search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Before"

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நரியனூர் காலனியை சேர்ந்த பாக்கியலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

    தர்ணா போராட்டம்

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நரியனூர் காலனியை சேர்ந்த பாக்கியலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஏழை மக்களாகிய எங்களுக்கு, குடியிருக்க வீடு இல்லாமல் மழை காலங்களில் ஒரே வீட்டில் 3, 4 குடும்பங்கள் என அடைபட்டு கிடக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பள்ளிப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமாக குண்று நிலம் அதிகமாக உள்ளது. அந்த நிலத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    இதேபோல தலைவாசல் அருகே உள்ள பெரியேரி காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் சுமார் 30 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், ரூ.1500 உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதுடன், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூர் பாகல்பட்டி கிராமம் தாசநாயக்கன்பட்டி அருந்ததிர் காலனி மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடன் உதவி கேட்டு

    சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

    சேலம் மாநகராட்சி 45-வது வார்டு பஞ்சதாங்கி ஏரி நரிக்குறவர் காலனியில் 42 வருடமாக வாழ்ந்து வருகிறோம். காலம் காலமாக எங்கள் சமுதாய மக்கள், ஊசி பாசி மணி மாலைகளை விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம்.

    எங்கள் சமுதாய மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த, அவர்களின் திறமை, தகுதிக்கேற்ப அண்ணல் அம்பேத்கார் மற்றும் தாட்கோ மூலம் கடன் உதவி அளித்து நரிக்குறவர் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    அரசும் மானிய கடன் வழங்க முன் வந்தாலும் வங்கியில் உள்ள மேல் அதிகாரிகள் மானியக் கடன் தர தயக்கம் காட்டுகிறார்கள். ஆகவே அரசு அதிகாரிகளும், எங்கள் மீது கருணை கூர்ந்து மானிய கடன் உதவி பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார்.
    • அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மா பேட்டை ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் பிரகாஷ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவரின் மகன், அப்சல் என்கிற காச்சா (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்சலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இச்சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நாமக்கல்:

    கொல்லிமலையில் உள்ள, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், கொல்லிமலை சேளூர்நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில், குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் தங்களது ரேசன் கார்டுகளை திருப்பி அளிக்க முற்பட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கொல்லிமலைப் பகுதியில் சாலைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையேற்று மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர். 

    • இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கூறும் போது:-

    கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன். இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை விட்டு விட்டனர்.

    இதனிடையே தனது மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றார். தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார். 

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • சாலை மறியலில் ஈடுபட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர்.

    சேலம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பைரோஸ்கான் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர் . ஆனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×