என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crypto Scam கிரிப்டோகரன்சி"

    • கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான காயின் டிசிஎக்ஸ் தளத்தை ஹேக்கர்கள் முடக்கினர்.
    • காயின் டிசிஎக்ஸ் தளத்தில் இருந்து ரூ.379 கோடி திருட்டு போனது.

    இந்தியாவின் முன்னணி கிரிப்டோ பண பரிவர்த்தனை தளமாக காயின் டி.சி.எக்ஸ் உள்ளது. இதில் கோடிக்கணக்கானவர்கள் கணக்கு தொடங்கி டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் காயின் டி.சி.எக்ஸ் தளம் கடந்த 19-ந்தேதி இரவு திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதனால் இந்த தளத்தில் இருந்து ரூ.379 கோடி திருட்டு போனது. இதில் முதலீட்டாளர்கள் கணக்கில் இருந்து எந்த பணமும் திருட்டு போகவில்லை எனவும், கருவூல கணக்கில் இருந்தே இழப்பு ஏற்பட்டுள்ளதாக காயின் டி.சி.எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுமித் குப்தா தெரிவித்தார்.

    ஹேக் செய்யப்பட்ட பணத்தை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் அந்த நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டது. மேலும் பெங்களூரு ஒயிட் பீல்டு சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் குறித்து நிறுவனத்தின் உள் பாதுகாப்பு குழு, ஆபரேஷன் குழு, சைபர் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்ததில் காயின் டி.சி.எக்ஸ் நிறுவனத்தின் பெங்களூரு மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றி வரும் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த கார்மெலராம் பகுதியை சேர்ந்த ராகுல் அகர்வால் (வயது 30) என்பவர் உள்நுழைவு சான்றுகளை திருடி, கணினி மூலம் பணத்தை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து பெங்களூரு நகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் அகர்வாலை கைது செய்தனர். கிரிப்டோ வர்த்தக தளமான காயின் டி.சி.எக்ஸ் நடத்தும் நெப்லியோ டெக்னாலஜிஸ் துணைத் தலைவர் ஹர்தீப் சிங் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து துணைத் தலைவர் ஹர்தீப் சிங் கூறுகையில், "ராகுல் நிறுவனத்தின் நிரந்தரப் பணியில் இருந்தார். அலுவலக வேலைக்காக மட்டுமே அவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி அதிகாலை 2.37 மணிக்கு அந்த கணினியை பயன்படுத்தி ராகுல் அகர்வால் கணினியை ஹேக் செய்து பணத்தை திருடினார். பின்னர் காலை 9.40 மணியளவில், ரூ.379 கோடி திருடி 6 கணக்குகளுக்கு மாற்றினார். இதன் மூலம் நாங்கள் அவரை கண்டுபிடித்தோம்" என்று தெரிவித்தார்.

    • கிரிப்டோகரன்சி கடும் சரிவை சந்தித்ததால் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • போலியான இணையதளங்களை உருவாக்கி, அறிமுக சலுகை வழங்கி முதலீட்டாளர்களை நம்ப வைக்கின்றனர்.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் டிஜிட்டல் நாணயமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்தவண்ணம் இருந்தது. குறிப்பாக கிரிப்டோகரன்சியானது இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக கிரிப்டோகரன்சி கடும் சரிவை சந்தித்தது. இதனால் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் பெரும் இழப்பை சந்தித்துவருகின்றனர்.

    இது ஒருபுறமிருக்க போலியான நிறுவனங்கள் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறு போலி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் காரணமாக இந்தியர்கள் ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுடுசெக் தெரிவித்துள்ளது.

    முறையான அனுமதி பெற்ற கிரிப்டோகரன்சி வர்த்தக தளங்களைப் போன்று போலியான இணையதளங்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலை பரப்புகின்றனர். குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர். இதனை நம்பி முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மொத்தமாக பணத்தை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போலி கிரிப்டோ இணையதளங்கள் மூலம் மோசடி செய்பவர்கள், பயனர்களை அணுகி, அவர்களை வரவேற்கும் வகையில் அறிமுக சலுகையாக 100 டாலர் கிரெடிட் நோட்டை வழங்குகிறார்கள். இத்தகைய சலுகைகள் பயனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக வரவு வைக்கப்படுகின்றன. இதைப் பார்த்ததும் அவர்களின் வலையில் விழுந்த பயனர்கள், தங்களிடம் உள்ள மொத்த பணத்தையும் அந்த இணையதளத்தில் செலுத்துகிறார்கள். அதிக முதலீடு கிடைத்தும், சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களின் பணத்தை மோசடியாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், என கிளவுட்செக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கிளவுட்செக் தலைமை நிர்வாகி ராகுல் சசி கூறுகையில், பயனர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்த பிறகு, மோசடி இணையதளத்தின் அனைத்து வர்த்தகம் மற்றும் திரும்பப் பெறும் வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன, என்றார்.

    ×