search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Easter"

    • கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
    • புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரை துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

    இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகள் குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோல சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி இராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்து கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரைவிட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி.
    • கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    சென்னை:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரை துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

    இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகள் குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோல சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி ராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்து கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரை விட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது.
    • கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை (28-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சடங்கில் பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் கேரளாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வை கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியது.

    அதன்பிறகு அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தற்போது நடத்த உள்ளது. இதில் அனைத்து தேவாலய பிரிவுகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கத்தின் முன்னாள் செயலாளர் சாந்தி மத்தாய் கூறியிருப்பதாவது:-

    தேவாலயத்தில் நடக்கும் சடங்குகள் பொதுவாக ஆண் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கின்றன. பாதிரியார் ஒருசில ஆண்களின் கால்களை கழுவுகிறார். அந்த சடங்கை ஒரு பொது இடத்துக்கு மாற்றுவதன் மூலம் ஒற்றுமையை மேம்படுத்துவதையும், சமூக தடைளை உடைப்பதையும் இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

    ஆகவே பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை நடத்துகிறோம். இந்த சடங்கு அனைத்து பாலினத்தவர்களையும் அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் வகையில் தேவாலயத்துக்கு வெளியே நடைபெறும். அது பரஸ்பர மரியாதை. ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர்.
    • கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னை:

    இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மீது பவனியாக அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது குருத்தோலை களை பிடித்தவாறு ஜெருசேலம் மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும், பவனியாக சென்றனர்.

    சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) ஆலயங்கள், மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்தே, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

    சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், சின்னமலை தேவாலயம், கத்தீட்ரல் பேராலயம், புதுப்பேட்டை புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

     குருத்தோலை பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்ற பாடலை பாடியபடி சென்ற னர். பின்னர் ஆலயங்களில் பேராயர்கள், பாதிரியர்கள், போதகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    • தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது.
    • கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள்.

    சென்னை:

    கிறிஸ்தவர்களின் தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.

    40 நாட்கள் கிறிஸ்தவர் கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து ஆண்டவனை தியானிப்பார்கள். உண்ணும் உணவு, உடைகள் போன்ற அலங்காரங்களை தவிர்த்து பிறருக்கு உதவி செய்து ஆன்மீக வலிமையை இக்காலக் கட்டத்தில் பெறுவார்கள்.

    தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது யூதர்களின் பாரம்பரியம். காலப்போக்கில் அனைத்து திருச்சபைகளும் `சாம்பல் புதன்' நாளை பின்பற்றி வருகிறார்கள்.

    குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மக்கள் ஓலையினால் ஆன சிலுவையை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் கிழமை வருகிற 14-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    அதனைதொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வழிபாடு நடைபெறும். இயேசு உபவாசம் இருந்த தபசுக் காலத்தில் கிறிஸ்தவர்கள் கஷ்ட நாட்களாக கருதி அனைத்து வழிபாடுகளிலும் எளிமையாக பங்கேற்பார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் தியாக நாட்களாக இவை பின்பற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அந்த நாட்களை நினைவு கூர்ந்து புனிதவாரம் அனுசரிக்கப்படுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளியை தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் 31-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    • தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும்.
    • இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    நெல்லை:

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது.

    தவக்காலத்தில் தவக்கால நடைபயணம், சிறப்பு தியானம், திருப்பயணம், சிலுவை பயணம் உள்ளிட்டவைகளை மேற்கொண்டனர்.

    ஈஸ்டர் பண்டிகை

    தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும். அத வகையில் கடந்த 2-ந்தேதி குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து 6-ந் தேதி பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல், நேற்று முன்தினம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறை யப்பட்டதை நினைவுகூறும் வகையில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

    இந்நிலையில் 3நாட்களுக்கு பின்னர் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடு கின்றனர். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    நெல்லை

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாளை தெற்கு பஜாரில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு 12 மணிக்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி இயேசுவின் உயிர்தெழுதலை வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு இயேசு உயிர்ப்பித்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.

