search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness Cycle Rally"

    • பேரணியானது நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.
    • இதனைத் தொடர்ந்து மர்காஷிஸ் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாசரேத்:

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை மற்றும் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியானது நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.சேகர குரு ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் செல்வின், தலைமை ஆசிரியர் எட்வர்ட், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உபத்தலைவர் தமிழ் செல்வன், நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியிலிருந்து புறப்பட்டு பஸ் நிலையம், சந்தி பஜார் வழியாக சென்று மர்காஷியஸ் கல்லூரி வந்து அடைந்தது.

    நிகழ்ச்சியை திருமண்டல தொடர்புத்துறை செயலர் பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். பேரணியில் தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனர் ஜாண் சாமு வேல், நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரி தாளா ளர் செல்வின், முன்னாள் மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி மேலாளர் ஆனந்த ஜோதிபாலன், அருள்மணி, முன்னாள் நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ், உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் மற்றும் நாசரேத் பகுதி பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து மர்காஷிஸ் கல்லூரி வளாகத்தில மரக்கன்றுகள் நடப்பட்டன. தூய யோ வான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட் நிறைவு ஜெபம் செய்தார்.

    ஏற்பாடுகளை நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எபனேசர், செயலர் சாமு வேல்ராஜ், தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனரும்,தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிச னைத்துறை செயலருமான ஜாண்சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    ×