search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna nagar"

    • தீ விபத்தில் 3 பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.
    • விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.

    சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பலத்த சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் புகாரால் அந்த கட்டடம் இடிக்கப்பட்டது.

    அந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த, சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், அருகிலுள்ள மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டனர். 2 ஆண்டுகளாகியும் இடிக்கப்பட்ட கட்டடத்துக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படவில்லை. மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்தில் ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 45க்கும் அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் உள்ளனர். இடப்பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமன்றி குழந்தைகளை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அண்ணா நகர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. இடிக்கப்பட்ட அண்ணா நகர் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டவேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ரவுடியிடம் ரூ.5 லட்சம் கேட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை அண்ணாநகரில் உதவி கமி‌ஷனர் முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை உதவி கமி‌ஷனராக கடந்த ஆண்டு பணிபுரிந்தவர் முத்தழகு. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு பணியில் சேர்ந்த அவர் கடந்த ஆண்டு மே மாதம் வரையில் உதவி கமி‌ஷனராக பணியாற்றினார்.

    தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வரும் ராமபுரம் சமஸ்தான வாரிசான கார்த்திக் சேதுபதி என்பவரை கடத்தி சொத்தை அபகரிக்க ரவுடிகள் சிலர் முயற்சி செய்தனர்.

    இதுதொடர்பான குற்றச்சாட்டை உதவி கமி‌ஷனர் முத்தழகு விசாரித்தார். அப்போது ரவுடிகள் ஒருவனை கைது செய்யாமல் இருக்க அவர் ரூ.5 லட்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக ரவுடியின் சகோதரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இறுதியில் ரூ.3½ லட்சம் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

    உதவிகமி‌ஷனர் முத்தழகு பேசியதாக கூறப்படும் ஆடியோ வாட்ஸ்அப்- பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட முத்தழகு பின்னர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படையில் பணி அமர்த்தப்பட்டார்.

    அங்கு உதவி கமாண்டராக பணியில் உள்ளார். ஆடியோ வெளியானதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்தழகு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர். ஆடியோவில் இருப்பது முத்தழகுவின் குரல்தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக அவருக்கு குரல் பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணாநகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பில் உதவி கமி‌ஷனர் முத்தழகு வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. உதவிகமி‌ஷனர் முத்தழகு 1987-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.

    பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று உதவி கமி‌ஷனர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். சென்னை போலீஸ் வட்டாரத்தில் நன்கு பரிட்சயமான அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவது சக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அண்ணாநகரில் வீட்டில் இருந்த 44 பவுன் நகை மாயமானதையடுத்து வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery
    போரூர்:

    அண்ணா நகர் மேற்கு அன்பு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மகளின் திருமணத்துக்காக வசந்தி சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்று நகைகள் வாங்கி வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில் தீபாவளியன்று வசந்தி பீரோவை திறந்து பார்த்தபோது 44 பவுன் நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வசந்தியின் வீட்டில் பணியாற்றி வந்த வேலைக்கார பெண் ஜீவாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery

    இன்று சென்னையின் முக்கிய அடையாளங்களாக அண்ணா நகர், அசோக் நகர், கே.கே. நகர் போன்ற இடங்கள் உள்ளன. இந்த நகரங்களை எல்லாம் கருணாநிதி தான் உருவாக்கினார். #DMKLeader #Karunanidhi
    சென்னை:

    1968-ல் அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அவர் சென்னையின் பிரதான நகரை ஒட்டி உள்ள மற்ற பகுதிகளையும் புதிய நகராக உருவாக்க வேண்டும் என்று திட்டத்தை கொண்டு வந்தார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அப்போது அண்ணா நகர் உருவாக்கப்பட்டது. இந்த பகுதி அந்த நேரத்தில் செங்கல் சூளை நிறைந்த இடமாகவும், புதர்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது.

    இன்று சென்னையின் பிரமாண்ட நகரமாகவும், முதன்மையான நகரமாகவும் அண்ணா நகர் மாறி இருக்கிறது. இதை அண்ணா நகரில் வசிக்கும் மக்களில் பலரும் கருணாநிதியின் சாதனை என்றும் நினைவு கூருகின்றனர்.

    அண்ணா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறும்போது, இந்த பகுதி முழுவதும் செம்மண் நிறைந்த பகுதியாக இருந்தது. மேலும் சதுப்பு பகுதியாகவும் காணப்பட்டது. கருணாநிதி காலத்தில் தான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் இந்த நகரம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது.

