நெல்லை:

    சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்கள், கோவில் திருவிழா காலங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.

    தற்போது கார்த்திகை மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மார்கழியில் சுப நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடத்த மாட்டார்கள். எனவே அடுத்ததாக தை மாதம் பிறந்த பின்னரே சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான நாளை (வியாழக்கிழமை) ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மல்லிகை பூ நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ. 1,000 உயர்ந்து கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதேபோல் பிச்சிப்பூ கிலோ ரூ.700-க்கும், ரோஜா பூ ரூ.100 முதல் 150 வரையும், கேந்தி பூ ரூ.50-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும் விற்கப்பட்டது.

    பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் பெருமளவில் அதனை வாங்கி சென்றனர்.

    • பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
    • பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும்.

    இதேப்போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்வர்.

    வியாபாரிகள் மொத்தமா கவும் பூக்கள் வாங்கி செல்வர்.

    பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். மேலும் வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

    அந்த வகையில் இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதாலும், நாளை விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனையாகின.

    ஆனால் இன்று கிலோ ரூ.1250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    1100, முல்லை கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ .250, சம்பங்கி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    இவற்றின் விலையும் நேற்றைய விட அதிகமாகும்.

    இருந்தாலும் பொதுமக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, இன்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். மேலும் நாளை விநாயகர் சதுர்த்தி. இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருந்தது.

    இதனால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளன. இருந்தாலும் பூக்களின் வரத்தும் அதிகமாக உள்ளது என்றனர்.

    • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • இதேபோல் பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேலம்:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பலர் வீட்டில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

    அப்போது விநாயகருக்கு எருக்கம் பூ, அருகம்புல் மாலையிட்டு, சுண்டல், கொழுக்கட்டை, பொரி, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவார்கள்.

    விநாயகர் சிலைகள்

    இதையொட்டி இன்று காலை முதலே சேலம் கடைவீதி, ஆற்றோரம் காய்கறி மார்க்கெட், பட்டைக்கோவில், ஆனந்தா காய்மார்க்கெட், சாலையோர கடைகள் மற்றும் அனைத்து உழவர் சந்தைகளிலும் எருக்கம் பூ மாலை, அருகம்புல், விநாயகர் சிலைகள் மீது வைக்கப்படும் அலங்கார குடைகள் மற்றும் தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன.

    வீடுகளில் வைத்து வழிபடும் சிறிய விநாயகர் சிலை முதல் பெரிய அளவிலான, பல்வேறு வடிவ சிலைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. சிலைகளின் அளவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனால் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்து ஆர்வமுடன் சிலைகளை வாங்கி செல்கின்றனர். பெரிய அளவிலான சிலைகளை மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி தங்கள் பகுதிகளில் வைத்து வழிபட கொண்டு சென்றனர்.

    பூஜை பொருட்கள்

    இதேபோல் பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பூஜைக்கு தேவையான பொருட்களான வெற்றிலை, பாக்கு, இலை, மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், அருகம்புல், விநாயகருக்கு உடுத்துவதற்கு பட்டு துணி, அலங்கார குடைகள் எருக்கம் பூ மாலை உள்ளிட்டவையும் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பிரசாதம் செய்வதற்கான பொருட்கள், பொரி, கடலை, வெல்லம் போன்ற பொருட்களை வாங்கவும் மார்க்கெட்டுகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

    இது மட்டுமின்றி பூக்கள், தேங்காய், வாழை தார் உள்ளிட்டவையும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

    மல்லிகை கிலோ ரூ.1200

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் சாமந்தி, சம்மங்கி, ரோஜா, மல்லிகை, முல்லை, அரளி உள்ளிட்ட பூ வகைகள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்குமல்லிகை-ரூ.800, முல்லை-ரூ.500, ஜாதிமல்லி-ரூ.280, காக்கட்டான்-ரூ.360, கலர் காக்கட்டான்-ரூ.360, மலைக்காக்கட்டான்-ரூ.360, அரளி-ரூ.140, வெள்ளைஅரளி -ரூ.150, மஞ்சள் அரளி -ரூ.150, செவ்வரளி -ரூ.200, ஐ.செவ்வரளி -ரூ.150, நந்தியாவட்டம் -ரூ.150, சி.நந்தியாவட்டம் -ரூ.300, சம்மங்கி -ரூ.140, சாதா சம்மங்கி -ரூ.140-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் ஆப்பிள்-ரூ.250, சாத்துக்குடி-ரூ.80, ஆரஞ்சு-ரூ.250, மாதுளை-ரூ.200, திராட்சை ரூ.100-க்கு விற்கப்பட்டது. இவை தவிர பேரிக்காய், கொய்யா சோளம் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    • சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
    • இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை இன்று உயர்ந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

