search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.5 Thousand per KG"

    • நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர்.
    • தொடர்ந்து 2 நாட்கள் முகூர்த்த நாட்களாக வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். பொது மக்களும் அதிகமானோர் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

    சுபமுகூர்த்த நாட்கள்

    வழக்கமாக வரத்து குறைவின் போதும், சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களின் போதும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (12-ந் தேதி) என தொடர்ந்து 2 நாட்கள் சுபமுகூர்த்த தினங்கள் வருகிறது. இதையொட்டி இன்று பூக்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

    நெல்லையில் நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இன்று ஒரேநாளில் ரூ.1,500 உயர்ந்து பிற்பகலில் 4,500-க்கு விற்கப்பட்டது. எனினும் தேவை அதிகம் காரணமாக ஏராளமானோர் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர். இதைத்தொடர்ந்து மார்க்கெட் உள்ளிட்ட சில இடங்களில் மல்லிகை பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    நேற்று ரூ.1,000-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,800-க்கும், ஒரு கட்டு கொண்ட ரோஜாப்பூ ரூ.200-க்கும் விற்கப்பட்டது. இதுதொடர்பாக சந்திப்பு பூ வியாபாரி கூறும்போது, தற்போது பூக்களின் வரத்து சற்று குறைந்துள்ளது. மேலும் தொடர்ந்து 2 நாட்கள் முகூர்த்த நாட்களாக வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் பூக்களின் விலை கடுமையாக இன்று உயர்ந்துள்ளது. ரூ.4,500 வரை விற்கப்படும் மல்லிப்பு இன்று மாலை மற்றும் நாளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து காணப்பட்டாலும் மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூக்களுக்கு தற்போது தட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

    ×