சாத்தான்குளம் அருகே வெடித்து சிதறிய ஏ.சி. - உயிர் தப்பிய குழந்தை

வீட்டின் அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஏ.சி.யை ஆஃப் செய்த சிறிதுநேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.ஏ.சி. வெடித்து தீப்பற்றியதும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே வெடித்து சிதறிய ஏ.சி. - உயிர் தப்பிய குழந்தை
Published on

தூத்துக்குடியில் வீட்டில் திடீரென ஏ.சி. வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளையில் வீட்டின் அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஏ.சி.யை ஆஃப் செய்த சிறிதுநேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அறையில் ஏ.சி. வெடித்து தீப்பற்றியதும் உடனடியாக நீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

நல்ல வேளையாக அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது குழந்தை உயிர் தப்பியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com