    இது போன்று பாளை தூய திரித்துவ பேராலயம், சீவலப்பேரி சாலை புனித அந்தோணியார் தேவாலயம், மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரம் தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகர் குழந்தை ஏசு தேவாலயம், உடையார்பட்டி இயேசுவின் திருஇருதய ஆலயம்,

    நெல்லை டவுன் அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி.நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டை அந்தோணியார் தேவாலயம், சேவியர்காலனி தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட மாநகர பகுதியில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மேலும் திசையன்விளை, அம்பை, கல்லிடைக்குறிச்சி, ராதாபுரம், வள்ளியூர், களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

    • மதுரையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராதனைகள் நடந்தன.

    மதுரை

    கிறிஸ்தவ பண்டிகை களில் குறிப்பிடத்தக்கது ஈஸ்டர். இது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று முதல் தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்தவர்கள் பிப்ரவரி 22-ந் தேதி சாம்பல் புதன் முதல் தவக்காலத்தை தொடங்கினர். இந்த நிகழ்வு ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவுடன் நிறைவுக்கு வந்தது.

    இதையொட்டி நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் திருப்பலி மற்றும் ஆராத னைகள் நடத்தப்பட்டன. மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ், ஞானஒளிவு புரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ஆனந்த், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல்நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தத்தை லூர்து, உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் நள்ளிரவு திருப்பலி நிறைவேற்றினர்.

    செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம். எல்லீஸ் நகர் தூய செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவால யங்களிலும் திருப்பலி நடத்தப்பட்டது. சி.எஸ்.ஐ மற்றும் புதிய ஜீவிய சபை உள்ளிட்ட பிற அனைத்து சபைகளிலும் அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராத னைகள் நடந்தன.

    இவற்றில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பம்- குடும்பமாக கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் 'குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று பங்குத்தந்தை அறிவித்ததும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நின்றது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வாக அமைந்தது.

    • இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
    • உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர்.

    கடலூர்:

    ஈஸ்டர் தினத்தை யொட்டி கடலூரில் உள்ள தேவால யங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்பட்டு 3-ம் நாள்உயிர்த்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இதைமுன்னிட்டு, கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்திகளில் புதிய தீபத்தை ஏந்திக்கொண்டு தேவலாயத்துக்குள் சென்றனர். 12 மணிக்கு இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூர்ந்ததை விளக்கும் விதமாக தேவலாயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்தன.

    பின்னர் பங்கு தந்தை தலைமையில் கிறிஸ்தவர்கள் கைகளில் புதிய தீபத்தை ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து காலையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புதிய மெழுகு தீபத்தை அணையாமல் வீட்டுக்கு கொண்டு சென்றனர். 40 நாட்கள் தவக்காலம் முடிந்து புத்தாடைகள் அணிந்து இனிப்பு, உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர். இதேபோன்று கடலூர் சப்- ஜெயில் சாலையில் உள்ள தூய எபிபெனி ஆலயம், பாரதி சாலையில் உள்ள ஆற்காடு லூத்தரன் திருச்சபை, செம்மண்டலம் பாவநாசர் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.
    • தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது. நேற்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து செல்லும்போதும், அந்த சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் தேவாலயத்தில் பங்கு தந்தை ஹைசிந்த் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. குமார் நகர் புனித சூசையப்பர் தேவாலயம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் ஆயர் ஆனந்த குமார் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதுபோல் ஆசர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக்கா தேவாலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும், மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த 3-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. நாளை அதிகாலையும் தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுவார்கள்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
    இயேசுநாதர் நற்போதனைகள் மனிதர்களை வாழவைக்கும் மந்திர சொற்களாக அமைந்தன. இதனைக்கண்டு இயேசுநாதர் மீது பொறாமை கொண்டவர்கள், அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கதா மலையில் சிலுவையில் அறைந்தனர்.

    இந்த நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கடை பிடித்து வருகிறார்கள். அதுபோல் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார். இந்த நாள் வெற்றி திருநாளாகவும், மகிழ்ச்சி திருநாளாகவும் ஈஸ்டர் பண்டிகை என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்-அவினாசி ரோட்டில் உள்ள பங்களா பஸ் நிறுத்தத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை ஈஸ்டர் பண்டிகையையொட்டி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆயர் வில்சன் குமார் தேவசெய்தி வழங்கினார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி அதிகாலையில் இருந்தே பலர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர்.

