search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீரன் நகரில் விரைவில் புறக்காவல் நிலையம் -  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்
    X

    தீரன் நகரில் விரைவில் புறக்காவல் நிலையம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

    • தீரன் நகரில் விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
    • 17 கேமராக்கள் பொருத்தப்பட்டு பார்வையிட்டார்

    திருச்சி:

    திருச்சி மாநகர் அருகில் உள்ள தீரன் நகரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பாரதியார் மக்கள் நல சங்கம் சார்பாக முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய சாலைகள் சந்திப்புகளில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 17 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தற்போதைய நிலையில் மூன்றாவது கண்ணாக கண்காணிப்பு கேமராக்கள் விளங்குகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலே குற்றவாளிகள் நகருக்குள் வர பயப்படுவார்கள். குற்றம் நடந்தாலும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கண்காணிப்பு கேமராகளை பொருத்துவதோடு மட்டும் நின்று விடுகிறார்கள். அதை சரியாக பராமரிப்பது இல்லை. முக்கிய குற்றங்கள் நடந்த பிறகு போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும்போது, அது தற்போது செயல்படவில்லை என்ற பதில் மட்டுமே வருகிறது.

    எனவே தற்போது தொடங்கி இருக்கும் இந்த கண்காணிப்பு கேமரா பணி தொடர்ந்து பராமரித்து செயல்பட வேண்டும். தீரன் நகரில் விரைவில் சோமரசம்பேட்டை காவல் நிலையம் சார்பாக புறங்காவல் நிலையம் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் பொது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி மக்கள் தங்களையும் தங்கள் வீடுகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் .

    இந்நிகழ்ச்சியில் ஜீயபுரம் துணை கண்காணிப்பாளர் பாரதிதாசன், சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், நாச்சி குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தீரன்நகர் பாரதியார் மக்கள் நல சங்க நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×