என் மலர்
நீங்கள் தேடியது "ராஜபாளையம்"
- சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர்.
- நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் வனப்பகுதியில் தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பணியில் இருந்த காவலாளிகளான பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகிய இருவரையும் வெட்டிக்கொலை செய்தனர். மேலும் அங்கிருந்த உண்டியலை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். இதில் தேவதானத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 25) என்பவரிடம் நடந்த விசாரணையில் காவலாளிகளை கொன்று உண்டியலை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவருடன் சேர்ந்து முனியாண்டி (30) என்பவரும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதற்கிடையே இன்று காலை 6 மணி அளவில் சேத்தூர் அருகே உள்ள அசையாமணி விலக்கில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை ஆஞ்சநேயர் கோவில் அருகே கொள்ளையடித்த பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக நாகராஜ் கூறினார். அதனை கைப்பற்றுவதற்காக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கல்லணை பகுதிக்கு சென்றனர்.
அங்கு சென்றவுடன் புதைத்து வைத்திருந்த இடத்தின் அருகே நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார். உடனே அருகில் இருந்த இன்ஸ்பெக் டர் ரமேஷ் கண்ணா, நாகராஜின் வலது முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டார். இதில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நாகராஜ் ஆகிய இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். கோவிலில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான முனியாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மர்ம நபர்கள் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர்.
- அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேவதானம் கிராமம்.
இங்கு தென்மாவட்ட பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக போற்றப்படும் தவம்பெற்ற நாயகி சமேத நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. பொதுவாக பஞ்சபூத கோவில்களாக திகழும் காஞ்சிபுரம், காளகஸ்தி, திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகியவற்றை ஒரே நாளில் தரிசனம் செய்ய முடியாது.
ஆனால் தென் மாவட்டங்களில் உள்ள சங்கரன்கோவில், தாருகாபுரம், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய ஊர்களில் உள்ள பஞ்சபூத கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கலாம் என்பதால் இந்த ஸ்தலங்களுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் வந்து தரிசனம் செய்வார்கள்.
சேத்தூர் ஜமீன்தார் வம்சத்தினர் பரம்பரையாக கோவிலை நிர்வகித்து வந்த நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஜமீன்தார் வம்சத்தினர் அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள். இக்கோவில் தினமும் காலை 6.30 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 7.15 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பல நூற்றாண்டுகளை கடந்த இந்த கோவிலில் தற்போது பகல் நேர காவலாளியாக மாடசாமி என்பவரும், இரவு காவலாளிகளாக தேவதானம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 50), சங்கரபாண்டியன் (65) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மிகப்பெரிய மதில் சுவர்களை கொண்ட கோவிலில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
நேற்று இரவு கோவிலுக்கு வந்த காவலாளிகள் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்பகுதியில் தங்கள் பணியை தொடர்ந்தனர். இதற்கிடையே நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கோவிலுக்கு முன்பாக இரண்டு கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே காவலாளிகள் இருவரும் கதவை திறக்காமல் அதன் அருகே நின்று கொண்டு சத்தம்போட்டு கேட்டுள்ளனர். ஆனால் வெளியில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இதற்கிடையே அந்த கார்களில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் முதலில் கோவிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை கட்டைகளால் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் தென்பக்கமாக உள்ள தூண்கள் வழியாக ஏறி கோவில் வளாகத்திற்குள் குதித்துள்ளனர். அவர்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரும் யார் நீங்கள், வெளியே செல்லுங்கள் என்று கூறியவாறு அருகில் சென்றுள்ளனர்.
