search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special prayer"

    • தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கம்பம்:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகையும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.

    கம்பம் கம்பமெட்டுச் சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. இந்த தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா தனது கணவரும் சினிமா இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் கம்பம் தர்ஹாவிற்கு வந்து சுமார் 15 நிமிடம் வழிபாடு செய்தனர். செல்வமணி இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தொழுகை நடத்தினார். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து தர்ஹாவை சேர்ந்தவர்கள் கூறுகையில், ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக உள்ளார். தற்போது ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வருகிறது. இதில் ரோஜா மீண்டும் நகரி பகுதியில் சட்டசபை உறுப்பினருக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெறவும், ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக ஆக வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ரோஜா வருகை குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. அவர் வந்து சென்ற பிறகே இது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவியது. 

    • நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மியத்துல் அஹ்லில் குர் ஆன் அமைப்பின் சார்பில் பெருநாள் தொழுகை ரேணுகா நகர் வளாகத்தில் நடைபெற்றது. தொழு கையினை முனிபி மகளிர் அரபி கல்லூரியின் முதல்வர் அப்துல் சமது பிர்தவ்ஸி நடத்தி வைத்தார். இந்த தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.

    அதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதே போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 28 இடங்களில் ரமலான் பண்டிகை தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    • கல்லறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்றது.
    • கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் பிரபலமானது.

    சென்னை:

    கிறிஸ்தவர்கள் சகல ஆத்மாக்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறார்கள். அந்த நாளில் மரித்த முன்னோர்களை நினைவு கூர்ந்து விஷேச பிரார்த்தனை மேற்கொள்வார்கள். முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்தும் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்துவார்கள்.

    அதன்படி கல்லறை திருநாள் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்கள் கடந்த சில நாட்களாக தூய்மைப் படுத்தும் பணி நடந்தது. கல்லறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் பிரபலமானது. அங்கு பல ஆயிரக்கணக்கான கல்லறைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை பாதுகாத்து பராமரித்து வருவதற்கு தனி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இதேபோல் காசிமேடு கல்லறை தோட்டமும் மிகப்பெரியது. இதுதவிர ஒவ்வொரு கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் தனித்தனியாக கல்லறைகள் உள்ளன.

    கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்து, லுத்தரன் உள்ளிட்ட பல்வேறு பிரிவு களை சேர்ந்த கிறிஸ்தவர்க ளும் கல்லறை திருநாளான நாளை காலையில் இருந்தே கல்லறைகளுக்கு சென்று முன்னோர்களை நினைவு கூர்ந்து வேண்டுதல் செய்வார்கள். கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடும் நாளை நடைபெறும்.

    குடும்பம் குடும்பமாக சென்று பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கல்லறைகளுக்கும் மரியாதை செலுத்துகின்றனர். மதபோதகர்கள் சிறப்பு பிராத்ததனை செய்கிறார்கள்.

    • பெண்கள் வழிபடும் தைகாக்கள் உள்பட 100 இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் நடந்தன.
    • இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் அனைவரும் குடும்பத்தின ருடன் கூடி மகிழ்வர்.

    ஆறுமுகநேரி:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் மக்கின், பொருளாளர் பஷீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேச்சாளர் ஷரீப் குத்பா பிரசங்கம் நடத்தினார்.

    தொழுகையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனிடையே காயல்பட்டினம் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல், முகைதீன் பள்ளி, புதுப்பள்ளி, மரைக்கார் பள்ளி, பிலால் பள்ளி உள்பட 30 பள்ளிவாசல்கள், பெண்கள் வழிபடும் தைகாக்கள் உள்பட 100 இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் நடந்தன. பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் அனைவரும் குடும்பத்தின ருடன் கூடி மகிழ்வர்.

    • கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர்.
    • ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    கடலூர்:

    இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நெல்லிக்குப்பம் பகுதியில் கொண்டாடப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஊர்வலமாக நகரின் முக்கிய சாலை வழியாக கொத்பா பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. பிறகு ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஏழைகளுக்கு இறைச்சி, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை குர்பானியாக வழங்கினர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    பண்ருட்டிகாந்தி ரோட்டில்உள்ளபழமை வாய்ந்த முகமது ஷா அவுலியா தர்கா வில்இருந்துஊர்வலமாக வந்துபண்ருட்டி -கடலூர் சாலையில் உள்ள ஈத்காமைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்குரமேஷ் எம்.பி. , வேல்முருகன் எம்.எல்.ஏ. ,சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன்,அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,முன்னாள்எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர்ராஜேந்திரன்,சத்யாபன்னீர்செல்வம்,சிவக்கொழுந்து,முன்னாள் நகர் மன்ற  தலைவர்கள் பஞ்சவர்ணம், பன்னீர்செல்வம், சென்னை  ஜேப்பியார்ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதி பள்ளிவாசல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நாளை பக்ரீத் பண்டிகை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
    • குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை ஜூன் (29-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரத்தில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா மைதானத்தில் நடை பெறுவது வழக்கம். இந்த முறை சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மைதானம் ஈரமாக இருப்பதால் இங்கு நடைபெற இருந்த தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக நகர் முழுவதும் ஆங்காங்கே அமைந்துள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொழுகை முடிந்ததும் குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    நாளை காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் பள்ளிவாசல்கள் மற்றும் திறந்த வெளி மைதானங்க ளிலும் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. சொந்த ஊர்களில் நடைபெறும் தொழுகையில் கலந்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடவும், வளை குடா நாடுகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக மக்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    • சிறப்பு பிரார்த்தனையில், உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • பனிமாதா பேராலயத்தில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி தலைமையில் பங்கு மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

    வள்ளியூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அம்மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டியும் நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அப்போது உயிரிழந்த வர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அம்மாநிலத்தில் அமைதி ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை நிலைக்கு திரும்பவேண்டும் என பனிமாதா பேராலயத்தில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி தலைமையில் பங்கு மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

    குறிப்பாக 53 மணி ஜெபமாலை ஏறெடுக்கப்பட்டது. இந்த பிரார்த்தனையில் உதவி பங்கு தந்தை வளன்அரசு, தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

    • தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
    • சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இப்பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி. ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார்.

    சிறப்பு பயான் உரையை வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி.அப்துல் ஹமீது ஆற்றினார்.

    பின்னர்,தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சிறப்புத் தொழுகையினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    • 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

    வேலூர்:

    வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

    அதேபோல் வேலூர் டவுன் சைதாப்பேட்டை பெரிய மசூதி, சின்ன மசூதி, கஸ்பா மசூதி, டிட்டர்லைன் மசூதி, சைதாப்பேட்டை மக்கா மசூதி, கானாறு மசூதி, மக்கானில் உள்ள மசூதி மற்றும் பேரணாம்பட்டில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

    பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர். அனைத்து இடங்களிலும் கூட்டுத்தொழுகை நடந்ததால் இஸ்லாமியர்கள் உற்சா கத்துடன் காணப்பட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.
    • தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

    திருப்பூர்:

    இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும். ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருந்த பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் , பல்லடம் ,உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது . இதில் ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் . தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர் . இதைப்போல் பெரிய தோட்டம் கே .ஜி. கார்டன் , செரங்காடு, கோம்பை தோட்டம் உள்ளிட்ட 27 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ரம்ஜானையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களது நண்பர்கள்,உறவினர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கினர்.

    • இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
    • உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர்.

    கடலூர்:

    ஈஸ்டர் தினத்தை யொட்டி கடலூரில் உள்ள தேவால யங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்பட்டு 3-ம் நாள்உயிர்த்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இதைமுன்னிட்டு, கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்திகளில் புதிய தீபத்தை ஏந்திக்கொண்டு தேவலாயத்துக்குள் சென்றனர். 12 மணிக்கு இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூர்ந்ததை விளக்கும் விதமாக தேவலாயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்தன.

    பின்னர் பங்கு தந்தை தலைமையில் கிறிஸ்தவர்கள் கைகளில் புதிய தீபத்தை ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து காலையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புதிய மெழுகு தீபத்தை அணையாமல் வீட்டுக்கு கொண்டு சென்றனர். 40 நாட்கள் தவக்காலம் முடிந்து புத்தாடைகள் அணிந்து இனிப்பு, உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர். இதேபோன்று கடலூர் சப்- ஜெயில் சாலையில் உள்ள தூய எபிபெனி ஆலயம், பாரதி சாலையில் உள்ள ஆற்காடு லூத்தரன் திருச்சபை, செம்மண்டலம் பாவநாசர் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
    • ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

    கடலூர்:

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரு க்குள் கழுதை மேல் அமர்ந்துவரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பா டல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குருத்தோ லை பவனி நடைபெறும். அதன்படி குருத்தோலை ஞாயிறான இன்று காலை கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் குருத் தோலைகளை ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாயலத்தை வந்தடைந்தனர். இதில் ஏ ராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் ஆற்காடுலுத்தரன் திருச்சபை மற்றும் கடலூர் செம்மண்டலம், திருதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்ப ட்டாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கிறிஸ்த வர்கள் ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

    ×