என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
- சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு அனைவருக்கும் அரசு சார்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வட்டார அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் முன்னிலை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரைபாண்டியன் வரவேற்றார். இங்குள்ள தனியார் திருமண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்திருந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. அனைவருக்கும் அரசு சார்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய ஆணையர் ராணி , வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கர்ப்பினி பெண்களுக்கு பல வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திட்ட மேற்பார்வையாளர் வசந்தா, வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார திட்ட உதவியாளர் வில்லியம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்