ஆனால் மர்ம நபர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர். அதனை காவலாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கோவில் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் அவர்களது உடல்களை கொள்ளையர்கள் தரதரவென்று இழுத்து சென்று இரண்டு மூலைகளில் வீசியுள்ளனர். அத்துடன் உண்டியல்களையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் மூலஸ்தானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, தவம்பெற்ற நாயகி அம்பாள் ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, ஐம்பொன் விக்கிரகங்களும் கொள்ளை போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று காலை 6 மணியளவில் பகல் நேர காவலாளியான மாடசாமி பணிக்கு வந்துள்ளார். அப்போது கோவில் கதவுகள் திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, காவலாளிகள் மாடசாமி, சங்கரபாண்டியன் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து உறைந்து போனார்.
உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் கொலையுண்டு கிடந்த காவலாளிகள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலையுண்டவர்களின் ரத்தக்கறை உறைந்திருந்த நிலையில் இச்சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.
மேலும் கொள்ளையர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் 2 காவலாளிகளை கொன்று பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
- காவலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் உண்டியலும் சேதமடைந்துள்ளது.
- உண்டியல் திருட்டை தடுக்க முயன்றபோது காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே காவலர்கள் 2 பேர் கோவிலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து (50), சங்கர பாண்டியன் (65) ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காவலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் உண்டியலும் சேதமடைந்துள்ளது.
உண்டியல் திருட்டை தடுக்க முயன்றபோது காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
- விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அந்த கட்சியின் முதன்மை செயலாளராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீரென்று அறிவித்தார். இதனால் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது. ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் ராஜினாமாவை துரை வைகோ வாபஸ்பெற வேண்டும், இயக்கத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், செட்டியார்பட்டி செயலாளர் நாகப்பன், சேத்தூர் செயலாளர் அயனப்பன், ராஜபாளையம் ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருநெல்வேலி ரோட்டில் முறம்பு பகுதியிலும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- ராஜபாளையம் அருகே கூட்டுறவு விவசாய பண்ணை சங்கம் சார்பில் சிமெண்டு களம்-குடோன் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கூட்டுறவு விவசாய குத்தகைதாரர் பண்ணை சங்கம் சார்பில் சிமெண்ட் களம் மற்றும் குடோன் திறப்பு விழா நடந்தது.
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நெல் களஞ்சியம் என்ற பெயரில் சிமெண்டு களத்தை தனுஷ் குமார் எம்.பி. தலைமையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கல்வெட்டை ராஜபாளையம் யூனியன் தலைவர் சிங்கராஜ் திறந்து வைத்தார்.
கூட்டுறவு விவசாய பண்ணை சங்க தலைவர் மிசாநடராஜன் வரவேற்றார். பெரியகுளம் கண்மாய் தலைவர் கலைச்செல்வன், வாண்டையார்குளம் கண்மாய் தலைவர் கண்ணன் உள்பட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், தேவதானத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள் முதல் நிலையத்தை இந்த சிமெண்டு களத்திற்கு மாற்றுவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார். கூட்டுறவு சங்க துணை தலைவர் காசி நன்றி கூறினார்.
இயற்கை ஆர்வலர் தலைமலை, சேகர், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மாசானக் காளை, கிருஷ்ணாபுரம் கவுன்சிலர் காமராஜ், நக்கனேரி கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் 20-ந்தேதி முதல் மூடப்படும்.
- அரசு ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை ரூ.2.90 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 20-ந்தேதி முதல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.
கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை மேம்ப டுத்துவதற்காக தமிழக அரசு ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு வணிக வளாகத்துடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்குவதால் கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்காமல் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு பஸ் மேனேஜர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் செங்கோட்டை, தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் புதிய பஸ் நிலையம் சென்று ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் வெளிப்புறம் மதுரை செல்லும் பயணிகளை ஏற்றி செல்லவும், அதேபோல் மதுரை, தேனியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் டி.பி மில்ஸ் சாலை வழியாக ரயில் நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு ெரயில்வே பீடர் சாலை வழியாக செல்லவும், சத்திரப்பட்டி பகுதியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் புதிய பஸ் நிலையம் செல்ல வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதியிடம் கேட்டபோது, இன்று பழைய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் செல்வது நிறுத்தப்படவில்லை. வருகிற 20-ந்தேதி முதல் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்ல அனுமதிக்க மாட்டாது. அன்று முதல் மேற்குறிப்பட்ட முறையில் பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றார்.
