search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டக்டர்கள்"

    • மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
    • சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 117 டிரைவர்கள், 117 கண்டக்டர்கள் பணிக்கு அனுப்ப விரும்பும் நிறுவனங்கள் இ-டெண்டரில் விண்ணப்பிக்கலாம்

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களிலும் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பஸ்களை இயக்குவதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 பணியிடங்களையும் (டிரைவர், கண்டக்டர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோர்), கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் 122 டிரைவர் பணியிடங்களையும் நிரப்ப அரசு அனுமதி அளித்தது.

    இதையடுத்து, கும்பகோணம் (174), சேலம் (254), கோவை (60), மதுரை (136), திருநெல்வேலி (188) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 812 டிரைவர், கண்டக்டர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோருக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மேலாண் இயக்குனர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதேநேரம், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகமானது ஒப்பந்தம் மூலம் 234 டிரைவர், கண்டக்டர்களை தங்களுக்கு வழங்குவதற்கு தகுதியான தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான இ-டெண்டர் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, தொழிலாளர் சட்டம் 1970-ன் கீழ் உரிமம் பெற்று ஊழியர்களுக்கான மாநில காப்பீட்டு நிறுவனம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், சரக்கு மற்றும் சேவை வரி நிறுவனங்களில் பதிவு பெற்று 250-க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் உரிமம் கொண்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தி அரசு, தனியார், தன்னாட்சி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி அதில் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிறுவனங்கள் இ-டெண்டரில் பங்கு கொள்ளலாம்.

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 117 டிரைவர்கள், 117 கண்டக்டர்கள் பணிக்கு அனுப்ப விரும்பும் நிறுவனங்கள் இ-டெண்டரில் 6-ந் தேதி முதல் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://tntenders.gov.in/nicgep/app என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் 20 கண்டக்டர்களுக்கு மெமோ கொடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
    • ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக வணிக பிரிவு மேலாளர் செல்வகுமார் தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் கடந்த 12-ந்தேதி காலை 5.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. மழை நீர் ஒழுகுகிறது. டிஜிட்டல் போர் பிட்டிங் செய்யவில்லை. வழிதட எண், ஊர் பெயர் கையால் எழுதப்பட்டுள்ளது உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 20 பஸ்களின் கண்டக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.

    அதிகாரிகளின் இந்த நடவடிக்கை டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
    • செல்போனில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்கவும் வேண்டும்.

    சென்னை :

    தமிழகத்தில் அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கண்டக்டர்கள் பயணச்சீட்டு வழங்கிவிட்டு முன்புற இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் நிகழ்வுகளை பார்த்தவண்ணம் இருப்பது அல்லது தூங்கியபடி இருப்பதாக பயணிகளிடம் இருந்தும், பயிற்சிக்கு வரும் டிரைவர்களிடம் இருந்தும் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    இச்செயல் மிகவும் வருந்தத்தக்கதாகும். எனவே நமது கண்டக்டர்கள் பகல் பணியின்போது பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிவிட்டு பயணிகள் மற்றும் தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பஸ்களின் இரு படிக்கட்டுகளும் தங்களது பார்வையின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பஸ்சின் பின்பக்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்து பணிபுரிய வேண்டும்.

    இரவுநேர நீண்டதூர வழித்தடங்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிவிட்டு பஸ்சின் முன்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து டிரைவர் விழிப்புணர்வுடன் பஸ்சை இயக்கும்வண்ணம் நடந்துகொள்ளவும், செல்போனில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்கவும் வேண்டும்.

    பஸ் வழித்தட பரிசோதனையின்போது இந்தக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும். இதுதொடர்பாக அனைத்து கிளை மேலாளர்களும் கண்டக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு போக்குவரத்துத்துறை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி உள்ளது.

    ×