search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People Relations Camp"

    • புறையூர் ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது
    • முகாமில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட மொத்தம் 111 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புறையூர் ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திற னாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இயற்கை மரண உதவி தொகை, வேளாண் கருவிகள், இடுபொருட்கள் என மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ. 29 லட்சத்து 51 ஆயிரத்து 432- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

    முகாமில் திருச்செந்தூர் வருவாய் ஆர்.டி.ஓ. புகாரி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், வேளாண் இணை இயக்குநர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ், சமூக நல அலுவலர் ரதிதேவி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், ஏரல் தாசில்தார் கைலாசகுமாரசாமி, தனி தாசில்தார் பேச்சிமுத்து, புறையூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வக்கு மார் மற்றும் பல்வேறுதுறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×