search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    காயல்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    • காயல்பட்டினம் ஓடக்கரை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்
    • வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்ற நிலையில் மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் ஓடக்கரை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 62). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இவர்களில் மணிகண்டன் (21) சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    நேற்று அவரது வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்ற நிலையில் மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×