என் மலர்

    நீங்கள் தேடியது "Lent"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 22-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றபுனித ஆரோக்கிய மாதாபேராலயம் அமைந்துள்ளது.

    ஆலயத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.

    தவகாலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன்படி 4-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.

    பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர்.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது.
    • நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

    அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கி ன்றனர்.

    இயேசுவின் சிலுவைப் பாடுகளால் உலக மக்கள் மீட்பு பெறவும், கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் விபூதி புதன் அல்லது திருநீற்றுப் புதன் முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரிலும் கடைபிடிக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் கிறிஸ்த வர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு தஞ்சை மங்களபுரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பங்குதந்தை அருட்திரு மரியசூசை, டி.எம்.எஸ்.எஸ்.எஸ் இயக்குனர் அருட்திரு விக்டர் அலெக்ஸ், உதவி பங்கு தந்தை அருட்திரு அந்தோணி பெர்டினான்டோ ஆகியோர் திருப்பலியை நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பலால் சிலுவையிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். இதேபோல் தஞ்சை, பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவால யங்களிலும் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இன்றில் இருந்து கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர். இந்த நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும்.

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுவார். அந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாகவும், ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவாகவும் கொண்டாடப்படும்.

    வரும் ஏப்ரல் 2-ந்தேதி குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 7-ம் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 9-ந்தேதி ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு தினம் கொண்டாடப்பட உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் போன்ற 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் செல்லாண்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    ஆடித்தவசுக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×