என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி திடீர் சாவு
- ராஜபாளையம் மில்லில் தொழிலாளி திடீர் இறந்தார்.
- இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 45). இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்துவந்தார். சம்பவத்தன்று இரவு பணிமுடிந்து ஓய்வறையில் சென்று தூங்கியுள்ளார்.
காலையில் வெகுநேரமாகியும் பூமிநாதன் எழாமல் இருந்ததால் சக ஊழியர்கள் எழுப்பிப்பார்த்துள்ளனர். ஆனால் அவர் எழாததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூமிநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






