என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்டர்"

    • எவ்வளவு பெரிய மரண தாகம், கொலைக்கான தாகம், நம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்!
    • உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அமைதி, தீர்வு மற்றும் நம்பிக்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

    ஏழைகள் மீதான அக்கறை மற்றும் முதலாளித்துவத்தை விமர்சிப்பதன் காரணமாக, சேரிகளின் போப் என்று அழைக்கப்பட்ட,   போப் பிரான்சிஸ், கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இன்று தனது 88வது வயதில் காலமானார்.

    இன்று போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் துக்கம் அனுசரிக்கும் வேளையில் நேற்று அவரின் கடைசி ஈஸ்டர் செய்தி உலக அமைதிக்கான கருத்துக்களை தாங்கி நிற்கிறது. இந்த செய்தி உலகிற்கு அவரின் ஒரு ஆழமான பிரியாவிடையாக மாறியுள்ளது.

    அவரது ஈஸ்டர் செய்தியில்,

    "எவ்வளவு பெரிய மரண தாகம், கொலைக்கான தாகம், நம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்! பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது, குடும்பங்களுக்குள்ளும் கூட, எவ்வளவு வன்முறையை நாம் காண்கிறோம்! பாதிக்கப்படக்கூடியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது சில நேரங்களில் எவ்வளவு அவமதிப்பு இழைக்கப்படுகிறது!.

    இந்த நாளில், நாம் அனைவரும் புதிதாக நம்பிக்கை வைத்து, நம்மை விட வித்தியாசமானவர்கள், அல்லது தொலைதூர நாடுகளிலிருந்து வந்து, அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்! ஏனென்றால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்.

    பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவர்களின் துன்பங்களுக்கும், அனைத்து இஸ்ரேலிய மக்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் எனது நெருக்கத்தை வெளிப்படுத்துகிறேன்.

    உலகம் முழுவதும் யூத-விரோத சூழல் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், காசா மக்களையும், குறிப்பாக அதன் கிறிஸ்தவ சமூகத்தையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

    அங்கு பயங்கரமான மோதல் தொடர்ந்து மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தி, வருந்தத்தக்க மனிதாபிமான நெருக்கடியை உருவாக்குகிறது. போரிடும் தரப்புகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும், அமைதியின் எதிர்காலத்தை விரும்பும் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவவும் அழைப்பு விடுகிறேன்.

    மத்திய கிழக்கில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களுக்காகவும், லெபனான், ஏமன் மற்றும் சிரியாவில் நெருக்கடியில் உள்ளவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.

    உயிர்த்தெழுந்த கிறிஸ்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு, ஈஸ்டர் பரிசு அமைதியை வழங்குவாராக, மேலும் நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளைத் தொடர அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கட்டும்.

    தெற்கு காகசஸ், மேற்கு பால்கன், ஆப்பிரிக்கா, மியான்மர் மற்றும் வன்முறை, அரசியல் அமைதியின்மை மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளில் மோதல்கள் மற்றும் துன்பங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அமைதி, தீர்வு மற்றும் நம்பிக்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

    "நமது உலகில் அரசியல் பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். கிடைக்கக்கூடிய வளங்களை ஏழைகளுக்கு கொடுத்து உதவவும், பசியை எதிர்த்துப் போராடவும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேண்டும். இவை அமைதியின் ஆயுதங்கள். மரணத்தின் விதைகளை விதைப்பதற்குப் பதிலாக, எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஆயுதங்கள்!

    மனிதநேயக் கொள்கை நமது அன்றாட நடவடிக்கைகளின் அடையாளமாக ஒருபோதும் இருக்கத் தவறக்கூடாது. பாதுகாப்பற்ற பொதுமக்கள் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்களைத் தாக்குவதன் மூலம் ஆன்மாவும் மனித கண்ணியமும் தாக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    இந்த ஜூபிலி ஆண்டில், போர்க் கைதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஈஸ்டர் ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.  

    • வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி கையசைத்தார்.
    • அவரது உரையில் உலக அமைதியை வலியுறுத்தினார்.

    இன்று ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (ஏப். 20) மக்களை நேரடியாகச் சந்தித்தார்.

    வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

    உலக அமைதியை வலியறுத்திய அவரது உரையில், "காசாவின் நிலைமை பரிதாபகரமானது. பசியால் வாடும் மக்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் துன்பப்படும் மக்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாக கூறினார்.

