search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "good friday"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது.
    • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் சார்பில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது. ஆலய பங்குதந்தை பாஸ்கர் டேவிட் தலைமை வகித்தார். தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் தாளாளர் ஆரோக்கியம், பள்ளி முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கீழ ஈரால் பங்குத்தந்தை அலெக்ஸ் கலந்து கொண்டார்.

    சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாதா ஆலய தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோகராஜ், முன்னாள் தலைவர்கள் ஜெயராஜ், அந்தோணிராஜ், முன்னாள் செயலாளர்கள காமராஜ், அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாடிகன் நகரில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
    • இதனால் புனித வெள்ளி நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை.

    வாடிகன்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிகன் நகரில் போப் தலைமையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

    போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில், வாடிகனில் கடுங்குளிர் நிலவுவதால் போப் பிரான்சிஸ் புனித வெள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என வாடிகன் செய்தி தொடர்பாளர் மெட்டா புருனி தெரிவித்தார். ஆனாலும் வழக்கமான பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
    • கத்தோலிக்க தேவால யங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

    நெல்லை:

    இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நி னைவூட்டும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொள்வா ர்கள். தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்தவாரம் குருத்தோலை ஞாயிறு நடைபெற்றது.

    இந்நிலையில் பெரிய வியாழனான நேற்று பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாள் புனித வெள்ளியாக கருத்தப்படுகிறது.

    இன்று புனித வெள்ளியை யொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் சிலுவை ப்பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை தேவாலயங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மும்மணி ஆராதனை என்ற பிரார்த்தனையில் கிறிஸ்த வர்கள் உபவாசத்து டன் பங்கேற்றனர். கத்தோலிக்க தேவால யங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

    பாளை தூய சவேரியார் தேவாலயம் சார்பில் சிலுவைப்பாதை வழிபாடு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதேபோல் சீவலப்பேரி, பேட்டை , திசையன்விளை, ராதாபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவலாயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள்( ஞாயிற்றுக்கிழமை) கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு கத்தோலிக்க ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரா ர்த்தனை நடைபெறுகிறது.

    இதேபோல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நாளை மறுநாள் அதிகாலை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெறு கிறது. ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நாளை இரவு 11.30 மணிக்கு தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
    • மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர்.

    கடலூர்:

    ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.இதை நினைவு கூறும் வகையில் இன்று புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயம், புனித எபிபெனி சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், மணவெளி அக்கினி எழுப்பு தல் தேவாலயத்திலும், ஆற்காடு லூத்தரன் திருச்ச பையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. பங்கு தந்தை தலைமையில் இந்த சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.

    அப்போது கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர். அதேபோல் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயத்தில் மும்மணிநேர தியான ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பா திரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்பட் டாம்பாக்கம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவையில் அறையப் பட்ட 3–-வது நாளில் ஏசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அன்று அதிகாலையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களி லும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர். #13died #SouthAfricachurch #churchwall #churchwallcollapse
    கேப் டவுன்:

    தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமோபோசா கடந்த ஆண்டு வந்தபோது சிதிலமடைந்து வரும் இந்த தேவாலயத்தை புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.

    இந்த மாகாணத்தில் சில நாட்களாக டொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நேற்றிரவு இந்த தேவாலயத்தில் புனித வெள்ளிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது மழை நீரில் நனைந்திருந்த தேவாலயத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #13died #SouthAfricachurch #churchwall #churchwallcollapse
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புனித வெள்ளியை முன்னிட்டு புதுவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். #goodfriday

    புதுச்சேரி:

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து புனித வெள்ளி இன்று நடைபெற்றது. இதையொட்டி புதுவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

    புதுவை தூய ஜென்ம ராக்கினி அன்னை பேராலயத்தில் புதுவை கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவை பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவை பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.

    சிலுவை பாதை பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

    இதே போல் புதுவையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுவை குயவர்பாளையம் எம்.பி.ஏ. சபை சார்பில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நவீனா கார்டனில் நடைபெற்றது. சபை போதகர் நித்திய ஜீவதாஸ் தேவ செய்தி அளித்தார்.

    நிகழ்ச்சியில் ஜார்ஜ், மோசே தலைமையில் ஆண்கள், பெண்கள் குழுவினரின் சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சபை ஊழியர்கள் செய்து இருந்தனர். #goodfriday

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அநீதி மற்றும் சமத்துவமின்மை நீங்கிய உலகம் உருவாக இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முக்கியத்துவமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். #PMremembers #sacrificeofJesus #GoodFriday
    புதுடெல்லி:

    புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.

    கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இந்தியாவில் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளியன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.


    இந்நிலையில், இந்நாளில் பிரதமர் நரேந்திர மோடி, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை நாம் நினைவுகூர்கிறோம், அவரது வாழ்க்கை, உயர்வான தத்துவங்கள் மற்றும் அளப்பரிய தீரம் போன்றவை பலருக்கு உத்வேகம் அளிக்கும் பக்கபலமாக அமைந்துள்ளது.

    அநீதி மற்றும் சமத்துவமின்மை நீங்கிய உலகம் உருவாக இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முக்கியத்துவமான காரணமாகும்’ என குறிப்பிட்டுள்ளார். #PMremembers #sacrificeofJesus #GoodFriday
    ×