search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stations of the Cross"

    • தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
    • கத்தோலிக்க தேவால யங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

    நெல்லை:

    இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நி னைவூட்டும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொள்வா ர்கள். தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்தவாரம் குருத்தோலை ஞாயிறு நடைபெற்றது.

    இந்நிலையில் பெரிய வியாழனான நேற்று பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாள் புனித வெள்ளியாக கருத்தப்படுகிறது.

    இன்று புனித வெள்ளியை யொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் சிலுவை ப்பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை தேவாலயங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மும்மணி ஆராதனை என்ற பிரார்த்தனையில் கிறிஸ்த வர்கள் உபவாசத்து டன் பங்கேற்றனர். கத்தோலிக்க தேவால யங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

    பாளை தூய சவேரியார் தேவாலயம் சார்பில் சிலுவைப்பாதை வழிபாடு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதேபோல் சீவலப்பேரி, பேட்டை , திசையன்விளை, ராதாபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவலாயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள்( ஞாயிற்றுக்கிழமை) கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு கத்தோலிக்க ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரா ர்த்தனை நடைபெறுகிறது.

    இதேபோல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நாளை மறுநாள் அதிகாலை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெறு கிறது. ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நாளை இரவு 11.30 மணிக்கு தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.

    • புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
    • மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர்.

    கடலூர்:

    ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.இதை நினைவு கூறும் வகையில் இன்று புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயம், புனித எபிபெனி சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், மணவெளி அக்கினி எழுப்பு தல் தேவாலயத்திலும், ஆற்காடு லூத்தரன் திருச்ச பையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. பங்கு தந்தை தலைமையில் இந்த சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.

    அப்போது கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர். அதேபோல் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயத்தில் மும்மணிநேர தியான ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பா திரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்பட் டாம்பாக்கம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவையில் அறையப் பட்ட 3–-வது நாளில் ஏசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அன்று அதிகாலையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களி லும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

    ×