search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anganvadi"

    பல்லடம் :

    பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பலத்த சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் புகாரால் அந்த கட்டடம் இடிக்கப்பட்டது.

    அந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த, சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், அருகிலுள்ள மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டனர். 2 ஆண்டுகளாகியும் இடிக்கப்பட்ட கட்டடத்துக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படவில்லை. மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்தில் ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 45க்கும் அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் உள்ளனர். இடப்பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமன்றி குழந்தைகளை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அண்ணா நகர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. இடிக்கப்பட்ட அண்ணா நகர் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டவேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும், தங்களது கல்வியை திருப்பூரில் தொடங்குகின்றனர்.
    • மாநகர் முழுவதும் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளைக் கொண்டது. நாளுக்கு நாள் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூருக்கு தொழில் தேடி வருவதால் நகரம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும், தங்களது கல்வியை திருப்பூரில் தொடங்குகின்றனர். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரம்பக்கால கல்வி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, குழந்தைகளின் உடல், மொழி, அறிவு மற்றும் சமூக மன எழுச்சி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பை அங்கன்வாடி மையங்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகர் கேவிஆர். நகர், பூச்சிக்காடு உட்பட 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக திருப்பூர் மாநகர மக்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சி கேவிஆர். நகர் அங்கன்வாடி மையத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நம்பி, அப்பகுதியில் வாழும் தொழிலாளர் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது வரை 30 பேர் படித்துவரக்கூடிய சூழலில், அந்த அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லாததால் குழந்தைகளுக்கு மின்விசிறி மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    இதேபோல் மாநகர் முழுவதும் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களது மூத்த குழந்தையை அங்கன்வாடியில் சேர்த்தபோதும், மின் வசதி இல்லை. அதேபோல் 3 ஆண்டுகள் தொடங்கி 7 ஆண்டுகள் கழித்து, அதே அங்கன்வாடி மையத்தில் சேர்த்தபோதும் தற்போதும் மின்வசதி இல்லை. இந்த காரணங்களால், பெற்றோர் பலர் தங்களது குடியிருப்பை கடந்து வேறு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது. அனைத்து தரப்புக்குமான நன்மை பயக்கும் வகையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தும் அங்கன்வாடி மையங்கள், அடிப்படை வசதிகளிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (திருப்பூர் மாநகர்) ஜெயலதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகரில் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லை. மின்சாரத்துக்கான வைப்புத்தொகை தலா ரூ. 2800 வீதம், அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் இருந்து நிதி வந்துள்ளது. ஆனால் மின்வசதி ஆன்லைன் முறையில் தான் பதிவு செய்ய முடியும் என்பதால், 12 மையங்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திலும் வெவ்வேறு விதமான தகவல்கள் சொல்வதால், நடைமுறை சிக்கல்களால், மின்வசதி வசதி ஏற்படுத்த முடியவில்லை. யார் பெயரில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. மின் வயர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து பணிகளும் முடித்து வைத்துள்ளோம். தற்போது குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு வரத்தொடங்கியிருப்பதால், சாப்பிட வைத்த பின், சில குழந்தைகள் தூங்கும். எனவே மின்விசிறி மற்றும் மின் விளக்கு உள்ளிட்டவை தேவை. ஆகவே இது தொடர்பாக விரைவில் 12 அங்கன்வாடி மையங்களுக்கும், விரைவில் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்திடம் பேசி, மின்வசதி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    அரவேனு,

    அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கபட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோத்தகிரி அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையம் இல்லாததால் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி சிரமப்பட்டு வந்தனர்.

    மேலும் தங்கள் கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறக்க வேண்டும் என கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஜக்கனாரை ஊராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் திறக்க ஜக்கனாரை ஊராட்சி தலைவர் நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி நேற்று வாடகை கட்டிடத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி மேற்பார்வையாளர் சாந்தி தலைமை வகித்தார். கவுன்சிலர் மனோகரன் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் சுமதி சுரேஷ் அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தார். அங்கன்வாடி மையம் திறக்கப்பட்ட முதல் நாளில் சுமார் 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    மேலும் ஊராட்சி தலைவர் கூறுகையில் விரைவில் வருவாய்த்துறை அல்லது ஊராட்சிக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு நிரந்தரமான அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் சபீலா, உதவியாளர் தீபா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×