கிருஷ்ணகிரி அருகே இளைஞர் எரித்துக்கொலை- காதலன், காதலி கைது

மகராஜகடை பகுதியில் வேன் டிரைவர் கார்த்திக் எரித்துக்கொலை செய்யப்பட்டார். கார்த்திக்கை தனியாக வருமாறு அழைத்து இரும்பு ராடால் அடித்து கொன்றது விசாரணையில் தெரிந்தது.
கிருஷ்ணகிரி அருகே இளைஞர் எரித்துக்கொலை- காதலன், காதலி கைது
Published on

கிருஷ்ணகிரி அருகே மகராஜகடை பகுதியில் வேன் டிரைவர் கார்த்திக் எரித்துக்கொலை செய்யப்பட்டார். எரிந்த நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர்.

கடந்த ஞாயிறன்று கார்த்திக் என்ற இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தினேஷ், அவரது காதலி புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தினேஷ்குமார் அளித்த வாக்குமூலத்தில், தனது காதலிக்கு தொந்தரவு கொடுத்ததால் கார்த்திக்கை கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.

காத்திக்குடனான காதலை முறித்து கொண்டு தினேஷ்குமாரை புவனா காதலித்து வந்த நிலையில் மீண்டும் தொந்தரவு செய்ததால் கொலை செய்துள்ளார்.

கார்த்திக்கை தனியாக வருமாறு அழைத்து இரும்பு ராடால் அடித்து கொன்றது விசாரணையில் தெரிந்தது. கொலை செய்த பின்னர் கார்த்திக் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து மகராஜகடை பகுதியில் வீசி சென்றதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com