- ராஜபாளையம் மில்லில் தொழிலாளி திடீர் இறந்தார்.
- இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 45). இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்துவந்தார். சம்பவத்தன்று இரவு பணிமுடிந்து ஓய்வறையில் சென்று தூங்கியுள்ளார்.
காலையில் வெகுநேரமாகியும் பூமிநாதன் எழாமல் இருந்ததால் சக ஊழியர்கள் எழுப்பிப்பார்த்துள்ளனர். ஆனால் அவர் எழாததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூமிநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
- கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் கொடுத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கீழராஜகுலராமன் வருவாய் ஆய்வாளர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது இறந்து கிடந்தவர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ராஜபாளையத்தில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி இன்று மாலை தொடங்குகிறது.
- நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் இன்று (20-ந் தேதி) மாலை முதல் தொடங்குகிறது.
ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மாலை 4 மணியளவில் கபடி போட்டிகள் தொடங்குகின்றன.
நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார். ராஜுக்கள் கல்லூரி செயலாளர் சிங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு கபடி போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர்.
கே.எஸ்.ஆர். பஸ் சர்வீஸ் அதிபர் பிரகாஷ் சங்கர், அர்ஜுனா விருது பெற்ற வீரர் கணேசன், கலால்துறை கண்காணிப்பாளர் கனிமுத்து குமரன், மதுரை வல்லத்தரசு ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனிமுத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்த போட்டிகளை காவல்துறை அணி உள்பட 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
- மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
- தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது38). இவருக்கு மகேஷ் என்ற மனைவியும், இன்பராஜ், அழகுராஜா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
மாரியப்பன் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவும் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்தார்.
மாரியப்பன் வேலை பார்க்கக்கூடிய மாந்தோப்புக்கு அருகில் மற்றொரு நபரின் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக, தோட்டத்தின் உரிமையாளர் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது.
இதனை அறியாத மாரியப்பன், அந்த தோட்டத்திற்குள் இரவு நேரத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மாரியப்பன் தெரியாமல் மிதித்து விட்டதாக தெரிகிறது.
இதனால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மின்வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை இன்று காலை தோட்டத்துக்கு சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து அவரது உடலை போலீசார் அங்கிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் இறந்து கிடந்த தோட்டத்தில் உரிமையாளர் அனுமதி பெற்று மின்வேலி அமைத்திருந்தாரா அல்லது அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக அமைத்து உள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் மாரியப்பன், தான் வேலை பார்த்த தோட்டத்திலிருந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு இரவு நேரத்தில் சென்றது ஏன்? என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
- குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மாட சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் லட்சுமி (வயது 25). இவருக்கும், கணவர் முருகானந்தத்திற்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பொன் லட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் தனது 4-வயது மகள் கவிபாரதியுடன் மாயமானார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.
- ராஜபாளையத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சமந்தபுரம் காஜியார் மினி ஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் லீவா உதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சையது இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் முகமது பிலால் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செய்யது அலி பாதுஷா வரவேற்று பேசினார். நகரத் தலைவர் முகமது ரபிக் மிஸ்பாகி, மாநில தொழில் நுட்ப இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், மண்டல ஒருங்கிணைப்பாளர் அவ்தா காதர் வாழ்த்தி பேசினார்கள். மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபூபக்கர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் லீவாவுதீன் மாவட்ட தலைவராகவும், சையது இப்ராஹிம் மாவட்ட செயலாளராகவும், முகமது பிலால் மாவட்ட பொருளாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜபாளையம் காதர் மைதீன், முகமது அபூபக்கர், பார்கவி தேர்ந்தெடுக்கப் பட்டனர். பொது சிவில் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பது எனவும், மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. அரசை கலைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காதர்மைதீன் நன்றி கூறினார்.