    காசா எல்லையில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என முறையிடுவதாகவும், பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    88 வயதான போப், சுவாசக் கோளாறு காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற அவர், 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

    • சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.
    • தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது. நேற்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து செல்லும்போதும், அந்த சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் தேவாலயத்தில் பங்கு தந்தை ஹைசிந்த் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. குமார் நகர் புனித சூசையப்பர் தேவாலயம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் ஆயர் ஆனந்த குமார் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதுபோல் ஆசர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக்கா தேவாலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும், மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த 3-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. நாளை அதிகாலையும் தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுவார்கள்.

    • கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு
    • உயிர்த்த இயேசுவின் சிறப்பு ஆசீர் வழங்கப்படும்

    நாகர்கோவில் :

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒறுத்தல் முயற்சி மற்றும் உபவாசம் போன்றவற்றில் ஈடுபட்டுவந்தனர்.

    புனித வாரம் தொடங்கி யதையொட்டி கடந்த 2-ந்தேதி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனியும், 6-ந்தேதி புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று புனித வெள்ளி திருச்சி லுவை வழிபாடுகளும் நடந்தது. இன்று நள்ளிரவு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் பாஸ்கா திருவிழிப்பு சிறப்பு வழிபா டுகள் மற்றும் திருப்பலி நடக்கிறது.

    இதன் தொடக்க நிகழ்ச்சியாக ஆலயத்தில் பாஸ்கா மெழுகுவர்த்தியில் ஒளியேற்றும் வழிபாடு நடைபெறும்.

    பாஸ்கா மெழுகு வர்த்தியில் அலங்கரிக்கப் பட்ட சிலுவையில் பங்குத் தந்தையர்கள் "அகரமும் நகரமும் காலங்களும் அவருடையன, யுகங்களும் அவருடையன" என எழுத்தாணியால் வரை வார்கள். அதன்பின் மெழுகு வர்த்தியில் இயேசு வின் 5 காயங்கள் பதிவு செய்யப்படும். பின்னர் பாஸ்கா திரியில் ஒளி யேற்றப்படும். தொடர்ந்து மக்கள் ஆலயத்திற்குள் பவனியாக வருவார்கள். ஆலய வாசல் வந்தவுடன் பங்குத்தந்தை கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடுவார்.

    அப்போது மக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் அனைத்து மெழுகு திரிகளையும் பற்ற வைப்பார்கள். உடனே ஆலயத்தின் அனைத்து விளக்குகளும் ஒளி யேற்றப்படும்.தொடர்ந்து வார்த்தை, வழிபாடு தொடங்கும். பழைய ஏற்பாடு நூலில் இருந்து மூன்று வாசகமும், புதிய ஏற்பாட்டு நூலில் இருந்து இரண்டு வாசகமும் வாசிக்கப்படும். ஐந்து வாசகங்களுக்கும் பதிலுரை பாடல்களும் பாடப்படும். தொடர்ந்து உன்னதங் களிலே என்ற வானவர்கீதம் பாடப்படும். அப்போது இயேசு உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து திருமுழுக்கு வழிபாடு, புனிதர்களின் மன்றாட்டு மாலை, தண்ணீருக்கு ஆசி வழங்கு தல் ஆகியவை நடைபெறும்.

    அப்போது பங்கு தந்தை பாஸ்கா திரியை மூன்று முறை தண்ணீரில் வைத்து ஆசீர்வதிப்பார். தொடர்ந்து திருமுழுக்கு வாக்குறுதி களை புதுப்பித்தல், நம்பிக்கையாளர் மன்றாட்டு, இறைமக்கள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு, பாஸ்கா முகவுரை ஆகியவை நடைபெறும். இறுதியில் உயிர்த்த இயேசுவின் சிறப்பு ஆசீர் வழங்கப்படும். திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.

    கோட்டார் சவேரியார் பேராலயம், நாகர்கோவில் அசிசி ஆலயம், புன்னை நகர் புனித லூர்து அன்னை ஆலயம், குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயம், தக்கலை எலியாசியார் ஆலயம், கண்டன்விளை புனித குழந்தை ஏசுவின் தெரசாள் ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடற்கரை கிராமங்களில் இருந்து வேலைக்காக வெளியூர் சென்றவர்கள் பலரும் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இதனால் கடற்கைரை கிராமங்கள் களை கட்டி உள்ளன.

    மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடை பெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டார்
    • அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி

    நாகர்கோவில், ஏப். 9-

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.

    அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாளாகும். இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டார்.பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி திருப்பலி நிறைவேற்றினார். அப்போது அங்கிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசு வாழ்த்து பாடினார்.நாகர்கோவில் அசிசி ஆலயத்தில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி புனித அலங்கார உபகர மாதா ஆலயம் குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துவ அரசர் ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று காலை நடந்த பிரார்த்தனையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்கள்.

    இதையடுத்து கடற்கரை கிராமங்கள் களை கட்டி இருந்தது. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை அனைத்து மீனவ கிராமங்களிலும் ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு
    • இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    சேலம்:

    கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்ப டும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்க ளால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்கா லத்தின் இறுதி வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. அதனைதொடர்ந்து பெரிய வியாழன் நடை பெற்றது. ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியா ழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நேற்றுமுன்தினம் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை, சிலுவை பாதை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தேவா லயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொண்டனர்.

    சேலம் சூரமங்கலம் இருதய ஆண்டவர் பேரா லயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயம், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயத்தி லும் ஈஸ்டரை முன்னிட்டு பண்டிகை சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.

    ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி ஆலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம், கோட்டை லெக்லர் ஆலயம், சன்னியாசிகுண்டு புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல்லில் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதேபோல் சேலம் சாலையில் உள்ள அசெம்பளி ஆப் காட் திருச்சபையிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

    • மதுரையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராதனைகள் நடந்தன.

    மதுரை

    கிறிஸ்தவ பண்டிகை களில் குறிப்பிடத்தக்கது ஈஸ்டர். இது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று முதல் தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்தவர்கள் பிப்ரவரி 22-ந் தேதி சாம்பல் புதன் முதல் தவக்காலத்தை தொடங்கினர். இந்த நிகழ்வு ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவுடன் நிறைவுக்கு வந்தது.

    இதையொட்டி நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் திருப்பலி மற்றும் ஆராத னைகள் நடத்தப்பட்டன. மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ், ஞானஒளிவு புரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ஆனந்த், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல்நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தத்தை லூர்து, உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் நள்ளிரவு திருப்பலி நிறைவேற்றினர்.

    செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம். எல்லீஸ் நகர் தூய செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவால யங்களிலும் திருப்பலி நடத்தப்பட்டது. சி.எஸ்.ஐ மற்றும் புதிய ஜீவிய சபை உள்ளிட்ட பிற அனைத்து சபைகளிலும் அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராத னைகள் நடந்தன.

    இவற்றில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பம்- குடும்பமாக கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் 'குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று பங்குத்தந்தை அறிவித்ததும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நின்றது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வாக அமைந்தது.

    • சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.
    • பல்வேறு ஆலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    சென்னை:

    கிறிஸ்தவ தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. தவக் காலத்தின் இறுதி வாரம் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து இயேசு சீடனின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டது.

    அடுத்த நாள் நேற்று முன் தினம் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடை பிடிக்கப்பட்டு சிலுவைப் பாதை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சென்னையில் முக்கிய தேவாலயங்களான சாந்தோம், பெசன்ட் நகர், சின்னமலை, ராயபுரம், எழும்பூர், திரு இருதய ஆண்டவர் ஆலயம், கதீட்ரல் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    ஏராளமானோர் மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சாந்தோம் ஆலயத்தில் மயிலை மறை மாவட்ட கத்தோலிக்க பேராயர் ஜார்ஜ் அந்தோனி சாமி கதீட்ரல் ஆலயத்தில் சி.எஸ்.ஐ. பிஷப் ஜார்ஜ் ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    • மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர்.
    • கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னை:

    இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மீது பவனியாக அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது குருத்தோலை களை பிடித்தவாறு ஜெருசேலம் மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும், பவனியாக சென்றனர்.

    சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) ஆலயங்கள், மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்தே, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

    சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், சின்னமலை தேவாலயம், கத்தீட்ரல் பேராலயம், புதுப்பேட்டை புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

     குருத்தோலை பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்ற பாடலை பாடியபடி சென்ற னர். பின்னர் ஆலயங்களில் பேராயர்கள், பாதிரியர்கள், போதகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    • கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
    • புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரை துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

    இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகள் குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோல சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி இராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்து கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரைவிட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.
    • பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் ஈஸ்டர் பண்டிகைக்காக சென்ற 45 பேர் பஸ் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மோரியா நகரில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 46 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்

    அந்த பஸ் மலைப்பாதை யில் உள்ள ஒரு பெரிய பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கீழே பாய்ந்ந்தது.

