search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி - மனோ கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
    X

    வெற்றி பெற்ற மாணவிகளை படத்தில் காணலாம்

    மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி - மனோ கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

    • சங்கரன் கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு பல போட்டிகளில் வென்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் பாராட்னார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை விடுதி களில் தங்கி படிக்கும் அனைத்து மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகள் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் தென்காசியில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் சங்கரன் கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு பல போட்டிகளில் வென்றனர்.

    முதலாமாண்டு பி.பி.ஏ. மாணவி மாரியம்மாள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசையும், நீளம் தாண்டுதல் போட்டியில் 3-ம் பரிசையும் வென்றார். 3-ம் ஆண்டு கணிதவியல் பயிலும் கீர்த்திகா நீளம் தாண்டுதலில் முதல் பரிசையும், கட்டுரை போட்டியில் 3-ம் பரிசையும், 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி ஜென்சி பேச்சு போட்டியில் முதல் பரிசையும், 2-ம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம் பயிலும் காயத்ரி கட்டுரை போட்டியில் 2-வது பரிசையும், 2-ம் ஆண்டு பி. காம்., மாணவிகள் சிவப்பிரியா ஓட்டப்பந்தயத்தில் 2-வது பரிசையும், மகேஸ்வரி நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது பரிசையும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது பரிசையும் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கேடயங்களையும், சான்றிதழ்களை யும் வழங்கினார். வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளை யும் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். விடுதி காப்பாளர் ரத்னமுத்து உடனிருந்தார்.

    Next Story
    ×