search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rate increase"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆவின் நெய் வகைகளின் விலைகள் நேற்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • பால், நெய் விலை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

    ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணை விலையும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வெண்ணை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது.

    ஆவின் நிர்வாகம் பல்வேறு பால் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நேற்று நெய் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    நெய் விற்பனை விலை மட்டும் 3 முறை உயர்ததி இருந்தனர். இந்தநிலையில் இன்று ஆவின் வெண்ணை விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சமையல் பயன்பாட்டுக்கான உப்பு கலக்காத வெண்ணை 100 கிராம் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. 500 கிராம் வெண்ணை ரூ.250ல் இருந்து ரூ.260 ஆகவும், உப்பு கலந்த வெண்ணை 100 கிராம் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது.

    500 கிராம் 255 ரூபாயில் இருந்து ரூ.265 ஆகவும் உயர்ந்துள்ளது. அதாவது வெண்ணை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெய் உற்பத்திக்கு மூலப்பொருளான வெண்ணெய் விற்பனை விலையை கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக உயர்த்தாமல் இருந்து விட்டு, நெய் விற்பனை விலையை மட்டும் கடந்த மார்ச், ஜூலை மற்றும் தற்போது டிசம்பர் மாதம் என நடப்பாண்டின் 9மாதங்களில் மட்டும் லிட்டருக்கு 115 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். இப்போது வெண்ணை விலையையும் உயர்த்திவிட்டனர்.

    இன்று முதல் சமையல் வெண்ணை (500கிராம் விற்பனை விலை 250 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும்) மற்றும் உப்பு வெண்ணை (500கிராம் 255 ரூபாயில் இருந்து 265 ரூபாயாகவும்) கிலோவிற்கு 20 ரூபாய் உயர்த்தி அறிவித்து இந்த விலை உயர்வை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது ஆவின் நிறுவனம். இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    • இந்த மாதத்தின் முதலாவது சுப முகூர்த்த தினம் நாளை வருகிறது
    • பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரை விற்பனை ஆகிறது.

    நெல்லை:

    இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாதத்தின் முதலாவது சுப முகூர்த்த தினம் நாளை வருகிறது. இந்த நாளில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சந்திப்பு கெட்வெல் பூமார்க்கெட்டில் இன்று குறைந்த அளவு பூக்களே விற்பனைக்கு வந்துள்ளன. பூக்களின் தேவை அதிகரிப்பு காரணமாக நெல்லை மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1800 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700 முதல் ரூ.800 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் அவற்றின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரை விற்பனை ஆகிறது. தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோ விலில் உள்ள பூ மார்க்கெட் டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2500 வரை விற்பனை செய்யப்ப ட்டது.

    • கேரளா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது
    • மீன்களின் விலை குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை 

    கோவை மீன் மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் தற்போது மீன் பிடிக்க தடைக்காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டி–னம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து மட்டுமே தற்போது மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    மேலும் தமிழகத்திலிருந்து மீன்கள் கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மீன்களின் விலை குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    பெரிய வஞ்சரம் ரூ.1100க்கும், சின்ன வஞ்சரம் ரூ.900க்கும், விளமீன் ரூ.500க்கும் பாறை ரூ.550க்கும், சங்கரா ரூ.400க்கும், நெத்திலி ரூ.350க்கும், மத்தி ரூ.250க்கும்,கருப்பு வாவல் ரூ.1000க்கும், வெள்ளை வாவல் ரூ.1400க்கும், ராமேஸ்வரம் நண்டு ரூ.700க்கும், சாதா நண்டு ரூ.400க்கும், கிளிமின் ரூ.400க்கும் சாலமன்ரூ. 1100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மீன்கள் விலை உயர்வால் பொதுமக்கள் குறைந்த அளவிலான மீன்களை வாங்கி செல்கின்றனர். இது குறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் தடைக்காலம் என்பதால் தமிழகத்தில் பிடிக்கக்கூடிய மீன்களை கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் கோவை மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைவாக உள்ளது. கேரளாவில் தடைக்காலம் முடிந்த பின்னர் மீன்கள்விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • முட்டைக்கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு முட்டை உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • பல்வேறு காரணங்களால் விலை உயர்வு கட்டாயமாகிறது.

    மடத்துக்குளம் :

    முட்டைகளில் கோழிமுட்டை, வாத்துமுட்டை, காடைமுட்டை, வான்கோழிமுட்டை என பல வகை முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் கோழிமுட்டை அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இதில் பண்ணைக்கோழி முட்டைகளை விட நாட்டுக்கோழி முட்டைக்கு கூடுதல் மவுசு உண்டு. ஆனாலும் விலை அதிகம் என்பதாலும் உற்பத்தி குறைவு என்பதாலும் நாட்டுக்கோழி முட்டைகளின் பயன்பாடு குறைந்த அளவிலேயே உள்ளது.

    திருப்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பல இடங்களில் முட்டைக்கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு முட்டை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீப காலங்களாக முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் ரூ.3.65-க்கு விற்பனையான முட்டையின் விலை தற்போது ரூ.5-ஐக் கடந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.5.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை உயர்வு குறித்து முட்டை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- பொதுவாக கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். அந்த நேரத்தில் ராட்சத மின் விசிறிகள் அமைத்தும் ஈர சாக்குகளைத் தொங்க விட்டும் கோழிகளை வெப்பத்திலிருந்து பாதுகாப்போம். ஆனாலும் வெப்பத்தின் தாக்கத்தால் கோழிகளின் முட்டையிடும் திறன் குறையும். இதனால் முட்டை உற்பத்தி குறைந்து விலையேற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். தற்போது தீவனங்களுக்கான செலவு மற்றும் டீசல் விலை உயர்வால் அதிகரித்திருக்கும் போக்குவரத்துச் செலவு, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வு கட்டாயமாகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் நாமக்கல் மண்டலத்தில் நிர்ணயிக்கப்படும் முட்டை விலையை அடிப்படையாகக் கொண்டே மற்ற பகுதிகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×