search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயம்பேடு"

    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்
    • இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

    புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நகார்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 605 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும். 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம்.
    • எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கோயம்பேடு மட்டுமின்றி போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகளில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது. 

    • சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி.
    • பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது.

    மனுவில், பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    மேலும் இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சென்னை மாநகரில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
    • பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோயம்பேட்டில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட விருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    கோயம்பேடு பஸ் நிலையத்தின் மொத்தப்பரப்பு 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி ஆகும்.


    இது அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.3500 கோடி முதலீட்டை விட 4 மடங்கு அதிகம் ஆகும். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடி யாது. மாறாக அந்த நிலத்தை பூங்காவாக மாற்றுவதே சரியாகும்.

    சென்னை மாநகரில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை.

    எனவே, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

     இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய நபரை, போலீசார் அழைத்து சென்று விசாரணை.
    • கிளாம்பாக்கத்திற்கு மாறுவது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பேசப்பட்டு வந்தது.

    சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.

    ஆனால், தாங்கள் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    கோயம்பேட்டிற்கு வந்த ஆம்னி பேருந்து பயணிகளை, மாநகர பேருந்துகளில் இலவசமாக கிளாம்பாக்கத்திற்கு போலீசார் ஏற்றி அனுப்பி வருகின்றனர்.

    இதற்கிடையே, கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் காலியாகவே கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். 

    மேலும், சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய நபரை, போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், " கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர்.

    முன்னதாக, பொங்கல் கழித்து கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போது ஏன் மாற்றி பேசுகிறார்கள் என்றும் இதற்கு பின்னால் உள்ள அரசியல் என்னவென்றும் தெரியவில்லை.

    கடந்த 22ம் தேதி நோட்டீஸ் அளித்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

    கிளாம்பாக்கத்திற்கு மாறுவது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பேசப்பட்டு வந்தது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆம்னி பேருந்துகள் நிறுத்த மோதுமான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

    நாளை முதல் தென் மாவட்டங்கள் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குள் வர அனுமதி இல்லை.

    தென் மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் அரசுக்கு இல்லை. அரசு எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
    • ஆம்னி பேருந்துகள் நுழையா வண்ணம் ஆங்காங்கே போலீசார் தடுப்பு.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு சென்னை கோயம்பேடுக்கு திரும்பும் ஆம்னி பேருந்துகளை திருப்பி அனுப்பப்படுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், கோயம்பேட்டிற்கு வரும் ஆம்னி பேருந்து பயணிகளை கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் நுழையா வண்ணம் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆம்னி பேருந்து தரப்பில் கோயம்பேட்டிற்கு வர கூறியதாகவும், பின்னர் கிளாம்பாக்கத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துவதாலும், ஆம்னி பேருந்துகள் தொடர்பாக சரியான தகவல் இல்லாததால், எங்கு செல்வது என தெரியவில்லை என பயணிகள் புலம்பி வருகின்றனர்.

    • சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • இங்கு பல ரிஷிகள் முக்தி அடைந்துள்ளனர்.

    சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது பழமையான ஒன்றாகும். ராம-ராவண யுத்தத்திற்குப் பின், சீதை, ராமனை பிரி்துக் காட்டுக்குச்சென்றாள். அங்கு அவளுக்கு லவ, குசன் பிறந்தனர். அவர்கள் பெரியவர்கள் ஆகி, வால்மீகி முனிவரோடு, தென்னாடு வந்த போது, கோயம்பேடு வந்தனர்.

    இது கோசலபுரி, கோனசநகர், கோயம்பீடு எனப்பட்டது. கோ-பசு, அயம், இரும்பு, பீடு வலிமை, பசுக்களை இரும்பு கவசம்போல் வலிமையுடன் காக்கும் இடம் இது என்பதால் இப்பெயர் அமைந்தது. இங்கு இருந்த ஆதரவற்ற பசுக்களை லவ, குசர்கள், வால்மீகி உத்தரவுப்படி காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது.