    சுமார் 165 அடி உயரத்தில் இருந்து விழுந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் உயிர் பயத்தில் அலறினார்கள். பஸ்சும் சுக்குநூறாக நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.

    என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் பெண்கள் உள்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங் களுடன் உயிர் தப்பினார்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் உடல்களை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சிதைந்து காணப்பட்டது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் திருநாளும் ஒன்று. இந்த திருநாளுக்காக கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் அனுஷ்டிப்பார்கள். மக்களுக்காக உயிர் விட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடுவதற்காக காத்திருப்பார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று நிகழ்வாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

    ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு கொடுத்ததற்காக, நீதியை நிலைநாட்ட தூண்டியதற்காக, ஏழைகளை வாழவைத்ததற்காக, பாவிகளை மன்னித்ததற்காக, பிணிகளை போக்கியதற்காக, உண்மைகளை பேசியதற்காக இயேசு கொல்லப்பட்டார். அநீதியின், பாவத்தின் சக்திகள் அனைத்தும் சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால் இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார். இறந்த மூன்றாம் நாள் வெற்றி வீரராய்க் கல்லறையில் இருந்து உயிரோடு வெளியே வந்தார். நம்மோடே இருக்கிறார்.

    உயிர்ப்பின் சாட்சி

    கிறிஸ்து உயிர்ப்பெற்றெழுந்த காட்சியை பார்த்தவர்கள் யாருமில்லை.. உயிர்ப்புக் காட்சியைப் பார்த்த ஒரே சாட்சி இரவு என்று திருச்சபை சொல்கிறது. எனவே தான் பாஸ்கா புகழுரையை குருவானவர் பாடும்போது “ஓ... மெய்யாகவே பாக்கியம் பெற்ற இரவே, கிறிஸ்து பாதாளத்திலிருந்து உயிர்த்தெழுந்த காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்” என்று அந்த இரவை புகழ்ந்து பாடுகிறார்.

    இயேசுவின் உடல் திருடப்படவில்லை

    இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது. அவரது உடல் எங்கே? கயவர்கள் அவரது உடல் திருட்டு போய் விட்டு என்று கதை கட்டினார்கள். ஆனால் அவரது உடல் திருடப்படவில்லை. மாறாக உயிர்த்தெழுந்தது. இயேசுவின் உடலை சுற்றியிருந்த துணிகளும் தலையைச் சுற்றியிருந்த துண்டும் கல்லறையில் கிடந்ததாக யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசுவின் உடலை திருடியிருந்தால் உடலை சுற்றியிருந்த துணிகளையும் திருடியிருப்பார்கள். துணிகளை திருடாவிட்டால் கூட அவற்றை அலங்கோலமாய்ப் போட்டிருப்பார்கள். ஆனால் இங்கு துணிகள் எல்லாம் ஒழுங்கான நிலையில் இருந்ததாக நற்செய்தி கூறுவது அவரது உயிர்ப்பை உறுதியாக்குகிறது.

    இயேசுவின் உயிர்ப்பும் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பும்:

    எகிப்திய புராணத்தில் பீனிக்ஸ் என்ற ஒரு பறவை வருகின்றது. இந்தப் பறவை உயிரோடு இருக்கிறபோது தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளாது. மாறாக அதன் இனம் பெருகுவது அந்த பறவையின் இறப்பிற்குப் பின் தான். பீனிக்ஸ் பறவை இறந்து மண்ணில் மடிந்து மட்கிப் போகும்போது அது புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து புதிய பீனிக்ஸ் பறவைகள் உருவாகுமாம். அதுபோல கிறிஸ்தவ மதம் இயேசுவின் காலத்தில் உருவானதல்ல. கிறிஸ்தவ மதம் உருவாகி பெருகியது அவரது உயிர்த்தெழுதலின் பிறகுதான். கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால், கல்லறையோடு அவரது கதை முடிந்திருந்தால் கிறிஸ்தவ மதம் இல்லை. எனவே கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பு.

