search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scooters"

    • 57 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் அமைச்சர்கள் வழங்கினர்.
    • முதல்- அமைச்சரின் வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் 57 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 லட்சத்து 59 ஆயிரத்து 500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினர். பின்னர் அமைச்சர்கள் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களது முன்னேற் றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி மாற்றுத்தி றனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை, ெரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுயதொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சரின் வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவக்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சிந்துமுருகன், மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×