search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலையம்"

    • மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்றபடி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த திட்டம்
    • மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் மாதிரி புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    மேட்டுப்பாளையம் ரெயில்நிலையம் கடந்த 1873-வது ஆண்டு தொடங்கப்பட்டது. மீட்டர்கேஜ்-அகல ரெயில் பாதைகளை உடைய மிகச்சில ரெயில் நிலையங்களில் மேட்டுப்பாளையமும் ஒன்று.

    மேட்டுப்பாளையம் - சென்னை இடையேயான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இந்த பாதை வழியாகவே கோவை வந்துசெல்கிகிறது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை தினமும் சராசரியாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை ரூ.14.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. அங்கு பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் வாகனப் போக்கு வரத்திற்காக அகலமான பாதைகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் தனி நடைபாதைகள், வாகனங்களுக்கான தனி நுழைவு, மற்றும் தனியாக வெளியேறும் வசதிகள், 2 சக்கர-4 சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக வாகன நிறுத்தம் ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளன.

    மேட்டுப்பாளையம் ரெயில்நிலைய வளாகமும் அழகுபடுத்தப்பட உள்ளது. மேலும் பிரதான நுழைவாயில், முன்ப திவு அலுவலகங்கள், காத்திருப்பு கூடம் மற்றும் கழிப்பறைகளின் உட்புறங்களும் மேம்ப டுத்தப்படுகிறது. ரெயில்கள் நிற்கும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பலகைகள் பயணிக ளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    தொடர்ந்து நடைமேடை மேற்பரப்பு மேம்படுத்தப்படுகிறது. அங்கு கூடுதலாக நடை மேடை நிழற்கூரைகள் அமைய உள்ளன. மேலும் பழைய தங்குமிடங்கள் சீரமைக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்றபடி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது என திட்டமிடப்பட்டு உள்ளது. லிப்ட், எஸ்கலேட்டர் வசதி செய்து தரவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வருபவர்களின் பாது காப்புக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகின்றன. இதுதவிர தூய்மையான குடிநீர் வசதி, மின்சார சிக்கனத்திற்காக ரெயில் நிலையத்தில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

    இத்தகைய சிறப்பம்சங்களுடன் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளது. இதற்காக அங்கு மாதிரி புகைப்படம் ஒன்றையும்தென்னக ரெயில்வே தற்போது வெளியிட்டு உள்ளது.

    • 2 சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள், குளங்கள் மாசடையும்.
    • கிராம சபைக்கூட்டத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    குமாரபாளையம் தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா எலந்தகுட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் அரசு பள்ளி உள்ளன. இந்த பகுதியில் 2 சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள், குளங்கள் மாசடையும்.

    எலந்தக்கொட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித் துள்ளனர். 

    • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
    • சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி காயிதே மில்லத் நகரில் சீர்மிகு நகரதிட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி காயிதே மில்லத் நகரில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது. காயிதே மில்லத் நகரில் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் திட்டத்தை பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு வேறு இடத்தில் அமைக்கப்படவுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் , திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி மண்டல த்தலைவர்கள் பத்மநாபன் (4-ம்மண்டலம்), கோவிந்தசாமி (3-ம்மண்டலம்) ,கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), தலைமைப்பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • ஈரோடு சிந்தன் நகரில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் ஊற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.

    ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக இன்று மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜ், மாலதி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு ஒன்று திரண்டனர்.

    அவர்கள் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில்கள் உள்ளன. திடீரென மாநகராட்சி சார்பில் குடியிருப்பு மத்தியில் பாதாள சாக்கடை கழிவுநீர்ஊற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதற்கு நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இன்று திடீரென மாநகர் சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் வந்தனர். நாங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் அவர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இருந்தாலும் போலீசார் உதவியுடன் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஊற்று நிலையம் அமைந்தால் எங்கள் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் இந்த வழியாகத்தான் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    இதனால் துர்நாற்றம், சுகாதார கெடு, நோய் தொற்று பரவ ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைக்கப்படுவதற்கு பதில் ஊரின் ஒதுக்குப்புறமாக இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×