search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liturgy"

    • புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது.
    • கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை (28-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சடங்கில் பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் கேரளாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வை கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியது.

    அதன்பிறகு அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தற்போது நடத்த உள்ளது. இதில் அனைத்து தேவாலய பிரிவுகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கத்தின் முன்னாள் செயலாளர் சாந்தி மத்தாய் கூறியிருப்பதாவது:-

    தேவாலயத்தில் நடக்கும் சடங்குகள் பொதுவாக ஆண் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கின்றன. பாதிரியார் ஒருசில ஆண்களின் கால்களை கழுவுகிறார். அந்த சடங்கை ஒரு பொது இடத்துக்கு மாற்றுவதன் மூலம் ஒற்றுமையை மேம்படுத்துவதையும், சமூக தடைளை உடைப்பதையும் இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

    ஆகவே பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை நடத்துகிறோம். இந்த சடங்கு அனைத்து பாலினத்தவர்களையும் அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் வகையில் தேவாலயத்துக்கு வெளியே நடைபெறும். அது பரஸ்பர மரியாதை. ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குருத்தோலைகளை எரித்து சாம்பல் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி இன்று காலையில் நிறைவேற்றப்பட்டது. குருத்தோலைகளை எரித்து அதில் இருந்து சாம்பல் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.

    திருப்பலியில் வைக்கப்பட்டிருந்த சாம்பல் அடங்கிய கிண்ணங்கள் புனிதம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பேராலய அதிபர் இருதயராஜ், உதவி பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோர் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசினர்.

    தவக்காலம் தொடங்கியதை யொட்டி பேராலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டனர்.

    • 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
    • இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

    ஈரோடு:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இது கிறிஸ்தவர்களின் துக்க காலமாக உள்ளது. 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

    இந்த துக்க காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூர்ந்து வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தவக்காலம் இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

    கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக எடுத்து சென்ற குருத்தோலைகள் சேகரிக்கப்பட்டு சுட்டு எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த சாம்பல் இன்று திருப்பலியில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.

    தொடர்ந்து புனித வெள்ளி வரை நோன்பு கடைப்பிடிக்கப்படும். சாம்பல் புதனை முன்னிட்டு இன்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.

    ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்கு தந்தையுமான ஆரோக்கியராஜ் ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ நினைவு தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கி வழிபாட்டை நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலையும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம், கொமரபாளையம் புனித அந்தோனியார் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • 40 நாட்கள் உபவாசம் இன்று முதல் தொடங்குகிறது.
    • திருச்சபைகளில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    சென்னை:

    இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்த காலத்தை கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். இதனை லெந்து காலம், தபசு காலம் என்று கூறுவது உண்டு. சாம்பல் புதன் கிழமையான இன்று முதல் இந்த நாட்கள் தொடங்குகிறது.

    லெந்து காலத்தில் பிரவேசிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று முதல் வரும் 40 நாட்கள் அர்ப்பணிப் போடும், உபவாசத்தோடும் நினைவு கூறுவார்கள். இந்த நாட்களில் தங்களை வெறுத்து அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார்கள்.

    கொண்டாட்டங்களை தவிர்த்து பயபக்தியோடு ஆராதனையில் பங்கு பெறுவார்கள். சாம்பல் புதன் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் நடந்த வழிபாட்டில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பாதிரியார் சபை மக்களின் நெற்றியில் பூசுவார். சிலுவையின் அடையாளமாக இடும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. புகழ் பெற்ற சாந்தோம் ஆலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயம், பெரம்பூர் லூர்து ஆலயம், மாதவரம் அந்தோணியார் ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

     இதே போல சி.எஸ்.ஐ. இ.சி.ஐ. மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து உள்ளிட்ட திருச்சபைகளில் இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆராதனையில் சிறப்பு செய்தியாளர்கள் `லெந்து காலம்' குறித்து பேசுவார்கள். பரிசுத்த திருவிருந்து ஆராதனையாக இது நடைபெறும்.

    இதைத் தொடர்ந்து வரும் 6 வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு தவக்காலம் முன்னதாக தொடங்கி விட்டதால் இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31-ந்தேதி வருகிறது.

    • தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது.
    • கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள்.

    சென்னை:

    கிறிஸ்தவர்களின் தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.

    40 நாட்கள் கிறிஸ்தவர் கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து ஆண்டவனை தியானிப்பார்கள். உண்ணும் உணவு, உடைகள் போன்ற அலங்காரங்களை தவிர்த்து பிறருக்கு உதவி செய்து ஆன்மீக வலிமையை இக்காலக் கட்டத்தில் பெறுவார்கள்.

    தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது யூதர்களின் பாரம்பரியம். காலப்போக்கில் அனைத்து திருச்சபைகளும் `சாம்பல் புதன்' நாளை பின்பற்றி வருகிறார்கள்.

    குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மக்கள் ஓலையினால் ஆன சிலுவையை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் கிழமை வருகிற 14-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    அதனைதொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வழிபாடு நடைபெறும். இயேசு உபவாசம் இருந்த தபசுக் காலத்தில் கிறிஸ்தவர்கள் கஷ்ட நாட்களாக கருதி அனைத்து வழிபாடுகளிலும் எளிமையாக பங்கேற்பார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் தியாக நாட்களாக இவை பின்பற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அந்த நாட்களை நினைவு கூர்ந்து புனிதவாரம் அனுசரிக்கப்படுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளியை தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் 31-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    • 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது.
    • 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் தூய லூர்து அன்னை ஆலய 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது. இன்று முதல் தினமும் மாலையில் திருப்பலி நடக்கிறது. வருகிற 8, 9-ந்தேதிகளில் அருட்தந்தை ஸ்டீபன் தச்சீல் சிறப்பு நற்செய்தி கூட்டமும், குணமளிக்கும் வழிபாடும் நடக்கிறது. வருகிற 10-ந்தேதி நற்கருணை பவனி நடைபெறுகிறது. 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    இந்த 2 நாட்களிலும் மாபெரும் தேர் பவனியானது ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ரெயில்வே மைதானத்தில் ஒன்று கூடி திருப்பலியோடு நிறைவுபெறும். 11-ந்தேதி பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எரியும் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியவாறு பவனியாக வந்து பங்கேற்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது.
    • மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை.

    கிறித்தவ சமயத்தில் நவம்பர் முதல் இரண்டு நாட்களும் கனத்த இதயங்களுடன் மக்கள் அவரவர் குடும்பங்களில் மரணித்தவர்களின் நினைவுகளை சுமந்து அதன் வலியும், வேதனையும் உணர்வுகளை சிதைக்கின்ற காரணத்தால் சோகம் நிறைந்த சிந்தனைகளோடு கல்லறைகளை சுற்றி அலைவர். மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடைகளில் மிகவும் முக்கியமானது.

    கிறித்துவத்தில் மரணம் வித்தியாசமாக புரியப்படுகிறது. அதாவது மரணம் பொய்யுலக வாழ்வையும், மெய்யுலக வாழ்வையும் வரையறுக்க கூறுகிறது. அதற்கு மரணம் தான் வழி வகுக்கிறது என்பது புரிதல் அப்படியானால் மரணித்தவருடைய உடல் மண்ணாகவும் அவர்களது ஆன்மா மனித உடலில் இருந்து பிரிந்து எகிருந்து வந்ததோ அதே தத்துவத்தை அடைந்து விடுகிறது. இதைத்தான் மோட்சம், பரலோகம், சிவலோகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

    புரிதல் என்னவென்றால் மரணித்த மனித உடலில் இருந்து விடுபட்டு அவரது உயிர் ஜீவன் என்பது அழிவில்லா தத்துவத்தை அடைகிறது. அதாவது இறைவனோடு கடவுளோடு சங்கமித்துவிடுகிறது. இவ்வாறு மண்ணுலக வாழ்வில் இருந்து விடுபட்டு விண்ணுலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுவதும், நம்பிக்கை புகட்டுவதும் தான் சிறப்பு.

    அதேவேளையில் உயிர்தெழுதல் நாள் வரும்போது இதுபோன்ற ஆன்மாக்கள் மாற்றுடல் பெற்று எழுவார்கள் என்பது நம்பிக்கை. ஆயினும் மரணித்தவர்களின் உடலை மண்ணுக்கே கொடுத்துவிடுகிறோம். ஏனென்றால் மனிதன் மண்ணானவன் என்பது புரிதல் ஆகும். உலகத்தின் எந்த மூலைக்கும் இதுவே புரிதலுக்குள்ளான தத்துவமாகும்.

    1048-ல் தான் 11-ம் நூற்றாண்டில் அபாட் ஓஷலோ என்ற துறவி தனது 54 ஆண்டுகால துறவரத்தை அவர் கொண்டிருந்த துறவர மடத்திலயே மரணத்தின் மூலம் முடிந்தார். இவர்தான் அனைத்து ஆன்மாக்களின் தினம் என்ற ஒரு சிறப்பு நாளை உருவாக்கினார்.

    இதனால் தான் மரணம் அடைந்தோரின் நினைவு நாளை உலகமெல்லாம் உள்ள அனைத்து கிறித்தவர்களும் குடும்பங்களாக அவரவர் தங்கள் உறவுகளின் கல்லறைக்குச் சென்று சுத்தம் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து தங்கள் கடமையை நிறைவேற்றுவது வழக்கம்.