    இன்று எல்லா வருவாய் தரப்பினரும் வசிக்கும் பகுதியாக அண்ணாநகர் இருக்கிறது என்று கூறினார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் அதிகாரி ஒருவர் கூறும்போது, அண்ணாநகர் மட்டும் அல்ல சென்னையின் பல பிரதான நகரங்களை கருணாநிதி உருவாக்கினார். கே.கே. நகர், அசோக்நகர், கொளத்தூர், எம்.கே.பி. நகர், மணலி, சோழிங்கநல்லூர் மற்றும் பல இடங்களில் அவரால் நகரங்கள் உருவாக்கப்பட்டன.


    கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நகரங்களை உருவாக்கிய அளவிற்கு அவருக்கு பின்னால் வந்தவர்கள் உருவாக்கவில்லை என்று கூறினார்.

    கோவை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் திராவிடமணி கூறும்போது, 1970-ம் ஆண்டு வாக்கில் மாநிலத்தில் பல இடங்களில் குடிசை வீடுகள் தான் இருந்தன. அவை தீ பிடிப்பது, மழையால் கடுமையாக சேதம் அடைவது போன்றவற்றை சந்தித்தன.

    இதற்கு மாற்றாகத்தான் வளர்ச்சி அடைந்த நகரங்களை கருணாநிதி உருவாக்கினார் என்று கூறினார்.

    1972-ல் வீடுகள் கட்ட உதவும் வகையில் நிலக்கரி சாம்பல் மற்றும் பல்வேறு மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கும் செல்லுலர் கான்கிரீட் தொழிற்சாலையை கருணாநிதி எண்ணூரில் உருவாக்கினார். பின்னர் 1992-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அது மூடப்பட்டு விட்டது.

    சென்னையை சேர்ந்த தி.மு.க. தொண்டர் முருகன் கூறும்போது, கருணாநிதியின் திட்டங்களால் தான் சென்னை நகரம் விரிவடைந்தது. பல்வேறு துணை நகரங்களையும் அவர் கொண்டு வந்தார். அவர் சென்னையில் உருவாக்கிய அண்ணா நகர் போல எல்லா நகரங்களிலும் குறைந்த வருவாயினரும் வீடு கட்டி குடியிருக்கும் வகையில் நகரங்களை உருவாக்கினார் என்றார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் அதிகாரி ஒருவர் கூறும்போது, தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் மாநிலம் முழுவதும் ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் 2001-2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வீட்டு வசதி திட்டங்களை நிறுத்திவிட்டார்கள் என்று கூறினார். #DMKLeader #Karunanidhi
    வெளிநாடுகளுக்கு பதிவு தபால் அனுப்புபவர்களின் வசதிக்காக அண்ணாநகர் அஞ்சலகத்தில் சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை வடகோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க.குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்ணாநகர் அஞ்சலகத்தில் வெளிநாடுகளுக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் அனுப்புபவர்களுக்காக ஒரு சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கவுண்ட்டர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கி வருகிறது.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு அண்ணாநகர் அஞ்சலகத்தின் துணை அஞ்சல் அதிகாரியை 044-26211012 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணாநகர் ரவுண்டானாவில் உள்ள ஓட்டலில் தவறவிட்ட ரூ.25 லட்சத்தை ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
    வில்லிவாக்கம்:

    அண்ணாநகர் ரவுண்டானாவில் சரவண பவன் ஓட்டல் உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு சென்றனர்.

    இரவு 10.30 மணியளவில் ஊழியர் ரவி மேஜைகளை கண்காணித்த போது மேஜையில் ஒரு பை கேட்பாரற்று இருந்ததை பார்த்தார். அந்த பையை திறந்து பார்த்த போது அதற்குள் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்தார்.

    உடனடியாக அந்த பையை மானேஜர் பாலுவிடம் ஒப்படைத்தார். இருவரும் ஓட்டல் நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் இன்று காலையில் அந்த பணப்பையை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

    பணத்தை கண்டெடுத்ததும் பத்திரமாக ஒப்படைத்த ஊழியர் ரவியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டினார். அவருக்கு கைகடிகாரம் ஒன்றை பரிசளித்தார். ரவியின் சொந்த ஊர் செஞ்சி.

    பணத்துக்கு உரிமை கோரி இதுவரை யாரும் வரவில்லை. உரிமை கோரி வருபவர்களிடம் விசாரணை நடத்தி உரியவரிடம் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×