search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி
    X

    பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள். 

    இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி

    • வேளாண்மைக் கல்லூரி இறுதிஆண்டு மாணவிகளுக்கு கிராம அளவிலான ஊரக வேளாண்மை பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் முன்னிலையில் பூலாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
    • இதில் வேளாண் தொழில்நுட்ப அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பூலாம்பட்டி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் சாந்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    எடப்பாடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி இறுதிஆண்டு மாணவிகளுக்கு கிராம அளவிலான ஊரக வேளாண்மை பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் முன்னிலையில் பூலாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

    அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமியின் வயலில் இயற்கை விவசாயம் குறித்த இடுப்பொருட்கள் தயாரித்தல் பஞ்சகவ்யம், தேர்மோர் கரைசல், இயற்கை பூச்சி விரட்டி, வேஸ்ட் டீ கம்போஸ்ட், ஜீவாமிர்த கரைசல் தயாரித்தல் மற்றும் வெட்டி சீலியம் தயாரித்தல் பற்றிய செயல் விளக்கம் நேரில் அளிக்கப்பட்டது.

    இதில் வேளாண் தொழில்நுட்ப அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பூலாம்பட்டி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் சாந்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கங்கள், அதன் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    Next Story
    ×