என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிது நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என பேசிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து கோயம்பேடு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இதனால் வெளி மாவட்டங்கள் செல்லும் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×