    உயிர்த்த இயேசுவைப் பார்த்த முதல் பெண் - மதலேன் மரியா:

    யூத முறைப்படி இறந்த உடலை அடக்கம் செய்யும்போது நறுமண பொருட்களால் அவ்வுடல் பூசப்படவேண்டும். இயேசு இறந்தது வெள்ளிக்கிழமை மாலை. ஓய்வு நாள். அதாவது சனிக்கிழமை வெள்ளி மாலையில் ஆரம்பமாகிறது. ஆனால் யூதமுறைப்படி மாலையும், பகலும் சேர்ந்து தான் ஒருநாள். இதைத்தான் தொடக்க நூலில் படைப்பின்போது “மாலையும், காலையும் சேர்ந்து முதல் நாள் ஆயிற்று” (ஆதி.1:5) என்று படிக்கிறோம்.

    எனவே ஓய்வு நாள் ஆரம்பமானதால் இயேசுவின் இறுதிச்சடங்கை சரியாக செய்ய முடியாமல் அவசர, அவசரமாக கல்லறையில் புதைத்து விட்டார்கள். இயேசுவின் மீது அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் வாரத்தின் முதல்நாள் விடியலுக்காக காத்திருந்து அதிகாலையிலே நறுமண பொருட்களுடன் கல்லறைக்குச் சென்றார்கள். அவரது உடலை எடுத்து தகுந்த மரியாதையோடு, பரிமளத்தைலம் பூசி சிறப்பான விதத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக கல்லறை அருகில் வரும்போது தான் காலியான கல்லறையைப் பார்த்து திகைத்துப் போயினர்.

    இயேசுவின் உடல் அங்கே இல்லாததால் மற்றவர்கள் எல்லோரும் போய் விட்டனர். ஆனால் மதலேன் மரியாள் மாத்திரம் எப்படியாவது இயேசுவின் உடலைத் தேடி கண்டுபிடித்து, செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடிக்க வேண்டும் என்று தனிமையில் கல்லறை அருகில் அழுதுகொண்டே இருக்கும்போது தான் உயிர்த்த இயேசுவை முதன்முறையாக பார்க்கின்ற பாக்கியம் மதலேன் மரியாளுக்குக் கிடைத்தது. மனம் திரும்பிய பாவிப்பெண்ணுக்கு கிடைத்த இந்த பேறு, மனந்திரும்பும் ஒவ்வொருவரும் இயேசுவைக் காண்பர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    சாட்சிகளை உருவாக்க பல காட்சிகள்:

    உயிர்த்தெழுந்த இயேசு இன்னும் நம்மை சிலுவையில் அறைந்தோ அல்லது கல்லால் எறிந்தோ கொன்று விடுவார்கள் என்று பயந்து தலைமறைவாக இருக்க விரும்பவில்லை. பலருக்கு காட்சி கொடுக்கின்றார். ஆண்களுக்கு, பெண்களுக்கு, சீடர்களுக்கு, வழிப்போக்கர்களுக்கு என்று பல தரப்பட்ட மக்களுக்கு காட்சி கொடுக்கின்றார். இந்தக் காட்சிகள் எதற்காக? கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளை உருவாக்க. உயிர்த்த
    இயேசுவை காட்சியில் கண்டவர்கள் எல்லாம் சாட்சியாக மாறினர்.

    சீடர்களிடத்தில் இயேசு உண்டாக்கிய மாற்றமும் உயிர்ப்புக்கு சாட்சியாக மாறுகின்றது. படைவீரர்களுக்கு பயந்து ஓடியவர்கள் வீதிக்கு வந்து உயிரைப் பணயம் வைத்து இயேசுவின் உயிர்ப்புக்கு சான்று பகிர்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு சீடர்கள் இயேசுவுக்கு நிகராகவோ, அவரை விட பெரியவராகவோ யாரையும் அவர்கள் கருதவில்லை. இயேசு மட்டுமே அவர்களது மூச்சு. ஊருக்கு அஞ்சியவர்கள் நடுத்தெருவில் நின்று போதித்தார்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவனை அழித்து விடுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்த சவுலுக்கு உயிர்த்த இயேசு காட்சி அளித்து “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.பணி. 9:5) என்று கூறியவுடன் மனமாற்றம் பெற்று கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுக்கவும் துணிந்து கிறிஸ்துவின் உன்னத சாட்சியாக மாறினார்.