    இதுபோல் சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், குமார்நகர் புனித சூசையப்பர் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 
    ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் திருநாளும் ஒன்று. இந்த திருநாளுக்காக கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் அனுஷ்டிப்பார்கள். மக்களுக்காக உயிர் விட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடுவதற்காக காத்திருப்பார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று நிகழ்வாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

    ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு கொடுத்ததற்காக, நீதியை நிலைநாட்ட தூண்டியதற்காக, ஏழைகளை வாழவைத்ததற்காக, பாவிகளை மன்னித்ததற்காக, பிணிகளை போக்கியதற்காக, உண்மைகளை பேசியதற்காக இயேசு கொல்லப்பட்டார். அநீதியின், பாவத்தின் சக்திகள் அனைத்தும் சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால் இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார். இறந்த மூன்றாம் நாள் வெற்றி வீரராய்க் கல்லறையில் இருந்து உயிரோடு வெளியே வந்தார். நம்மோடே இருக்கிறார்.

    உயிர்ப்பின் சாட்சி

    கிறிஸ்து உயிர்ப்பெற்றெழுந்த காட்சியை பார்த்தவர்கள் யாருமில்லை.. உயிர்ப்புக் காட்சியைப் பார்த்த ஒரே சாட்சி இரவு என்று திருச்சபை சொல்கிறது. எனவே தான் பாஸ்கா புகழுரையை குருவானவர் பாடும்போது “ஓ... மெய்யாகவே பாக்கியம் பெற்ற இரவே, கிறிஸ்து பாதாளத்திலிருந்து உயிர்த்தெழுந்த காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்” என்று அந்த இரவை புகழ்ந்து பாடுகிறார்.

    இயேசுவின் உடல் திருடப்படவில்லை

    இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது. அவரது உடல் எங்கே? கயவர்கள் அவரது உடல் திருட்டு போய் விட்டு என்று கதை கட்டினார்கள். ஆனால் அவரது உடல் திருடப்படவில்லை. மாறாக உயிர்த்தெழுந்தது. இயேசுவின் உடலை சுற்றியிருந்த துணிகளும் தலையைச் சுற்றியிருந்த துண்டும் கல்லறையில் கிடந்ததாக யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசுவின் உடலை திருடியிருந்தால் உடலை சுற்றியிருந்த துணிகளையும் திருடியிருப்பார்கள். துணிகளை திருடாவிட்டால் கூட அவற்றை அலங்கோலமாய்ப் போட்டிருப்பார்கள். ஆனால் இங்கு துணிகள் எல்லாம் ஒழுங்கான நிலையில் இருந்ததாக நற்செய்தி கூறுவது அவரது உயிர்ப்பை உறுதியாக்குகிறது.

    இயேசுவின் உயிர்ப்பும் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பும்:

    எகிப்திய புராணத்தில் பீனிக்ஸ் என்ற ஒரு பறவை வருகின்றது. இந்தப் பறவை உயிரோடு இருக்கிறபோது தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளாது. மாறாக அதன் இனம் பெருகுவது அந்த பறவையின் இறப்பிற்குப் பின் தான். பீனிக்ஸ் பறவை இறந்து மண்ணில் மடிந்து மட்கிப் போகும்போது அது புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து புதிய பீனிக்ஸ் பறவைகள் உருவாகுமாம். அதுபோல கிறிஸ்தவ மதம் இயேசுவின் காலத்தில் உருவானதல்ல. கிறிஸ்தவ மதம் உருவாகி பெருகியது அவரது உயிர்த்தெழுதலின் பிறகுதான். கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால், கல்லறையோடு அவரது கதை முடிந்திருந்தால் கிறிஸ்தவ மதம் இல்லை. எனவே கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பு.

    உயிர்த்த இயேசுவைப் பார்த்த முதல் பெண் - மதலேன் மரியா:

    யூத முறைப்படி இறந்த உடலை அடக்கம் செய்யும்போது நறுமண பொருட்களால் அவ்வுடல் பூசப்படவேண்டும். இயேசு இறந்தது வெள்ளிக்கிழமை மாலை. ஓய்வு நாள். அதாவது சனிக்கிழமை வெள்ளி மாலையில் ஆரம்பமாகிறது. ஆனால் யூதமுறைப்படி மாலையும், பகலும் சேர்ந்து தான் ஒருநாள். இதைத்தான் தொடக்க நூலில் படைப்பின்போது “மாலையும், காலையும் சேர்ந்து முதல் நாள் ஆயிற்று” (ஆதி.1:5) என்று படிக்கிறோம்.

