என் மலர்
நீங்கள் தேடியது "Nammalwar Award"
- இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
- பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:-
இந்தியாவில் நடைபெற்ற பசுமை புரட்சி, விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து விவசாயிகள் ரசாயனம் கலந்த உரங்களை தவிர்த்து, இயற்கை முறைக்கு மாற தொடங்கினர். இதனால், உணவு உற்பத்தி அதிகரித்து நாடு முழுவதும் இயற்கை வளம் செழித்தது.
இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுகள் நமக்கு மட்டுமின்றி, மற்ற நாடுகளின் பசியையும் போக்குகின்றன. எனவே நாம் விவசாயிகளை மறந்து விடக்கூடாது.
நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன்தான். உயர்கல்வி படிக்கும்போது விவசாயம் செய்து உள்ளேன். எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை முறைக்கு மாற வேண்டும்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
சிறந்த வேளாண் விஞ்ஞானியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான மறைந்த டாக்டர் ஜி.நம்மாழ்வாரின் நீடித்த பாரம்பரியத்தையும், இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் அவரது முன்னோடி பணிகளையும் முன்னெடுத்து செல்வத ற்காக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.
இந்த விருது இயற்கை வேளாண்மையை முன்னேற்ற ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவின் நிலையான விவசாய முன்னேற்றத்தையும், உலகளாவிய இயற்கை வேளாண்மைத்துறையில் அதன் வளர்ந்து வரும் இருப்பையும் ஆதரிக்கிறது.
இந்த விருது ஆண்டுதோறும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் இயற்கை வேளாண்மையில் சிறந்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.
இந்த விருது ரூ.50 ஆயிரம், தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
- விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100
திருவண்ணாமலை:
இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப் படுத்த, 2023-24-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், இயற்கை வேளாண் மையில் சிறந்து விளங்கும்.
விவசாயிகளுக்கு 'நம்மாழ்வார் விருது' வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் ஹர குமார் கூறியதாவது:-
நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், 'அக்ரிஸ் நெட்' இணையதளத்தில் வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.
விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100 ஆகும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
இதில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினத்தில் முதல் அமைச்சரால் வழங்கப்படும்.
முதல் பரிசு ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 2-ம் பரிசு ரூ.1.50 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 3-ம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய பதக்கம் வழங்கப்படும். நம்மாழ்வார் விருதுக்கான விவரம் மற்றும் விண்ணபிக்கும் வழிமுறைகளை, வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி தெரிந்து கொள்ளலாம்" என தெரிவித்தார்.
- விருதுநகரை சேர்ந்தவர்கள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் இயற்கை விவசாய சாகுபடி யில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப் படுவதோடு மண்வளத்தை யும் பாதுகாப்பது விவசாய சாகுபடியாகும்.
வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணு யிர் கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச்செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகின்றன. நுண்ணுயிர் கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால், மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
மக்களின் உடல் நலத்தை காக்கவும், மண்வளம், இயற்கை வளம் காப்பதற்கும், நீடித்த நிலையான வேளாண்மையினை உறுதி படுத்தவும் தமிழக அங்கக வேளாண்மை கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, மற்ற விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.
நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக்கட்ட ணம் ரூ.100 செலுத்த வேண் டும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டி ருக்க வேண்டும். மேலும், அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும்.
மாநில அளவில் வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்வர் வழங்க உள்ளார். முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 இலட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான வழிமுறைகள் குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.






