search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகள்-தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
    X

    கரூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகள்-தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

    • கரூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
    • மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் காவிரி ஆற்றின் மாயனூர் கதவணை அருகே புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளான தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் குளிக்க சென்றனர்.முன்னதாக அவர் அங்கு நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர். பின்னர் போதிய இடைவேளை கிடைத்ததால் அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்றிருந்தனர்.அப்போது மாணவி ஒருவர் திடீரென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்கும் முயற்சியில் மற்ற மாணவிகள் 3 பேரும் காவிரி ஆற்றில் இறங்கினர். துரதிஷ்டவசமாக அவர்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு மாணவியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×