    எனவே ஓய்வு நாள் ஆரம்பமானதால் இயேசுவின் இறுதிச்சடங்கை சரியாக செய்ய முடியாமல் அவசர, அவசரமாக கல்லறையில் புதைத்து விட்டார்கள். இயேசுவின் மீது அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் வாரத்தின் முதல்நாள் விடியலுக்காக காத்திருந்து அதிகாலையிலே நறுமண பொருட்களுடன் கல்லறைக்குச் சென்றார்கள். அவரது உடலை எடுத்து தகுந்த மரியாதையோடு, பரிமளத்தைலம் பூசி சிறப்பான விதத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக கல்லறை அருகில் வரும்போது தான் காலியான கல்லறையைப் பார்த்து திகைத்துப் போயினர்.

    இயேசுவின் உடல் அங்கே இல்லாததால் மற்றவர்கள் எல்லோரும் போய் விட்டனர். ஆனால் மதலேன் மரியாள் மாத்திரம் எப்படியாவது இயேசுவின் உடலைத் தேடி கண்டுபிடித்து, செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடிக்க வேண்டும் என்று தனிமையில் கல்லறை அருகில் அழுதுகொண்டே இருக்கும்போது தான் உயிர்த்த இயேசுவை முதன்முறையாக பார்க்கின்ற பாக்கியம் மதலேன் மரியாளுக்குக் கிடைத்தது. மனம் திரும்பிய பாவிப்பெண்ணுக்கு கிடைத்த இந்த பேறு, மனந்திரும்பும் ஒவ்வொருவரும் இயேசுவைக் காண்பர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    சாட்சிகளை உருவாக்க பல காட்சிகள்:

    உயிர்த்தெழுந்த இயேசு இன்னும் நம்மை சிலுவையில் அறைந்தோ அல்லது கல்லால் எறிந்தோ கொன்று விடுவார்கள் என்று பயந்து தலைமறைவாக இருக்க விரும்பவில்லை. பலருக்கு காட்சி கொடுக்கின்றார். ஆண்களுக்கு, பெண்களுக்கு, சீடர்களுக்கு, வழிப்போக்கர்களுக்கு என்று பல தரப்பட்ட மக்களுக்கு காட்சி கொடுக்கின்றார். இந்தக் காட்சிகள் எதற்காக? கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளை உருவாக்க. உயிர்த்த
    இயேசுவை காட்சியில் கண்டவர்கள் எல்லாம் சாட்சியாக மாறினர்.

    சீடர்களிடத்தில் இயேசு உண்டாக்கிய மாற்றமும் உயிர்ப்புக்கு சாட்சியாக மாறுகின்றது. படைவீரர்களுக்கு பயந்து ஓடியவர்கள் வீதிக்கு வந்து உயிரைப் பணயம் வைத்து இயேசுவின் உயிர்ப்புக்கு சான்று பகிர்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு சீடர்கள் இயேசுவுக்கு நிகராகவோ, அவரை விட பெரியவராகவோ யாரையும் அவர்கள் கருதவில்லை. இயேசு மட்டுமே அவர்களது மூச்சு. ஊருக்கு அஞ்சியவர்கள் நடுத்தெருவில் நின்று போதித்தார்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவனை அழித்து விடுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்த சவுலுக்கு உயிர்த்த இயேசு காட்சி அளித்து “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.பணி. 9:5) என்று கூறியவுடன் மனமாற்றம் பெற்று கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுக்கவும் துணிந்து கிறிஸ்துவின் உன்னத சாட்சியாக மாறினார்.



    உயிர்த்த கிறிஸ்து கட்டுவோர் விலக்கிய மூலைக்கல்:

    பழைய ஏற்பாட்டில் சூசை எல்லோராலும் வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சிறையில் வீசப்பட்டு, எகிப்தியர்களுக்கு விற்கப்பட்டு “இவன் வேண்டாம்” என்று அப்புறப்படுத்திய சூசையிடம் இறுதியில் யாரை வெறுத்து தள்ளினார்களோ அந்த சூசையிடம் உணவிற்காக கையேந்தி நின்றது போல “இவன் வேண்டாம், இவனை சிலுவையில் அறையும்” என்று எல்லோராலும் வெறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இயேசு இன்று எல்லோருக்கும் வாழ்வளிக்கும் வள்ளலாக உயிர்த்தெழுந்தது கட்டுவோர் விலக்கிய கல் மூலைக்கல்லாக மாறும் என்ற இறைவார்த்தையை உண்மையென நிரூபித்துக் காட்டுகிறது.