    இதனை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை இன்று உயர்ந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.நேற்று 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 600 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லைப்பூ நேற்று 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 400 ரூபாயாக உயர்ந்தது.

    ஜாதிமல்லிகை கிலோ-260, கலர் காட்டன்-240, அரளி-50, சம்பங்கி100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த பூக்கள் விலை குறித்து வியாபாரிகள் கூறுகையில் இனிவரும் நாட்களில் முகூர்த்த நாட்கள் இருப்பதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாகவும் இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் இருக்கும் என்று தெரிவித்தனர்.

    • கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
    • இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    நெல்லை:

    கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த நாளில் கேரளாவில் பெண்கள் தங்களது வீடு முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்காக தமிழகத்தில் குமரி மாவட்டம் தோவாளை, நெல்லை சந்திப்பு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலர் சந்தைகளில் இருந்து அதிகளவு பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரளா மாணவ-மாணவிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் கொண்டாடுவார்கள்.

    இதனையொட்டி நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.500 வரை விற்பனையானது.

    அதே விலையிலேயே பிச்சிப்பூ விற்பனையானது. அதேநேரத்தில் பூக்களை வாங்கி கொண்டு தெருக்களில் சென்று விற்கும் வியாபாரிகள் ரூ.600 வரை விற்றனர்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இன்று காலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.600-க்கு விலை போனது. இதேபோல் சம்பங்கி மற்றும் ரோஜா பூக்கள் கிலோ தலா ரூ.200-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு பூக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது பூக்கள் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    கடந்த 2 நாட்களாக சுபமுகூர்த்த தினம் என்பதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் விலை ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.500 வரை விற்பனையாகி உள்ளது. நாளை அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

    • மல்லிகை பூக்கள் விலை ‘திடீரென’ சரிந்தது.
    • திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு.

    மதுரை

    திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் மல்லிகை பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வது வழக்கம். அதன்படி முகூர்த்த நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில் மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கிலோ 4 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படும்.

    அதுபோல் திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு. தற்போது திருவிழா காலங்கள் முடிந்ததாலும், அதிக அளவில் முகூர்த் தங்கள் இல்லாததாலும் மதுரையில் மல்லிகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

    மேலும் பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ள தால் மதுரை மாட்டுத்தா வணியில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூக்களின் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் மல்லிகை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மற்ற பூக்களான பிச்சி 200 ரூபாய்க்கும், முல்லை 250 ரூபாய்க்கும், சம்மங்கி 50 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 50 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதாலும், விற்பனை மந்தமாக உள்ளதாலும், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இன்னும் சில நாட்களில் முகூர்த்தங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை வழக்கம்போல சீராக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • பிச்சி பூக்களை பொறுத்தவரை சாலையோர கடைகளில் 100 பூவானது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது.
    • கேந்தி, சேவல் கொண்டை, சம்பங்கி, ரோஜாப்பூ உள்ளிட்டவையும் விலை உயர்ந்து காணப்பட்டது.

    தென்காசி :

    பொங்கலையொட்டி சந்திப்பு கெட்வெல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. பனிப்பொழிவால் வரத்து குறைந்ததாலும், பண்டிகை நேரம் என்பதாலும் இன்று மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

    இதனால் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.4,500 வரை விற்பனையானது. கிராமங்களில் தெரு தெருவாக விற்பனை செய்யும் பூ வியாபாரிகள் 100 பூவின் விலை ரூ.60 என்ற அளவுக்கு விற்பனை செய்தனர்.

