search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest demonstration"

    • ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது சிவில் சட்டம் என்ற பெயரால் மதத்தை வைத்து மக்களை பிளவு படுத்துவது, மணிப்பூர், ஹரியானா கலவரத்தை தூண்டுவது, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை பழி வாங்குவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் தலைவர் ஹாஜி வருசை முகமது தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜகான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழ உறுப்பினர் ராஜன், செந்தில்வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருவேல், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட மகளிரணி தலைவர் ராமலட்சுமி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அற்புத குமார், மனித நேய மக்கள் கட்சி இப்ராஹீம் மக்கள் ஒற்றுமை மேடை வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகரம் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வக்கீல் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், மாநில துணை பொது செயலாளர் திருமார்பன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    மூங்கில்துறைப்பட்டு பகுதியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆதிதிராவிடர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலு, பொன்னிவளவன், அறிவுக்கரசு, திராவிட சந்திரன், தொல்காப்பியன், கிள்ளிவளவன், குமார், வெங்கடேசன், கண்ணன், சக்திவேல், ராதிகா, பழனியம்மாள், காந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.
    • 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கினர்

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கிடவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் மாவட்ட த்தலைவர்கள் வெங்கடேசன், சேதுராமன்,நகர தலைவர் பிரேம்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் க.அகோரம் கண்டன உரையாற்றினார். பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்க வலியுறுத்தி தேங்காயை சாலையில் கொட்டி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து லாரியில் 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி‌.ஐ.டி.யு சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி கடலூர் ஜவான் பவன் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பாபு, ஸ்டாலின், ஆள வந்தார், ராஜேஷ், கண்ணன், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.

    தமிழக அரசு சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தியதை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவாரூர்:

    பேரளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கோட்டூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.

    நன்னிலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் வாஞ்சி தலைமை தாங்கினார். இதைபோல் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் சுதர்சனம் தலைமை தாங்கினார்.

    திருத்துறைப்பூண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். குடவாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்ரவேல் தலைமை தாங்கினார். கொரடாச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கேசவராஜ், முத்துப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மன்னார்குடியில் ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமையில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    இதைபோல திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் மாரியப்பன் தலைமையிலும், நீடாமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழ் ஆர்வன் தலைமையிலும், வலங்கைமான் தாலுக்கா அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் தங்கமுத்து தலைமையிலும் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொள்கின்றனர். #tamilnews
    ×