    C.SI லூத்திரன் மற்றும் கத்தோலிக்க திருச்சபைகள் இந்த நாளை நினைவேந்தி வழிபடவேண்டும் என்று மக்களுக்கு ஆவலை ஊட்டுகின்றன. அதே வகையில் மேற்படி திருச்சபைகளே கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றன.

    சென்னை போன்ற பெருநகரங்களிலும் ஏன் இந்தியாவில் மட்டும்மல்லாது உலக அளவில் இந்த நவம்பர் 2-ம் நாள் நீத்தார் நினைவேந்தல் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    • நன்றி காணிக்கையாக மாதாவிற்க்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பினார்கள்.
    • செப்டம்பர் 8-ந்தேதி கன்னி மரியின் பிறந்தநாள்.

    உலகளவில் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான மக்கள் திரண்டு வந்து அன்னையின் அன்பை பெற்று செல்கிறார்கள்.

    ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்பு நாகபட்டினத்தில் இருந்த ஒரு செல்வந்தருக்கு வேளாங்கண்ணியில் வாழ்ந்த ஒரு இடையர் குல சிறுவன் ஒருவன், ஒவ்வொரு நாளும் பால் கொண்டு போய் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் அதேபோல் பால் கொண்டு போகும்போது, வழியில் உடல் சோர்வுற்றதால் அந்த சிறுவன் சற்று ஓய்வெடுக்க ஒரு ஆல மரத்தின் நிழலில் குளத்துக்கு அருகே அமர்ந்தான்.

    அப்போது சூரியனை விட அதிக ஒளி ஒன்று அவன் முகத்தில் பட்டது. உடனே கண் விழித்தான் அந்த சிறுவன். விண்ணக அழகு நிறைந்த அன்னை தெய்வீக குழந்தையை கையில் ஏந்திய காட்சியை கண்டான். அந்த அன்னை புன்னகை தவழ தனது குழந்தைக்கு கொஞ்சம் பால் தருமாறு அந்த சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் பால் கொடுத்தான். அந்த குழந்தையும் பருகியது.

    சில வினாடிகளில் அந்த தேவ அன்னையும், குழந்தையும் அந்த இடத்தில் இருந்து மறைந்தனர். செல்வந்தரின் வீட்டுக்கு நேரம் தவறி வந்த சிறுவனிடம் ஏன் பாலின் அளவு குறைந்திருக்கிறது என்று விசாரித்தார் முதலாளி. சிறுதுநேரத்தில் சிறுவன் சுமந்து வந்த பால் குடம் நிறைந்து வழிந்தோடியது.

    இதை பார்த்த செல்வந்தர் என்ன இது அதிசயம் என்று மலைத்துபோய் நிற்க அந்த சிறுவன் நடந்ததை கூற ஆரம்பித்தான். அச்சிறுவனும் தான் வரும் வழியில் ஒருதாய் கையில் குழந்தையுடன் தோன்றி தன் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு வேண்டினாள். நானும் அக்குழந்தைக்கு பால் கொடுத்தேன் என்று சொல்லி முடித்தும் அவன் கையில் உள்ள பால் பாத்திரம் நிரம்பி வழிவது நிற்கவில்லை.

    சிறுவன் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று அன்னை காட்சி தந்த இடத்தை கண்டார் முதலாளி. அந்த இடத்தில் இருந்த ஆலமரமும், அந்த குளமும் சற்று வித்தியாசமாக அவருக்கு தெரிந்தது. உடனே அவர் அப்புனித தலத்தில் தாழ் பணிந்து வணங்கினார். சிறிது காலத்திற்கு பிறகு தெய்வீக தாய் காட்சி அளித்த அத்திருவிடத்தில் சிற்றாலயம் எழுப்பப்பட்டது. அது தான் இன்று நம் முன் சாட்சியாய் நிமிர்ந்து நிற்கும் பழைய வேளாங்கண்ணி-மாதா குளம்.

    மோர் கார சிறுவனுக்கு காட்சி கொடுத்தது

    சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதாவின் இரண்டாவது காட்சி வேளாங்கண்ணி சிற்றுரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு" என்ற இடத்தில் நடைபெற்றது. அங்கே கால் ஊனமுற்ற ஒரு சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். அப்போது ஒரு நாள் வேளாங்கண்ணி மாதா தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டாள். சிறுவனும் குழந்தைக்கு மோர் வழங்கினான்.

    மகனே உடனே நாகபட்டினம் சென்று அங்கே வாழும் கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக "என்றார்.