    பிச்சி பூக்களை பொறுத்தவரை சாலையோர கடைகளில் 100 பூவானது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. இதுதவிர கேந்தி, சேவல் கொண்டை, சம்பங்கி, ரோஜாப்பூ உள்ளிட்டவையும் விலை உயர்ந்து காணப்பட்டது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    • காலை நேரங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
    • நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 முதல் ரூ‌.3,000 வரை விற்பனை ஆகிறது.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பரவலாக மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், தற்போது 2 நாட்களாக மழை பெய்யவில்லை. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது.

    ஆனாலும் காலை நேரங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். காலை 8 மணி வரையிலும் பனி மூட்டத்துடன் சாலைகள் காணப்படுவதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மார்க்கெட்டு களில் அந்த 2 பூக்களின் விலையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனை ஆகிறது.

    அதேபோல் பிச்சி பூக்கள் ஒரு கிலோ ரூ.1,250 வரை நேற்று விற்கப்பட்டது. இன்று அவற்றின் விலை ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ரோஜாப்பூ உள்ளிட்ட மற்ற பூக்களின் விலைகளில் மாற்றம் எதுவும் இல்லை.

    • நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர்.
    • தொடர்ந்து 2 நாட்கள் முகூர்த்த நாட்களாக வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். பொது மக்களும் அதிகமானோர் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

    சுபமுகூர்த்த நாட்கள்

    வழக்கமாக வரத்து குறைவின் போதும், சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களின் போதும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (12-ந் தேதி) என தொடர்ந்து 2 நாட்கள் சுபமுகூர்த்த தினங்கள் வருகிறது. இதையொட்டி இன்று பூக்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

    நெல்லையில் நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இன்று ஒரேநாளில் ரூ.1,500 உயர்ந்து பிற்பகலில் 4,500-க்கு விற்கப்பட்டது. எனினும் தேவை அதிகம் காரணமாக ஏராளமானோர் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர். இதைத்தொடர்ந்து மார்க்கெட் உள்ளிட்ட சில இடங்களில் மல்லிகை பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    நேற்று ரூ.1,000-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,800-க்கும், ஒரு கட்டு கொண்ட ரோஜாப்பூ ரூ.200-க்கும் விற்கப்பட்டது. இதுதொடர்பாக சந்திப்பு பூ வியாபாரி கூறும்போது, தற்போது பூக்களின் வரத்து சற்று குறைந்துள்ளது. மேலும் தொடர்ந்து 2 நாட்கள் முகூர்த்த நாட்களாக வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் பூக்களின் விலை கடுமையாக இன்று உயர்ந்துள்ளது. ரூ.4,500 வரை விற்கப்படும் மல்லிப்பு இன்று மாலை மற்றும் நாளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து காணப்பட்டாலும் மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூக்களுக்கு தற்போது தட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

    • இந்த மாதத்தின் முதலாவது சுப முகூர்த்த தினம் நாளை வருகிறது
    • பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரை விற்பனை ஆகிறது.

    நெல்லை:

    இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாதத்தின் முதலாவது சுப முகூர்த்த தினம் நாளை வருகிறது. இந்த நாளில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சந்திப்பு கெட்வெல் பூமார்க்கெட்டில் இன்று குறைந்த அளவு பூக்களே விற்பனைக்கு வந்துள்ளன. பூக்களின் தேவை அதிகரிப்பு காரணமாக நெல்லை மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1800 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700 முதல் ரூ.800 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் அவற்றின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரை விற்பனை ஆகிறது. தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோ விலில் உள்ள பூ மார்க்கெட் டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2500 வரை விற்பனை செய்யப்ப ட்டது.

    • கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.
    • மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக தினமும் 28 மினி வேன்கள் மூலம் மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதில் ஏறத்தாழ 20 மினி வேன்கள் அளவிலான மல்லிகை பூக்களை வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இங்கிருந்து வாங்கி செல்வது வழக்கம். பனி சீசன் நேரத்தில் பொதுவாகவே மல்லி பூ விளைச்சல் இருக்காது.

    கடந்த 10நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் அதனை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு பூ சந்தைக்கு வரும் மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து தினசரி விற்பனைக்கு வரும் ஐஸ் மல்லிகை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்ற நிலையில் இன்று விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்கப்படுகிறது. மல்லிகை பூவை தொடர்ந்து ஐஸ் மல்லிகை விலையும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மல்லிகை பூ வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    ×