search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்மமான முறையில் கொட்டகை எரிந்து சேதம்
    X

    மர்மமான முறையில் கொட்டகை எரிந்து சேதம்

    • தீ வேகமாக சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பலானது.
    • பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வேட்டங்குடியிலிருந்து தொடுவாய் செல்லும் சாலை ஓரத்தில் சீர்காழியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கீற்றுக் கொட்டகை உள்ளது.

    காலை அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து காற்று வீசும்போது பனை மரத்திலிருந்து தீ வேகமாகச் சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பல் ஆனது.

    இதில் கொட்டகைக்குள் இருந்த உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் ஆயின.

    தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் யாரோ சில இளைஞர்கள் வந்து அங்குள்ள பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டதாகவும், பனை மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீ மேலும் பரவி கொட்டகையில் பட்டு கொட்டகை தீயில் எரிந்து சாம்பலானதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×