search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பு"

    • ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணெய் கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்ட மிச்சாங் புயல், எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளது என்றே கூறலாம். தாளங்குப்பம், நெட்டுக் குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சின்னக் குப்பம், முகத்துவாரம் குப்பம், சடையங் குப்பம், சிலிகர் பாதை கிராமம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்களும் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இனி என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 படகுகளும், வலைகளும் எண்ணை கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 797 பைபர் படகுகள் மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி படகுகளை சீரமைத்து பயன்படுத்துவதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால் அரசின் நிவாரண உதவிக்காக மீனவர்கள் காத்திருக்கிறார்கள். எண்ணை கழிவுகளில் மூழ்கிய வலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருப்பதாகவும், எனவே மீன்பிடி வலைகளை புதிதாகவே வாங்க வேண்டி உள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், வலைகளுக்கு ரூ.5 ஆயிரம் என 15 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேத மதிப்புகளை கணக்கிட்டு மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எண்ணை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த போதிலும் நேற்று முதலே அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இன்று 2-வது நாளாக படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணை கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்களின் மூலமாக நேற்று தொடங்க இருந்த பணிகள் நடைபெற வில்லை. இன்று அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணை கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து எண்ணைக் கழிவுகள் முழுவதையும் அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதற்கு முன்னரே எண்ணை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறது.
    • யார்டுகளில் 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள் வீடுகளும் தப்பவில்லை.

    இந்நிலையில் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் சில மணல் குவாரி ஒப்பந்ததாரர்களும் சிக்கி உள்ளனர். இவர்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் திருச்சி, கரூர், வேலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது அங்கிருந்த ஒப்பந்த தாரர்களின் ஆட்கள் ஓட்டம் பிடித்தனர்.

    தற்போது சோதனைகள் முடிந்தாலும், யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் யார்டுகளில் லாரிகளுக்கு மணல் வழங்கும் பணிகள் முடங்கியுள்ளது.

    104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறது.

    ஆன்லைன் முறையில் மக்கள் பணம் செலுத்தினாலும், லாரிகளுக்கு யார்டுகளில் மணல் அள்ளிப் போடும் பணியில் ஈடுபடுபவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

    பணம் செலுத்தியவர்களுக்காக மணல் அள்ளிச் சென்ற லாரிகள் மணலுக்காக காத்திருக்கின்றன. இந்த யார்டுகளில் 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை. இதனால் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலசங்க தலைவர் ஐ.கே.எஸ்.நாராயணன் கூறுகையில், கடந்த 12-ந்தேதியில் இருந்து மணல், சவுடு குவாரிகள் இயங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட லாரிகள் மணல் அள்ளும் 'ஸ்டாக் பாயிண்டில்' ஒரு வாரமாக நின்று கொண்டிருக்கிறது.

    லாரி டிரைவர்கள் பசி பட்டினியுடன் காத்திருக்கிறார்கள். அங்கு நிற்கும் லாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து உள்ளனர்.

    இந்த விசயத்தில் முதலமைச்சர் தலையிட்டு உடனடியாக மீண்டும் மணல் குவாரிகள் செயல்பட நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
    • 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழக நிறுவனங்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது தினந்தோறும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.

    சமீபத்தில் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி 2021-22-ம் ஆண்டில் தினசரி இழப்பு ரூ.18 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனாலும் சராசரி தினசரி இழப்பு 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை ரூ.14.8 கோடியாக உள்ளது.

    கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்தது. இதில் ரூ.6,705.69 கோடி வருவாய் டிக்கெட் கட்டணம் மூலம் வந்தது. மேலும் ரூ.5,256.86 கோடி வருவாய் விளம்பரம் உள்ளிட்ட இதர வகைகளில் இருந்து கிடைத்தது.

    ஆனால் கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ.9,015 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 53 சதவீதம் ஆகும். எரிபொருளுக்காக ரூ.4,815.94 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது 28 சதவீதம் ஆகும்.

    பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு இலவச பயணத்தை வழங்கி வருகிறது. இதற்கான கட்டணத்தை அரசு, போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தி வருகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் அரசு மூலம், போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்கும் தினசரி வருவாய் ரூ.73.64 லட்சமாக குறைந்தது. அது 2022-23 நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை தினசரி வருமானம் ரூ.1.7 கோடியாக உயர்ந்துள்ளது.

    செலவுகளை குறைப்பதற்காக சமீப ஆண்டுகளாக போக்குவரத்து கழக நிறுவனங்கள் பல வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இதன் காரணமாக 2019-20 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு நாளைக்கு அரசு பஸ்களின் மொத்த பயண தூரம் 83.65 லட்சம் கிலோ மீட்டரில் இருந்து ரூ.77.81 லட்சம் கிலோ மீட்டராக குறைந்துள்ளது. பஸ் சேவைகளின் எண்ணிக்கையும் 19,290-ல் இருந்து 18,723 ஆக குறைந்துள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளில் எரி பொருள் செலவுகள் ரூ.955 கோடி அதிகரித்துள்ள போதிலும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் பஸ் கட்டணம் உயரவில்லை.

    • நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • சட்டப்பேரவை பொது கணக்கு குழுத் தலைவர் குற்றச்சாட்டு

    அரியலூர்,

    அரியலூரில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், சரஸ்வதி, சிந்தனச்செல்வன், மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சிமெண்ட் ஆலை, உயரிய படிம அருங்காட்சியகம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஆய்வு செய்தனர்.பின்னர் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது,கடந்த ஆட்சியில் அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் விலையற்ற பொருள்களை சரியாக பரிசீலனை செய்யாமல் கொடுத்ததில் ரூ.3.23 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிட நல்லது துறை சார்பில் மாணவர்களுக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை செலவு செய்யாமல் மீண்டும் அத்துறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கனிம வளங்களை வெட்டி எடுத்ததில் தவறுகள் நடந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெரும் அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், பேரவை செயலாளர் சீனிவாசன், சார்வு செயலாளர் பாலசீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம்.
    • பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக பல்வேறு பகுதிகளில் செண்டி, ரோஜா பூ ஆகியவை பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் செம்மண் பகுதியான தஞ்சாவூர் அடுத்த திருக்கானூர்பட்டியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சென்டி பூ சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து விவசாயி கள் கூறுகையில், 45 நாட்களில் செடி வைத்து பூ பூத்து விடும். பனி காலம் தொடங்குவதற்கு முன்பே பூ அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கியும் விற்பனை என்பது மந்தமாகவே உள்ளது.

    ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம். ஒரு கிலோ பூவின் விலை ரூ.60-க்கு விற்பனை செய்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.

    ஆனால் பூவின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு பூ சாகுபடியை மேம்படுத்த வங்கி கடன், மானிய விலையில் உரம், விதை ஆகியவை வழங்க வேண்டும்.

    சொட்டு நீர் குழாய் உள்ளிட்ட கருவிகளை மானிய விலையில் வாங்கினால் தங்களுக்கு மேலும் அதிக மகசூல் கிடைக்கும். இதனால் கூடுதல் லாபம் பெற முடியும் என்றனர்.

    • பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆன்லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடாமல் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆன்லைன் மோசடி தொடர்பாக கொடுக் கப்பட்ட புகாரின் அடிப்ப டையில் போலீசார் விசாரித்து 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 பணத்தை மீட்டு இன்று அவர்களிடம் ஒப்ப டைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதை உரியவர்களிடம் வழங்கி னார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி ஜிபே, போன் பே மூலமாக மோசடி என பல மோசடிகள் தொடர்பாக புகார்கள் வருகிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சைபர் கிரைம் போலீசார் இந்த ஆண்டு 27 வழக்குகளில் 21 குற்ற வாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஆன்லைனில் பணம் கொடுத்து ஏமாந்த 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இன்டர் நெட் மற்றும் ஆன் லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், நான் ஜி பே மூலமாக உறவினர் ஒருவருக்கு பணம் அனுப்பி னேன். ஆனால் ஜி பேயில் ஒரு எண்ணை தவறுதலாக மாற்றி அனுப்பியதால் பணம் வேறு நபருக்கு சென்று விட்டது. இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் அந்த பணத்தை தருவதற்கு காலதாமதப்படுத்தினார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். புகார் அளித்த ஒரு வாரத்தில் போலீசார் எனது பணத்தை மீட்டுத் தந்து விட்டனர் என்றார் .

    மேலும் ஒருவர் கூறுகை யில், எனது மகளின் வேலைக்காக பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்தோம். பணம் அனுப்பிய பிறகு அந்த நபர் எங்களுடனான தொடர்பை துண்டித்தார். வேலையும் தரவில்லை. பணத்தையும் தரவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தோம்.

    போலீசார் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தந்துள்ளனர். துரித நடவ டிக்கை எடுத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • அரசு அனுமதியுடன் மதுபானங்கள் விற்பனை செய்ய 112 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றன
    • ஏலம் விடப்பட்டு பணம் செலுத்தாத 30 பார்களும், ஏலத்திற்கு போகாத 57 பார்களும், ஆக மொத்தம் 87 பார்களில் 10 பார்களுக்கு இடவசதி இல்லாததால் ஏலம் விடப்படவில்லை.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் மதுபானங்கள் விற்பனை செய்ய 112 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மார்க் கடையின் அருகில் மது அருந்துவதற்கு இக்கடைகளில் பார் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 112 கடைகளுக்குரிய பார்கள் ஏலம் விடப்பட்டதில் 55 கடைகளுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது. இந்த 55 கடைகளில் 25 கடைகளுக்கு மட்டுமே அரசுக்கு செலுத்த வேண்டிய ஏலத்தொகையினை ஏல தாரர்கள் கட்டியுள்ளனர். மீதமுள்ள 30 பார்களுக்கு ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையினை கட்டவில்லை.