    உயிர்த்த கிறிஸ்து கட்டுவோர் விலக்கிய மூலைக்கல்:

    பழைய ஏற்பாட்டில் சூசை எல்லோராலும் வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சிறையில் வீசப்பட்டு, எகிப்தியர்களுக்கு விற்கப்பட்டு “இவன் வேண்டாம்” என்று அப்புறப்படுத்திய சூசையிடம் இறுதியில் யாரை வெறுத்து தள்ளினார்களோ அந்த சூசையிடம் உணவிற்காக கையேந்தி நின்றது போல “இவன் வேண்டாம், இவனை சிலுவையில் அறையும்” என்று எல்லோராலும் வெறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இயேசு இன்று எல்லோருக்கும் வாழ்வளிக்கும் வள்ளலாக உயிர்த்தெழுந்தது கட்டுவோர் விலக்கிய கல் மூலைக்கல்லாக மாறும் என்ற இறைவார்த்தையை உண்மையென நிரூபித்துக் காட்டுகிறது.

    இறந்தும் வாழும் இயேசு

    இறந்த இயேசு இன்றும் என்றும் வாழ்கிறார். இயேசு இன்று நினைவில் வாழ்பவர் அல்ல, உண்மையாகவே வாழ்கிறார். இறந்தவர்கள் மக்களின் எண்ணத்தில், நினைவில் வாழலாம். தொடர்ந்து கடைபிடிக்கப்படும் தம் போதனைகளின் வழி வாழலாம். ஆனால் இறந்த இயேசுவின் வாழ்வு என்பது எண்ணத்திலும், நினைவிலும், கொள்கையிலும் அவர் வாழ்கிறார் என்பதன்று, அவர் உண்மையில் உயிர் வாழ்கிறார். தொடர்ந்து வாழ்கிறார். இயேசு வெறும் நினைவிலோ, கொள்கையிலோ அல்ல. மாறாக உண்மையிலே உயிர் வாழ்கிறார் என்பதை வலியுறுத்தத்தான் தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் அவர் உடலோடு உயிர் பெற்றெழுந்தார் என்பதை மீண்டும் மீண்டும் அறுதியிட்டு கூறினர்.

    எனினும் சாவுக்கு முன்னிருந்த இயேசுவின் அதே உடல் அப்படியே இருந்தது எனக் கூற முடியாது. உயிர்த்த இயேசு காலம், இடம் ஆகியவற்றை கடந்து நிற்கிறார். அடைபட்டிருந்த அறைக்குள் அவரால் நுழைய முடிந்தது. யூதேயாவிலும், கலிலேயாவிலும் பலருக்கு ஒரே காலத்தில் காட்சியளிக்க முடிந்தது. இவ்வாறு உயிர்த்த இயேசுவின் உடல் திருத்தூதர் பவுல் கூறுவது போல “அழியாதது, மாண்புரிக்குரியது. வலிமையுள்ளது. ஆவிக்குரியது”- (1 கொரி. 15: 42).

    உயிர்த்தெழுதலும் திருச்சபையின் அழியாத் தன்மையும்:

    உயிர்த்த இயேசு இனி சாகமாட்டார். அவர் என்றும் வாழ்பவர். திருச்சபையின் தலைவர் இயேசு கிறிஸ்து. திருச்சபையையும், இயேசு வையும் பிரிக்க முடியாது. அழிவில்லாத உயிர்த்த கிறிஸ்து திருச்சபையின் தலைவராக இருக்கும் வரை திருச்சபைக்கு அழிவில்லை. திருச்சபையின் உடலாகிய கிறிஸ்தவர்கள் அழிந்தாலும் அதன் தலையாகிய கிறிஸ்து அழியாதவராக இருக்கிறார். எனவே தான் இயேசுவின் உயிர்ப்பு திருச்சபையின் அழியாத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.

    இயேசு மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு ‘வித்து’. வித்து முளைத்து வாழ்வதுபோல் உயிர்த்த கிறிஸ்து இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று கூறிய இயேசு உயிர்த்து இன்று நம்மோடே வாழ்கிறார். நம்மில் வாழ்கிறார்.  குறிப்பாக ஏழை, எளியவரோடும், துன்ப துயரம் அடைந்தோரோடும், கடைநிலையில் இருப்பாரோடும் வாழ்கிறார்.

    வதைக்கப்பட்டோரோடும், நோயுற்றோரோடும், அன்னியராக்கப்பட்டோ ரோடும், அடிமைப்படுத்தப்பட்டோரோடும் வாழ்கிறார். ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
    ×