    இறந்தும் வாழும் இயேசு

    இறந்த இயேசு இன்றும் என்றும் வாழ்கிறார். இயேசு இன்று நினைவில் வாழ்பவர் அல்ல, உண்மையாகவே வாழ்கிறார். இறந்தவர்கள் மக்களின் எண்ணத்தில், நினைவில் வாழலாம். தொடர்ந்து கடைபிடிக்கப்படும் தம் போதனைகளின் வழி வாழலாம். ஆனால் இறந்த இயேசுவின் வாழ்வு என்பது எண்ணத்திலும், நினைவிலும், கொள்கையிலும் அவர் வாழ்கிறார் என்பதன்று, அவர் உண்மையில் உயிர் வாழ்கிறார். தொடர்ந்து வாழ்கிறார். இயேசு வெறும் நினைவிலோ, கொள்கையிலோ அல்ல. மாறாக உண்மையிலே உயிர் வாழ்கிறார் என்பதை வலியுறுத்தத்தான் தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் அவர் உடலோடு உயிர் பெற்றெழுந்தார் என்பதை மீண்டும் மீண்டும் அறுதியிட்டு கூறினர்.

    எனினும் சாவுக்கு முன்னிருந்த இயேசுவின் அதே உடல் அப்படியே இருந்தது எனக் கூற முடியாது. உயிர்த்த இயேசு காலம், இடம் ஆகியவற்றை கடந்து நிற்கிறார். அடைபட்டிருந்த அறைக்குள் அவரால் நுழைய முடிந்தது. யூதேயாவிலும், கலிலேயாவிலும் பலருக்கு ஒரே காலத்தில் காட்சியளிக்க முடிந்தது. இவ்வாறு உயிர்த்த இயேசுவின் உடல் திருத்தூதர் பவுல் கூறுவது போல “அழியாதது, மாண்புரிக்குரியது. வலிமையுள்ளது. ஆவிக்குரியது”- (1 கொரி. 15: 42).

    உயிர்த்தெழுதலும் திருச்சபையின் அழியாத் தன்மையும்:

    உயிர்த்த இயேசு இனி சாகமாட்டார். அவர் என்றும் வாழ்பவர். திருச்சபையின் தலைவர் இயேசு கிறிஸ்து. திருச்சபையையும், இயேசு வையும் பிரிக்க முடியாது. அழிவில்லாத உயிர்த்த கிறிஸ்து திருச்சபையின் தலைவராக இருக்கும் வரை திருச்சபைக்கு அழிவில்லை. திருச்சபையின் உடலாகிய கிறிஸ்தவர்கள் அழிந்தாலும் அதன் தலையாகிய கிறிஸ்து அழியாதவராக இருக்கிறார். எனவே தான் இயேசுவின் உயிர்ப்பு திருச்சபையின் அழியாத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.

    இயேசு மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு ‘வித்து’. வித்து முளைத்து வாழ்வதுபோல் உயிர்த்த கிறிஸ்து இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று கூறிய இயேசு உயிர்த்து இன்று நம்மோடே வாழ்கிறார். நம்மில் வாழ்கிறார்.  குறிப்பாக ஏழை, எளியவரோடும், துன்ப துயரம் அடைந்தோரோடும், கடைநிலையில் இருப்பாரோடும் வாழ்கிறார்.

    வதைக்கப்பட்டோரோடும், நோயுற்றோரோடும், அன்னியராக்கப்பட்டோ ரோடும், அடிமைப்படுத்தப்பட்டோரோடும் வாழ்கிறார். ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
    புனித வெள்ளியையொட்டி திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    இயேசுவை சிலுவை அறைந்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைவதற்கு 40 நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடை பிடித்து வருகிறார்கள். இந்த தவக்கால உபவாச நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறார்கள். தவகால உபவாச நாட்களில் அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். யார் மீதும் கோபப்படாமல் அன்பு காட்டுவார்கள். தவக்காலத்தின் போது தான் குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன் போன்ற விசேஷ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. தவக்காலத்தில் புனித வெள்ளி முக்கிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூரில் உள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.

    திருப்பூர் பங்களா பஸ்நிறுத்தம் அருகே உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது, இதை ஆயர் வில்சன்குமார் நடத்தி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயத்தில் ஆயர் அசோக்குமார் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளில் திரளானவர் கள் கலந்து கொண்டனர்.
    ×