search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை: அரசு பஸ்களின் அவலநிலையால் பயணிகள் அவதி
    X

    மதுரை: அரசு பஸ்களின் அவலநிலையால் பயணிகள் அவதி

    • மதுரையில் அரசு பஸ்களின் அவலநிலையால் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • சாதாரண கட்டண ேபருந்தை அதிகளவில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மதுரை

    தென் மாவட்டங்களில் முக்கிய நகரமாக விளங்கும் மதுரைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் செல்ல போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.

    இதேபோல் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் அரசு பஸ்சில் வந்து செல்கின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.

    மதுரையில் இருந்து இயக்கப்படும் பல டவுன் பஸ்களில் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 60 சதவீத பஸ்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அந்த பஸ்களிலும் பயணிகள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.

    ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.

    பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.

    தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்களை ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது.

    மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிர், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

    Next Story
    ×