    இந்நிலையில் ஏலம் விடப்பட்டு பணம் செலுத்தாத 30 பார்களும், ஏலத்திற்கு போகாத 57 பார்களும், ஆக மொத்தம் 87 பார்களில் 10 பார்களுக்கு இடவசதி இல்லாததால் ஏலம் விடப்படவில்லை.

    மீதமுள்ள 77 பார்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டதில் 11 கடைகளுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டு அரசுக்கு செலுத்த வேண்டிய ஏலத்தொகை ஏலதாரர்களால் செலுத்தப்பட்டு ள்ளது.

    மீதமுள்ள ஏலம் எடுக்கப்படாத 66 பார்களில் சட்டத்திற்கு விரோத மாக முறை கேடாக பார் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் அரசுக்கு வர வேண்டிய 66 பார்களுக்கான வருவாய் தொகை கிடைக்காமல் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு பலகோடி ரூபாய் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசியலில் உள்ள சிலரின் அதிகார தூண்டுதலால் சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடை க்காமல் செய்து, தனிநபர்கள் அதனைப் பெற்று பயன டைந்து வருகிறார்கள். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மகனின் கல்விக்காக வங்கியிலிருந்து கடன் பெற்று பெண் வைத்திருந்த ரூ.9.97 லட்சம் ரூபாயை, வங்கி மானேஜர் பேசுவதாக போனில் கூறி ஏ.டி.எம் கார்டு விபரங்களை வாங்கி 28 முறை சிறிது சிறிதாக மர்ம நபர் சுருட்டியுள்ளான்.
    மும்பை:

    வங்கிக்கணக்கு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட விபரங்களை யாருக்கும் தெரிவிக்க கூடாது என வங்கிகள் காட்டுகத்தலாக கூறி வருகிறது. போனில் மானேஜரோ அல்லது வங்கி அதிகாரிகளோ பேச மாட்டார்கள் எனவும் வங்கிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. அதையும், மீறி பலர் மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழந்துள்ளனர். 

    மும்பையில் உள்ள நேருல் செக்டார் பகுதியில் வசித்து வரும் தஸ்னிம் மோதக் என்பவர், தனது மகனின் படிப்புக்காக வங்கி ஒன்றில் ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அந்த ரூபாயை தனது வங்கிக்கணக்கில் அவர் சேமித்து வைத்துள்ளார். கடந்த மாதம் வங்கி மானேஜர் பேசுவதாக போனில் தொடர்பு கொண்ட ஆசாமி, உங்களது ஏடிஎம் கார்டு செயலிழந்து விட்டது. மீண்டும் அதனை சரிசெய்ய பாஸ்வேர்டு, கார்டு எண் ஆகியவற்றை கூறவும் என பேசி வாங்கியுள்ளார்.

    கார்டு விபரங்களை பெற்றாலும், அந்த ஆசாமியால் பணத்தை சுருட்ட முடியவில்லை. ஒன் டைம் பாஸ்வேர்டு தஸ்னிம் மோதக்கின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக வரும் என்பதால், அந்த ஒன் டைம் பாஸ்வேர்ட் இல்லாமல் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியவில்லை.

    இதனை அடுத்து, மோதக்கை தொடர்பு கொண்ட அந்த ஆசாமி ஒன் டைம் பாஸ்வேர்டை பெற்றுள்ளார். ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 28 தடவை இப்படி போனில் பேசி ஒன் டைம் பாஸ்வேர்டை மோதக்கிடம் இருந்து பெற்று கொஞ்சம் கொஞ்சமாக ரூ.9.97 லட்சம் பணத்தை அந்த ஆசாமி சுருட்டியுள்ளார்.

    ஒவ்வொரு முறையும் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யும் போதும் மோதக்கின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. ஆனால், அவர் அதனை கண்டு கொள்ளவில்லை. வங்கிக்கு சென்று பாஸ்புக்கை பிரிண்ட் செய்யும் போது தான் கணக்கில் இருந்த ரூபாய் கரைந்து போனது அவருக்கு தெரிய வந்துள்ளது.

    இதனை அடுத்து, போலீசுக்கு சென்று மோதக் புகார் அளிக்க, போலீசார் அந்த ஆசாமியை தேடி வருகின்றனர். 28 முறை பணம் போயுள்ளதாக குறுந்தகவல் வந்தும் மோதக் ஏன் சந்தேகம் அடையாமல், ஒவ்வொரு முறையும் குற்றவாளிக்கு ஒன் டைம் பாஸ்வேர்டை கூறியுள்ளது ஏன்? என குழப்பமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ×