search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்
    X

    பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்

    • மதுரையில் பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கின்றன.
    • இதனால் பெண்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் 16 பணிமனைகளில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக 960 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 125-க்கும் மேற்பட்டவை பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள் ஆகும். மாணவ- மாணவிகள் உரிய அடையாள அட்டையுடன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய இயலும்.

    மதுரை மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக 635 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு பஸ்களை கட்டாயம் நிறுத்திச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் இது கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது;-

    பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் அதிகாலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் பஸ் நிறுத்தத்தில் கால் கடுக்க காத்து இருக்கின்ற னர். ஆனாலும் அங்கீக ரிக்கப்பட்ட நிறுத்தங்களில் பெரும்பாலும் பஸ்கள் நிற்பது இல்லை. பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு தான் நிறுத்தப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவி கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப் போய் தான் பஸ்களில் ஏறி பயணம் செய்ய முடிகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள், பஸ் நிறுத்தங்களில் நிற்பதே இல்லை.

    பஸ் நிறுத்தங்களில் காத்து இருப்பவர்கள், காசு கொடுத்து பயணிக்கட்டும் என்று டிரைவர், கண்டக்டர்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் பெரும்பாலும் பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்துவது இல்லை. எனவே மாணவிகள் நிறுத்தம் தாண்டி நிற்கும் பஸ்களில் ஓடிச்சென்று ஏறி பயணம் செல்வதை பார்க்க முடிகிறது. மதுரை மாநகர பஸ்சில் பயணித்த சிறுவன் ஒருவன், கடந்த சில மாதத்துக்கு முன்பு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    எனவே மதுரை மாநகரில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அப்படி செய்தால் அரசு பஸ்களில் கூட்டம் அலை மோதுவது குறையும்.

    குறிப்பாக காளவாசல் பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் எந்த பஸ்களை யும் முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க செய்வது இல்லை. கண்ட இடத்தில் பஸ்களை நடுவழியில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    காளவாசல் சிக்னல் பகுதி முக்கிய சந்திப்பாக இருப்பதால் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வு காண்பதை விட்டு விட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆம்புலன்சு வாகனங்கள் அதிக நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறது.

    அடுத்தபடியாக இலவச பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம், ஒரு சில கண்டக்டர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அசிங்கமாக பேசுகின்றனர். பள்ளிக்கூட மாணவ- மாணவிகளை தரக்குறை வாக பேசுகின்றனர். ஆனா லும் இதனை சகித்துக் கொண்டு பொதுமக்கள் வேறு வழியின்றி அரசு பஸ்களில் பயணம் செய் வதை பார்க்க முடிகிறது.

    ஆரப்பாளையத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்ற கல்லூரி மாணவி ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்து கைதான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

    எனவே அரசு பஸ்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சுய ஒழுங்கை கடைப்பிடிப்பது அவசியம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக வட்டாரத்தில் கூறியதாவது:-

    அரசு பஸ்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் என்று டிரைவர்- கண்டக்டர்களுக்கு அறி வுறுத்தி உள்ளோம். பயணிகளிடம் கனிவாக பேசும் படியும் வலியுறுத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை- மாலை நேரங்களில் கூடுத லாக பஸ்கள் இயக்கப்படு கின்றன. பள்ளிகூட மாணவ-மாணவிகளுக்கு தனியாக பஸ் இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×