search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal Transport Corporation"

    • 60 பஸ்களை 642 நடைகள் கிளாம்பாக்கத்துக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஆவடி, கோயம்பேடு, மாதவரம், திருப்போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து 12 பஸ்கள் புதிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    சென்னை, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஏக்கர் 67 பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பஸ் நிலையம் மற்றும் வெளியூர் பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பஸ்களை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குப் பொது மக்கள் எளிதாகச் செல்ல வசதியாக மாநகரப் பஸ்களை இயக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அதன்படி வண்டலூர், தாம்பரம் செல்லும் பஸ்களை நீட்டிக்கவும், புதிதாக சில வழித்தடங்களில் சேவைகளை தொடங்கவும் மாநகரபோக்கு வரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை 60 பஸ்களை 642 நடைகள் கிளாம்பாக்கத்துக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆவடி, கோயம்பேடு, மாதவரம், திருப்போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து 12 பஸ்கள் புதிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "தற்போது சென்னையின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கத்தை அடையும் வகையில் 642 நடைகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடர்பாகத் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1,000 நடைகள் இயக்குமாறு அறிவுறுத்தல்கள் பெறப்பட்டு உள்ளனர்" என்றனர்.

    ×