search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவர் கைது
    X

    கைது செய்யப்பட்ட செல்வன் விக்டர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள்.

    நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவர் கைது

    • நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள அகப்பைக்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செ ய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவி ரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அதில் கார் டிக்கியில் 110 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், காரின் உரிமை யாளரான அகப்பைகுளம் 1-வது தெருவை சேர்ந்த செல்வன் விக்டர் (வயது58) என்பவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×