search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "environmental"

    • பேரணியானது நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.
    • இதனைத் தொடர்ந்து மர்காஷிஸ் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாசரேத்:

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை மற்றும் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியானது நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.சேகர குரு ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் செல்வின், தலைமை ஆசிரியர் எட்வர்ட், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உபத்தலைவர் தமிழ் செல்வன், நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியிலிருந்து புறப்பட்டு பஸ் நிலையம், சந்தி பஜார் வழியாக சென்று மர்காஷியஸ் கல்லூரி வந்து அடைந்தது.

    நிகழ்ச்சியை திருமண்டல தொடர்புத்துறை செயலர் பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். பேரணியில் தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனர் ஜாண் சாமு வேல், நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரி தாளா ளர் செல்வின், முன்னாள் மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி மேலாளர் ஆனந்த ஜோதிபாலன், அருள்மணி, முன்னாள் நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ், உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் மற்றும் நாசரேத் பகுதி பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து மர்காஷிஸ் கல்லூரி வளாகத்தில மரக்கன்றுகள் நடப்பட்டன. தூய யோ வான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட் நிறைவு ஜெபம் செய்தார்.

    ஏற்பாடுகளை நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எபனேசர், செயலர் சாமு வேல்ராஜ், தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனரும்,தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிச னைத்துறை செயலருமான ஜாண்சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    வீ. கே.புதூர்:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்து  மஞ்சள் வண்ண துணிப்பையுடன் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.  

    6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அமைந்த பதாகைகளுடன்  பேரணியில் பங்கு பெற்றனர். விழிப்புணர்வு பேரணியானது  குற்றாலம் ஐந்தருவி புறவழிச்சாலையில் தொடங்கி பாரத் மாண்டிசோரி பள்ளி வழியாக குற்றாலம், செங்கோட்டை, இலஞ்சி சந்திப்பு சாலையில் நிறைவு  பெற்றது. 

    இப்பேரணியில்  மாணவர் ஸ்ரீஜித் மாசுக்கட்டுப்பாடு குறித்து உரையாற்றினார்.  ஆசிரியர்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் இப்பேரணியில் பங்கேற்றோரைப்   பாராட்டினர்.
    பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுத்து பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தருமபுரி

    தருமபுரி - சேலம் மெயின் ரோடு ஒட்டப்பட்டியில் தொழில் மையம் இயங்கி வருகிறது. இந்த தொழில் மையத்தில் பட்டு நூல் தயாரிக்கும் தொழிற்சாலை, பைப், சின்டெக்ஸ் டேங்க் தயாரிக்கும் தொழிற்சாலை, உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை என சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ப்பு நிறுவனமான (சிப்கோ) கிளை அலுவலகம் இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இந்த தொழிற்சாலைகளில் இருந்து கழிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக காணப்படுகிறது. இதனை அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ப்பு நிறுவனமான (சிப்கோ) கிளை அலுவலகம் அருகிலேயே எரிக்கச் செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மாசு புகையினால் மிகுந்த அவதிப்படுகின்றனர். மேலும், இதனால் நோய் பரவும் நிலை ஏற்பட உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே உள்ளனர்.

    எனவே, உரிய நிர்வாகத்தினர் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுத்து பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காது. பிளாஸ்டிக் பைகள் தரையில் வீணாக கிடந்து, பெய்யும் மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுக்கின்றது. இதனால் மழைநீர் மண்ணுக்குள் இறங்காமல் ஓடி வீணாகின்றது. தற்போது அனைத்து தேவைகளுக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. இது தவறானதாகும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, அனைத்து தேவைகளுக்கும் துணிப்பைகளை பயன்படுத்த முடியும்.

    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட்டு தங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் துணிப்பைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் தூய்மையான காற்று மற்றும் சுற்றுச்சூழல் கிடைக்கும்.

    மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி நமக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றன. மரங்கள் அழிந்தால் மனித இனமும் மற்றும் விலங்கினங்களும் சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். பூமி வெப்பமயமாகி மழை பெய்யாத நிலை ஏற்படும்.

    எனவே சுற்றுச்சூழலை மேம்படுத்த மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். மாணவ, மாணவிகள் தாங்கள் வைக்கும் மரங்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்கள் வைத்த மரங்களுக்்கும் நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். தான் வைத்த மரக்கன்றானது சில ஆண்டுகளுக்கு பிறகு, மரமாக வளர்ந்து நிற்பதை பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியானது எதனுடனும் ஒப்பிட முடியாததாகும். இந்த ஆர்வத்தை மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கதைகள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரவேண்டும்.

    நமது வீடுகளில் கட்டிடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், மரங்களை வெட்டாமல் வீடுகட்டும் முயற்சியை மேற்கொள்ள மாணவ, மாணவிகள் பெற்றோரை வற்புறுத்த வேண்டும். மேலும் வீடுகளில் துளசி செடி உள்ளிட்ட ஆக்சிஜன் அதிகம் வழங்க கூடிய, செடி வகைகளையும் வளர்த்து வீட்டில் பசுமை சூழலை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் பள்ளி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    மேலும் அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளையும், ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் துளசி செடிகளையும் வழங்கினார். உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதை நெல் கண்காட்சியினையும், பிளாஸ்டிக் கழிவுகளால் மாணவ, மாணவிகளால் படைக்கப்பட்டிருந்த படைப்புகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அருளரங்கன், பள்ளி தலைமையாசிரியர் மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×