search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை - போலீசார் புகார் மனுவை விசாரிக்கவில்லை என புகார்
    X

    கிணற்றில் குதித்த திருநங்கையை மீட்கும் தீயணைப்புத்துறையினர். 

    சாத்தான்குளம் அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை - போலீசார் புகார் மனுவை விசாரிக்கவில்லை என புகார்

    • சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்தவர் செல்வி திருநங்கை
    • நீதிமன்றம் மற்றும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது45). திருநங்கையான இவரது தம்பி முத்துக்குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை தாக்கியது தொடர்பாக புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து செல்வி , சாத்தான்குளம் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிபதி, போலீசாருக்கு பரிந்துரைத்தார். ஆனாலும் போலீசார் விசாரிக்காததால் செல்வி, நீதிமன்றம் மற்றும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் சாத்தான்குளம் கோர்ட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் செல்வி திடீரென குதித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×