search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லறை திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை
    X

    கல்லறை திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை

    • கல்லறை திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
    • 1,000த்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

    அரியலூர்:

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றறது. ஆண்டிமடம் அருகேயுள்ள தென்னூர் புனித லூர்து அன்னை ஆலய கல்லறைத் தோட்டம் மற்றும்வரத–ராசன் பேட்டைஅலங்கார அன்னை ஆலய கல்லறைத் தோட்டத்தில் 1,000த்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று தங்களது மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்தனர்.

    அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், பழ வகைகள் படையலிட்டு, பின்னர் அதில் மெழுகு–வர்த்திகள், ஊதுவர்த்திகள் கொண்டு அவர்கள் நினை–வாக பிரார்த்தனை செய்து சிலுவையை நட்டும் அஞ்சலி செலுத்தினர்.

    பங்குதந்தை வின்செ–ன்ட்ரோச்மாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதே போல் தென்னூர் லூர்து ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை பிலிப்சந்தியாகு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நெட்டலகுறிச்சி புனித சவேரியார் ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குலமாணிக்கம் இஞ்ஞாசியர், புதுக்கோட்டை தூய மங்கள அன்னை, ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் ஜயங்கொ–ண்டம், கூவத்தூர்,அரிய–லூர், உடையா–ர்பாளையம், செந்துறை, கல்லக்குடி கிராமம் உள்ளிட்ட பகுதி–களிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    Next Story
    ×