search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young man murdered"

    • கொலை நடந்த இடத்திற்கு விஜயசாந்தி வந்தபோது எந்தவித பதட்டமும் இல்லாமல் அழுவது போன்று ஆக்டிங் செய்தார். அப்போது முதலே போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் உறுதியானது.
    • வீடியோ காலில் பிணத்தின் அருகில் நின்று கழுத்தை அறுப்பது போன்ற ரத்த வெள்ளத்தில் கிடந்த நவீன்குமாரை காட்டியபோதுதான் விஜயசாந்தி நம்பியுள்ளார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் நவீன்குமார்(35). இவர் தனியார் கடையில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்றுஇரவு தனது நண்பருடன் வீடடைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இன்று காலையில் கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் உள்ள ஒரு பாறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே குடிபோதையில் உடன் வந்தவர் நவீன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பிஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்து அவரை தேடினர்.

    கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ்(6) என்ற மகனும்,தியா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார். இதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து ேபாலீசார் நவீன்குமாரின் மனைவியிடம் விசாரித்தபோது தனது கணவரிடம் செல்போன் இல்லை என்றும், தன்னிடம் மட்டுமே செல்போன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரது செல்போனை வாங்கி யார் யாருக்கு போன் செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை விஜயசாந்தி கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து விஜயசாந்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒத்துக்கொண்டார்.

    ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவா என்ற பழனிச்சாமி(31) என்பவர் சேனன்கோட்டையில் தங்கி வேடசந்தூரில் கொலை செய்யப்பட்ட நவீன்குமாருடன் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் அடிக்கடி நவீன்குமார் வீட்டுக்கு வந்தபோது விஜயசாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து நவீன்குமாருக்கு தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். எனவே அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தனது கணவரை தீர்த்துக்கட்ட விஜயசாந்தி முடிவு செய்தார். இதனை தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். அதன்படி நேற்றிரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த நவீன்குமாரை மதுகுடிக்கலாம் என்று சிவா அழைத்துள்ளார். நன்றாக மதுகுடித்த நவீன்குமாரை கீழே தள்ளி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து விஜயசாந்தியிடம் உனது கணவரை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

    அதற்குவிஜயசாந்தி நான் நம்பமாட்டேன். வீடியோ காலில் பேசு என கூறியுள்ளார். அப்போது பிணத்தின் அருகில்நின்று கழுத்தை அறுப்பது போன்ற ரத்த வெள்ளத்தில் கிடந்த நவீன்குமாரை காட்டியபோதுதான் விஜயசாந்தி நம்பியுள்ளார். இதனைதொடர்ந்து யாருக்கும் தெரியாதது போல வீட்டிலேயே தூங்கிவிட்டார்.

    கொைல செய்த சிவா ஒட்டன்சத்திரத்தில் தங்கியிருப்பது தெரியவரவே போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். மேலும் விஜயசாந்தியையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    கொலை நடந்த இடத்திற்கு விஜயசாந்தி வந்தபோது எந்தவித பதட்டமும் இல்லாமல் அழுவது போன்று ஆக்டிங் செய்தார். அப்போது முதலே போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் உறுதியானது. இதனைதொடர்ந்து அவரது செல்போனை கேட்டபோதுதான் தான் ஏற்கனவே கள்ளக்காதலனுடன் எடுத்த புகைப்படங்களை அழிக்காமல் விட்டுவிட்டோமே என நினைத்துள்ளார்.

    போலீசார் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் விஜயசாந்தியின் கள்ளக்காதல் உறுதியானது. பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரிலேயே ஒட்டன்சத்திரத்தில் பதுங்கியிருந்த சிவாவையும் போலீசார் கைது செய்தனர்.


    • திண்டுக்கல் - பழனி ரோடு லாரிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது வாங்கி இரவு நேரங்களில் லாரிப்பேட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமர்ந்து ஏராளமானோர் மது குடித்து வருகின்றனர்.
    • குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பீதியடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் - பழனி ரோடு லாரிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது வாங்கி இரவு நேரங்களில் லாரிப்பேட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமர்ந்து ஏராளமானோர் மது குடித்து வருகின்றனர்.

    நேற்று இரவு அவர்க ளுக்குள் ஏற்பட்ட தகராறில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உருட்டு க்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், நகர் மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரிய வில்லை. கொலையாளி களும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து அப்பகுதியில் பொருத்த ப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்தும் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு கொலை சம்பவம் நடந்த நிலையில் இது வரை அவர் யார்? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை.

    திண்டுக்கல் நகரில் பல்வேறு இடங்களில் திறந்தவெளி பார்கள் செய ல்பட்டு வருகின்றன. அதே போல்தான் லாரிப்பேட்டை பகுதியிலும் இரவு 11 மணி வரை கும்பல் கும்பலாக அமர்ந்து மது குடித்து வருவது தினசரி சம்பவமாக நடந்து வருகிறது.

    இது போன்ற சம்பவங்க ளால் போதையில் தகராறு ஏற்பட்டு அவர்களுக்குள் ேமாதிக் கொள்வதும் கொலையில் முடிவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏர்போர்ட் நகரில் திறந்தவெளியில் மது குடித்த புதுமாப்பிள்ளை படுகொலை செய்ய ப்பட்டார்.

    அனுமந்தராயன்–்கோட்டையிலும், சுடுகாட்டில் மது குடித்தவர் படுகொலை செய்ய ப்பட்டார். திண்டுக்கல் பாரதிபுரம் மின் மயானம் பகுதியில் இரவு நேரங்களில் குடிமகன்கள் கும்மாளமிட்டு வரும் நிலையில் அடிக்கடி அங்கு கொலை சம்பவங்க ளும் நடந்து வருகிறது. எனவே திறந்தவெளி பார்களை போலீசார் கண்காணித்து அங்கு இரவு நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

    டாஸ்மாக் கடை அருகே பல்வேறு இடங்களில் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பீதியடைந்து வருகின்றனர்.

    ×