    இங்கு பல ரிஷிகள் முக்தி அடைந்துள்ளனர். ஒரு சமயம் நந்தியின் கர்வமும், இங்கு தான் அடக்கப்பட்டது. இவரது அனுமதி பெற்றுத்தான் சிவனை தரிசிக்க வேண்டும். லவ, குசர்கள் தம் தந்தை, ராமருடன் போரிட்டதால் பித்ரு சாபம் பெற்றனர். இதனால் அவர்கள் இருவரும் இங்கு வந்து தங்கி 12 வருட காலம் பிரதோஷ பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

    இவர்கள் ஆரம்பித்தது தான் முதல் பிரதோஷ பூஜை. இங்கு ஒரு பிரதோஷம் பார்த்தால் 1000 பிரதோஷம் பார்த்த பலன் உண்டு. இங்கு பிரதோஷம் மிக விசேஷம். இங்குள்ளது போல வடக்கு பார்த்த சிவனையும், மூக்கணாங்கயிறு போட்ட நந்தியையும் வேறு எங்கும் பார்க்க முடியாது.

    இங்குள்ள அம்பாள் தர்மசம் வர்த்தினி தனது இடது பாதத்தை முன் வைத்து அனைவரையும் வரவேற்பது போல் காட்சி தருகிறாள். சிவன் கோவிலின் முன்புள்ள 16 கால மண்டபத்தில் ஒரு தூணில் சரபேஸ்வரர் உள்ளார். இவருக்கு ராகு காலத்தில் பூஜை உண்டு.

    இவர் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது அவரை அடக்கினார். சிவனின் 64-வடிவங்களில் ஒன்று இது. இவரை வணங்கினால் ஆபத்தில் இருந்து காப்பார். ஞாயிறு அன்று ஆயிரக்கணக்கானவர்கள் இவரை வழிபட்டு பலன் பெறுகிறார்கள். இவரை வழிபட்டால் பல குறைகள் நீங்கும்.

    • வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிது நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என பேசிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து கோயம்பேடு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இதனால் வெளி மாவட்டங்கள் செல்லும் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.
    • விலை பல மடங்கு அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    போரூர்:

    மாண்டஸ் புயல் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வருகை பாதியாக குறைந்தது.

    இதனால் பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. மேலும் விற்பனை ஆகாமல் 500 டன் வரை காய்கறிகள் தேக்கம் அடைந்தன.

    இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காய்கறி உற்பத்தி நடைபெற்று வரும் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை.

    இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இன்று தக்காளி 39 லாரிகள், வெங்காயம் 50 லாரிகள் என மொத்தம் 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைவு காரணமாக கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.13-க்கு விற்ற தக்காளி இன்று விலை அதிகரித்து ரூ.22-க்கும், ஒரு கிலோ ரூ.10க்கு வாங்கி செல்ல யாரும் ஆர்வம் காட்டாத பீன்ஸ் மற்றும் உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகள் இன்று பல மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் ஒரு கிலோ ரூ100-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.150-க்கும், கிலோ ரூ.30-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ.45-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற அவரைக்காய் ரூ.60-க்கும், கிலோ ரூ.7-க்கு விற்ற முட்டை கோஸ் ரூ.15-க்கும், ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற வெள்ளரிக்காய் ரூ.30-க்கும், ரூ.10க்கு விற்ற காலிஃபிளவர் ஒன்று ரூ.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

    சில்லரை விற்பனை கடைகளில் பச்சை காய்கறிகளின் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    இதையடுத்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது :-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 39 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தியான தக்காளியை அறுவடை செய்ய விவசாய தொழிலாளர்கள் யாரும் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களில் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:- தக்காளி-ரூ22, ஊட்டி கேரட்-ரூ45, ஊட்டி பீட்ரூட்-ரூ45, நைஸ் கொத்தவரங்காய்-ரூ70.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மலைபோல் குவிந்த குப்பை கழிவுநீர் துர்நாற்றத்தால் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை தினமும் மும்முரமாக நடந்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் தினமும் மார்க் கெட்டுக்கு வந்து காய்கறி, பழங்கள், பூக்களை வாங்கி சென்று வருகிறார்கள்.

    இங்கு வருகை தரும் வியாபாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக மார்க்கெட் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ‘பார்க்கிங்’ இடத்தில் சரிவர பராமரிப்பு பணி இல்லாததால் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே மலை போல் குப்பைகள் குவிந்துள்ளன.

    இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. மேலும் பூ மார்க் கெட்டில் உள்ள கழிவுகள் அங்கு கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    பூ மார்க்கெட்டில் மொத்தம் 470 சிறிய, பெரிய பூக்கடைகள் உள்ளன. இங்குள்ள கழிவு பூக்கள் திறந்த வெளி ‘பார்க்கிங்’ இடத்தில் கொட்டப்பட்டு வருவதால் அங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள், மழைநீர், கழிவுநீர் தேக்கம் ஆகியவற்றை உடனடியாக அகற்ற மார்க்கெட் மேலாண்மை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×