search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செண்டி பூக்கள் அறுவடை செய்யும் பணி
    X

    செண்டி பூக்கள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள்.

    செண்டி பூக்கள் அறுவடை செய்யும் பணி

    • ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம்.
    • பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக பல்வேறு பகுதிகளில் செண்டி, ரோஜா பூ ஆகியவை பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் செம்மண் பகுதியான தஞ்சாவூர் அடுத்த திருக்கானூர்பட்டியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சென்டி பூ சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து விவசாயி கள் கூறுகையில், 45 நாட்களில் செடி வைத்து பூ பூத்து விடும். பனி காலம் தொடங்குவதற்கு முன்பே பூ அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கியும் விற்பனை என்பது மந்தமாகவே உள்ளது.

    ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம். ஒரு கிலோ பூவின் விலை ரூ.60-க்கு விற்பனை செய்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.

    ஆனால் பூவின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு பூ சாகுபடியை மேம்படுத்த வங்கி கடன், மானிய விலையில் உரம், விதை ஆகியவை வழங்க வேண்டும்.

    சொட்டு நீர் குழாய் உள்ளிட்ட கருவிகளை மானிய விலையில் வாங்கினால் தங்களுக்கு மேலும் அதிக மகசூல் கிடைக்கும். இதனால் கூடுதல் லாபம் பெற முடியும் என்றனர்.

    Next Story
    ×