search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அண்ணாநகரில் ஒரே கட்டிடத்தில் 2 அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி
    X

    கோப்புபடம்

    பல்லடம் அண்ணாநகரில் ஒரே கட்டிடத்தில் 2 அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி

    பல்லடம் :

    பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பலத்த சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் புகாரால் அந்த கட்டடம் இடிக்கப்பட்டது.

    அந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த, சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், அருகிலுள்ள மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டனர். 2 ஆண்டுகளாகியும் இடிக்கப்பட்ட கட்டடத்துக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படவில்லை. மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்தில் ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 45க்கும் அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் உள்ளனர். இடப்பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமன்றி குழந்தைகளை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அண்ணா நகர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. இடிக்கப்பட்ட அண்ணா நகர் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டவேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×