    அதற்கு அந்த சிறுவன் நானோ கால் ஊனமுற்றவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்று கூற, "மகனே எழுந்து நட' என்று அந்த தேவத்தாயின் மறுமொழி கூற சிறுவன் எழுந்து நிற்க ஆரம்பித்தான். தன்னால் நிற்க முடிகிறது, நடக்க முடிகிறது என்று உணர்ந்த சிறுவனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சிறுவனின் ஓட்டம் நாகபட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது.

    அங்கு வீட்டிற்க்கு சென்று நடந்ததை விளக்கினான். அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்த கிறிஸ்தவருக்கு நேற்று இரவு வேளாங்கன்னி மாதா ஒரு ஆலயம் கட்ட சொல்லிய கனவும் நினைவுக்கு வந்தது. அந்த சிறுவனோடு அந்த இடத்திற்கு சென்று ஆலயம் கட்ட ஆரம்பித்தார்கள். அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி மாதா வீற்றிருக்கும் பேராலயம்.

    கி.பி 17-ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி மாதாவின் மூன்றாவது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்கொவில் இருந்து போர்ச்சுக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது. வழியில் கடுமையான புயலால் அந்த கப்பல் தாக்கப்பட்டது.

    அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் கடலில் மூழ்கப்போகிறோமே என்று பயந்து அஞ்சி நடுங்கினார்கள். புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள்.

    அம்மா மரியே எங்களை இந்த கடும் புயலில் இருந்து காப்பாற்றும். நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில் கன்னி மரியே உனக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என நினைத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோசம் குறையத் தொடங்கியது. அவர்கள் புயலில் சிக்கிய கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது.

    அன்றைய தேதி செப்டம்பர் 8. அன்று கன்னி மரியின் பிறந்தநாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை. மாலுமிகள் தாங்கள் நலமுடன் வந்து சேர்ந்ததற்காக இறைவனுக்கும், கன்னி மரியாவிற்க்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக மாதாவிற்க்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பினார்கள். போர்ச்சுக்கீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் தாங்கள் கட்டிய சிற்றாலயம் வந்து வணங்கி செல்வது வழக்கம்.

    • மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று அதிகாலையில் முடிவடைந்தது.ஈஸ்டர் திருவிழா திருப்பலி நேற்று நள்ளிரவில் தொடங்கியது.இதில் மிகத் திரளான மக்கள் பூண்டி மாதா பேராலய வளாகத்தில் திரண்டு இருந்தனர்.

    யேசுநாதர் உயிர்த்தெ ழுந்ததை குறிக்கும் வகை யில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு அதனை மந்திரித்து அதிலிருந்து பாஸ்கா திரி எனப்படும் பெரிய மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றப்பட்டது. இந்த மிகப்பெரிய மெழுகுவர்த்தி யில் சிலுவை அடையாளம் வரையப்பட்டிருந்தது. நமது மீட்பின் தொடக்கமும் முடிவும் கிறிஸ்துவே என்பதை காட்ட பேரலாய அதிபர் தந்தை தமிழ் மொழியின் முதல் எழுத்தான (அ) வையும் கடைசி எழுத்தான (ன) வையும் மெழுகுவர்த்தியில் எழுதினார். நடப்பு ஆண்டினை குறிக்கும் விதமாக 2023 என்று பொறிக்கப்பட்டு, இயேசுவின் 5 காயங்களை நினைவுபடுத்தும் விதமாக பெரிய மெழுகு திரியில் 5 மணிகளை பதிக்கப்பட்டது.

    பெரிய மெழுகு வர்த்தியில்ஒ ளியேற்றப்பட்டு அதனை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் கையில் ஏந்தியவாறு திருப்பலி மேடைக்கு கிறிஸ்துவின் ஒளி இதோ என உரக்க பாடியவண்ணம் ஏந்தி வந்தார். உயிர்ப்பு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர். கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடியவாறு பேராலய அதிபர் சாம்சன்கைகளில் ஏந்தி வந்த மெழுகுவர்த்தியை திருப்பலி மேடையின் மீது அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பொருத்தி வைத்தார்.

    உயிர்ப்பு விழா சிறப்பு திருப்பலி யில் பேராலயஅதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம், ஆகியோர் பங்கு கொண்டனர். உன்னதங்களிலே பாடல் பாடப்பட்ட போது ஆலயமணிகள் ஒலிக்க ஏசுநாதர் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் பீடத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார். அதனைத் தொடர்ந்து திருப்பலிநடைபெற்றது. வீபுதி புதன் அன்று தொடங்கிய கிறிஸ்தவர்களின் 40நாள் தவக்காலம் யேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் நாளுடன் முடிவடைகிறது. இன்று பூண்டி மாதா பேராலயத்தில் காலை, நண்பகல், மாலையில் ஈஸ்டர் நாள் திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன.

    ×