search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spilled"

    • வண்ணார்பேட்டை ஆற்று பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆயில் கொட்டிக்கிடப்பதை கவனிக்காமல் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தனர்.
    • போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கொட்டிக்கிடந்த ஆயில் மீது மணலை தூவி அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து தச்சநல்லூர் செல் லும் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்று பாலத்தில் இன்று காலை ஆயில் ஏற்றி சென்ற லாரியில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டது.

    பாலத்தில் கொட்டிய ஆயில்

    இதனால் ஆற்று பாலத்தில் ஆயில் கொட்டி கிடந்தது. இதில் இன்று காலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தனர்.

    ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த ஆயிலில் வழுக்கி கீழே விழுந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப் பட்டது.

    தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்ற சென்று கொட்டிக்கிடந்த ஆயில் மீது மணலை தூவி அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேர நெருக்கடிக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

    • சாய ஆலைகளில் பாய்லரை சூடேற்றுவதற்கு, எரிபொருளாக விறகு பயன்படுத்தப்படுகிறது.
    • மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அனைத்து சாய ஆலைகளிலும் ஆய்வு நடத்தவேண்டும்.

    திருப்பூர்,

    திருப்பூரில் இயங்கும் சில சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் திறந்துவிடுவது மட்டுமின்றி, சாம்பல் கழிவுகளை நீர் நிலை ஓரங்களில் கொட்டியும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.முருகம்பாளையம் சுற்றுப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் சாய ஆலைகள் இயங்குகின்றன.

    சாய ஆலைகளில் பாய்லரை சூடேற்றுவதற்கு, எரிபொருளாக விறகு பயன்படுத்தப்படுகிறது. விறகு எரித்த சாம்பல் கழிவுகளை சாய ஆலைகள் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை.முருகம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே ஜம்மனை ஓடையின் குறுக்கே பாலம் உள்ளது. இப்பகுதியில் சாம்பல் கழிவுகளை கொட்டிவந்தனர்.போராட்டத்தையடுத்து தற்போது, எதிர்புறமுள்ள நிலத்தில் சாம்பல் கழிவுகளை கொட்டிவருகின்றனர்.

    சாக்கு பைகளில் அடைத்து கொண்டுவந்து தினமும் சாம்பலை கொட்டிச் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில், சாம்பல் மலை உருவாகிவருகிறது. ஜம்மனை நீரும், காற்றும் மாசுபடுகிறது.

    எனவே மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அனைத்து சாய ஆலைகளிலும் ஆய்வு நடத்தவேண்டும். சாம்பல் கழிவுகள், திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றனவா என ஆவணங்களை தணிக்கை செய்யவேண்டும். விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×