search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holy yovaan cathedral"

    • தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 19-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை நடைபெற்றது.
    • விழாவில் ரூ.12லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    நாசரேத்:

    தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 19-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை கடந்த 22-ந்தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது.

    நேற்று முன்தினம் மாலையில் திருச்சபைகளின் கலைநிகழ்ச்சிகள் நாசரேத் தூயயோவான் கதீட்ரல் வளாகத்தில் நடைபெற்றது. நேற்று காலையில் ஸ்தோத்திரப்பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நாசரேத் கதீட்ரலில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிரதமப் பேராயரின் ஆணையாளரும், கோவை திருமண்டல பேராயருமான தீமோத்தேயு ரவீந்தர் அருட்செய்தி வழங்கினார். ஆராதனை முடிந்ததும் கதீட்ரல் வளாகத்தில் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

    நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார்.

    விழாவில் ரூ.12லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நற்செய்தி அருட்பணித்துறை, சிறுவர் ஊழியம், வாலிபர் ஊழியம், பெண்கள் ஐக்கிய சங்கம், சமூக நலத்துறை, ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், சுற்றுச் சூழல் துறை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகள் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல கல்வி நிறுவனங்களின் மேலாளர்கள், தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சபைமன்றத் தலைவர்கள், சேகரத் தலைவர்கள் குருவானவர்கள் மற்றும் திருமண் டல நிர்வாகிகள், திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×