search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "michong storm"

    • ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணெய் கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்ட மிச்சாங் புயல், எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளது என்றே கூறலாம். தாளங்குப்பம், நெட்டுக் குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சின்னக் குப்பம், முகத்துவாரம் குப்பம், சடையங் குப்பம், சிலிகர் பாதை கிராமம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்களும் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இனி என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 படகுகளும், வலைகளும் எண்ணை கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 797 பைபர் படகுகள் மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி படகுகளை சீரமைத்து பயன்படுத்துவதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால் அரசின் நிவாரண உதவிக்காக மீனவர்கள் காத்திருக்கிறார்கள். எண்ணை கழிவுகளில் மூழ்கிய வலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருப்பதாகவும், எனவே மீன்பிடி வலைகளை புதிதாகவே வாங்க வேண்டி உள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், வலைகளுக்கு ரூ.5 ஆயிரம் என 15 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேத மதிப்புகளை கணக்கிட்டு மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எண்ணை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த போதிலும் நேற்று முதலே அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இன்று 2-வது நாளாக படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணை கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்களின் மூலமாக நேற்று தொடங்க இருந்த பணிகள் நடைபெற வில்லை. இன்று அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணை கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து எண்ணைக் கழிவுகள் முழுவதையும் அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதற்கு முன்னரே எண்ணை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நோய்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
    • மிச்சாங் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மழைநீர் வெளியேற்றுதல், உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல், நோய்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, எழும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 99-வது வார்டு, மெக் நிக்கல் சாலை, சர்வோதயா காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும், புதிய பூபதி நகர், ஓசங்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2,000 குடும்பங்களுக்கும், திருநங்கைகள் காப்பகத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 59-வது வார்டை சேர்ந்த டி.என்பி.எஸ்.சி சாலை, நாராயணப்பா சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, தேவராஜ் முதலியார் தெரு, மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மிச்சாங் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா ராஜன், தயாநிதி மாறன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் இளம்சுருதி, ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுந்தர்ராஜன், பரிமளம் மற்றும் முரளி, ராஜசேகர், ஜெகதீஷ், பிரபாகரன், வேலு சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.
    • இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    கோவை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது. இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    இன்று காலை 6 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரெயில் (எண் 20644) ரத்து செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12680) ரத்தானது.

    இதேபோல சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675), காலை 7.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675) ரத்து செய்யப்பட்டன.

    இதுதவிர மிச்சாங் புயல் காரணமாக கோவை வழியாக இயக்கப்படும் 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக கோவையில் இருந்து வருகிற 6-ந் தேதி பரௌனி புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 03358), கோட்டயத்தில் இருந்து இன்று நரசாபூர் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07120), கொல்லத்தில் இருந்து நாளை செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07130), கொச்சுவேலியில் இருந்து வருகிற 6-ந் தேதி கோரக்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்12512), திருவனந்தபுரத்தில் இருந்து இன்று புதுடெல்லி புறப்பட்டுச் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12625), புதுடெல்லியில் இருந்து நாளை மற்றும் 6-ந் தேதிகளில் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12626) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    மேலும் ஷாலிமரில் இருந்து வருகிற 6-ந் தேதி நாகர்கோவில் புறப்பட்டு வரும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12660), தன்பாத்தில் இருந்து இன்று ஆலப்புழா புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13351), ஆலப்புழாவில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் தன்பாத் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13352), செகந்திராபாத்தில் இருந்து இன்றும், நாளையும் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17230), திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 5,6,7-ந் தேதிகளில் செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17229), எர்ணாகுளத்தில் இருந்து நாளை டாடா நகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 18190) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் திப்ருகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22503) ரத்து செய்யப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து நாளை நெல்லை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22619), எர்ணாகுளத்தில் இருந்து இன்று பாட்னா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22643), பாட்னாவில் இருந்து வருகிற 7-ந் தேதி எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22644), கொச்சுவேலியில் இருந்து இன்று கோர்பா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22648), கோர்பாவில் இருந்து வருகிற 6-ந் தேதி கொச்சுவேலி புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22647), பாட்னாவில் இருந்து நாளை எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22670), பிலாஸ்பூரில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22815), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22816), ஹதியாவில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22837), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி ஹதியா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22838) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
    • புதுவையிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை, பைபாஸ் வழித்தடங்களில் இயக்கப்பட்ட புதுவை அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புதுவையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புயல் காரணமாக புதுவையில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட அதிக உயரத்தில் அலைகள் எழுந்தது. புதுவையில் 15 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    காலாப்பட்டு முதல் புதுக்குப்பம் வரை உள்ள மீனவர்களின் விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரங்கள் உட்பட ஆயிரக்கணக்கான படகுகள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புதுவையிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை, பைபாஸ் வழித்தடங்களில் இயக்கப்பட்ட புதுவை அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பஸ்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயலின் காரணமாக மிகவும் மோசமான வானிலை நிலவுகிறது என்பதை எச்சரிக்கும் வகையில் புதுவை துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • 450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

    சென்னை:

    கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பஸ் சேவை முற்றிலும் பாதித்தன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 620 வழித் தடங்களில் பஸ்கள் இயக்கப்படும்.

    ஆனால் இடைவிடாது பெய்த கனமழையால் சுரங்கப் பாதை, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பஸ்களை இயக்க முடியவில்லை.

    450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன. 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அனைத்து டெப்போகளிலும் பஸ்களை எடுக்க முடியவில்லை.

    மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வர முடியவில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும்பாலான போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது.

    பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது. மக்கள் வீடுகளில் முடங்கியதால் பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது.

    பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. குறைவான அளவில் இயக்கப்பட்ட பஸ்களிலும் மிக குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

    ×