search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ash"

    • தீ வேகமாக சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பலானது.
    • பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வேட்டங்குடியிலிருந்து தொடுவாய் செல்லும் சாலை ஓரத்தில் சீர்காழியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கீற்றுக் கொட்டகை உள்ளது.

    காலை அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து காற்று வீசும்போது பனை மரத்திலிருந்து தீ வேகமாகச் சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பல் ஆனது.

    இதில் கொட்டகைக்குள் இருந்த உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் ஆயின.

    தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் யாரோ சில இளைஞர்கள் வந்து அங்குள்ள பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டதாகவும், பனை மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீ மேலும் பரவி கொட்டகையில் பட்டு கொட்டகை தீயில் எரிந்து சாம்பலானதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது.
    • நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

    அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கி ன்றனர்.

    இயேசுவின் சிலுவைப் பாடுகளால் உலக மக்கள் மீட்பு பெறவும், கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் விபூதி புதன் அல்லது திருநீற்றுப் புதன் முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரிலும் கடைபிடிக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் கிறிஸ்த வர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு தஞ்சை மங்களபுரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பங்குதந்தை அருட்திரு மரியசூசை, டி.எம்.எஸ்.எஸ்.எஸ் இயக்குனர் அருட்திரு விக்டர் அலெக்ஸ், உதவி பங்கு தந்தை அருட்திரு அந்தோணி பெர்டினான்டோ ஆகியோர் திருப்பலியை நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பலால் சிலுவையிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். இதேபோல் தஞ்சை, பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவால யங்களிலும் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இன்றில் இருந்து கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர். இந்த நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும்.

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுவார். அந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாகவும், ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவாகவும் கொண்டாடப்படும்.

    வரும் ஏப்ரல் 2-ந்தேதி குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 7-ம் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 9-ந்தேதி ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு தினம் கொண்டாடப்பட உள்ளது.

    • நம்பிக்கைக்கு அழைத்து செல்லும் தொடக்க நாளாக சாம்பல் புதன் கருதப்படுகிறது.
    • குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட சாம்பலை புனிதம் செய்து பூசினர்.

    பூதலூர்:

    தஞ்சை அடுத்த பூண்டி மாதா பேராலயத்தில் இன்று கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமாக சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தீமையில் இருந்து நன்மைக்கும், அநீதியிலிருந்து நீதிக்கும், அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு அழைத்து செல்லும் தொடக்க நாளாக சாம்பல் புதன் கருதப்படுகிறது. இறை உதவியை இறைவனின் அன்பை ஜெபத்தின் மூலம் பெற வேண்டும் என்று எடுத்துரைக்கும் நாளாக சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது.

    பூண்டி மாதா பேராலயத்தில் இன்று நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி பேரலாய அதிபர் சாம்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவடைந்தவுடன் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று பாதுகாத்து வந்த குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட சாம்பலை புனிதம் செய்து பக்தர்களின் நெற்றியில் பேராலய அதிபர் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தவக்கால விரதத்தை தொடங்கினர். திருப்பலியின் போது பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.

    • ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • ஜெயக்குமார் மனைவி தேவகியிடம் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கி அரசின் கான்கிரீட் வீடு கட்டி தருவதாக உறுதியளித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பச்சை பெருமாநல்லூர் ஊராட்சியை சேர்ந்த மத்தளமுடையான் கிராமம் ஜெயக்குமார் என்பவரின் குடிசை வீட்டில் நேற்று மின் வயரிலிருந்து கசிந்த மின்சாரத்தால் தீப்பொறி ஏற்பட்டு கூரையில் பட்டு வீடு எரிந்து சாம்பல் ஆனது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும், வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சாம்பலாயின.

    இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் தீ விபத்தில் வீட்டை இழந்த ஜெயக்குமார் மனைவி தேவகியிடம் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கி அரசின் கான்கிரீட் வீடு கட்டி தருவதாக உறுதியளித்தனர்.

    தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு நிவாரணம்ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ், தி.மு.க. முன்னாள் ஒன்றியதுணைச் செயலாளர் சம்பத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சாய ஆலைகளில் பாய்லரை சூடேற்றுவதற்கு, எரிபொருளாக விறகு பயன்படுத்தப்படுகிறது.
    • மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அனைத்து சாய ஆலைகளிலும் ஆய்வு நடத்தவேண்டும்.

    திருப்பூர்,

    திருப்பூரில் இயங்கும் சில சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் திறந்துவிடுவது மட்டுமின்றி, சாம்பல் கழிவுகளை நீர் நிலை ஓரங்களில் கொட்டியும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.முருகம்பாளையம் சுற்றுப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் சாய ஆலைகள் இயங்குகின்றன.

    சாய ஆலைகளில் பாய்லரை சூடேற்றுவதற்கு, எரிபொருளாக விறகு பயன்படுத்தப்படுகிறது. விறகு எரித்த சாம்பல் கழிவுகளை சாய ஆலைகள் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை.முருகம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே ஜம்மனை ஓடையின் குறுக்கே பாலம் உள்ளது. இப்பகுதியில் சாம்பல் கழிவுகளை கொட்டிவந்தனர்.போராட்டத்தையடுத்து தற்போது, எதிர்புறமுள்ள நிலத்தில் சாம்பல் கழிவுகளை கொட்டிவருகின்றனர்.

    சாக்கு பைகளில் அடைத்து கொண்டுவந்து தினமும் சாம்பலை கொட்டிச் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில், சாம்பல் மலை உருவாகிவருகிறது. ஜம்மனை நீரும், காற்றும் மாசுபடுகிறது.

    எனவே மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அனைத்து சாய ஆலைகளிலும் ஆய்வு நடத்தவேண்டும். சாம்பல் கழிவுகள், திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றனவா என ஆவணங்களை தணிக்கை செய்யவேண்டும். விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×